முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரடிக்கல் கிராமத்தில் 278வது ஆண்டு ஜல்லிக்கட்டு விழா

புதன்கிழமை, 29 மார்ச் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-திருமங்கலம் அருகே கரடிக்கல் கிராமத்திலுள்ள அருள்மிகு ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெறவுள்ள 278வது ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவினை நடத்துவது தொடர்பாக காலரிகள் அமைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதனிடையே ஜல்லிக்கட்டில் பங்கேற்கவுள்ள காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான பதிவு இன்று முதல் துவங்குகிறது.

மதுரை மாவட்டம்,திருமங்கலம் தாலுகாவில் உள்ள கரடிக்கல் கிராமத்திலுள்ள ஸ்ரீசுந்தரராஜபெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 2-ம் தேதி 278-வது ஆண்டு உலகப்புகழ் பெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு விழா நடைபெறவுள்ளது.இதற்காக தற்போது கரடிக்கல் கிராமத்தில் சிறப்பாக ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை கரடிக்கல் நான்கு பங்காளிகள் மற்றும் கிராமப் பொதுமக்கள் கோலாகலமாக செய்து வருகின்றனர்.இதற்காக கரடிக்கல் கிராமத்திலுள்ள மைதானத்தில் காளைகளை நிழலில் வரிசையாக நிறுத்தி வைத்திருக்கும் இடம்,தென்னை மரத்தினால் ஆன பலம்மிகுந்த வாடிவாசல்,மாவட்ட நிர்வாகம்,முக்கிய பிரமுகர்கள்,பொதுமக்கள்,பார்வையாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு என்று தனித்தனி காலரிகள்,வலையுடன் கூடிய இரட்டை வேலி பாதுகாப்பு,குடிநீர்வசதி,காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள்  அனைத்தும் மின்னல் வேகத்தில் தற்போது செய்யப்பட்டு வருகிறது.

அதே சமயம் இந்த ஜல்லிக்கட்டு விழாவில் 700க்கும் மேற்பட்ட காளைகளும் அவற்றை அடக்கிட 500க்கும் மேற்பட்ட காளையர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் காளைகளுக்கும், காளைகளை அடக்கி வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும் கிடைமாட்டு காளங்கன்றுகள், தங்கநாணயம்,பீரோ,கட்டில்,அண்டா,பானை,சைக்கிள்,குக்கர்,அயன்பாக்ஸ்,மின்விசிறி,மிக்சி,கிரைண்டர்,பிரிட்ஜ்,தேக்குமர பர்னிச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பரிசுகள் வழங்கப்படவுள்ளது.மேலும் ஜல்லிக்கட்டு விழாவிற்கு முதல்நாள்(1ம்தேதி) இரவு 10மணிக்கு கோவில் முன்பாக அமைந்துள்ள கலையரங்கத்தில் கரடிக்கல் கிராம கமிட்டியார்கள் மற்றும் கிராமப் பொதுமக்கள் சார்பில் பாரம்பரியமிக்க ஸ்ரீவள்ளிதிருமணம் நாடகம் நடைபெற உள்ளது.ஜல்லிக்கட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு இருப்பினும் பூர்வீகமான ஐதீகத்தின்படி கரடிக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கரடிக்கல் கிராமம் அருள்மிகு ஸ்ரீசுந்தரராஜபெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் ஏப்ரல் 2ம்தேதி 278வது ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவை நடத்துவதற்காக தீவிரமாக நடைபெற்று வரும் பணிகளை கரடிக்கல் ஜல்லிக்கட்டு விழா கமிட்டி நிர்வாகிகள் ஆண்டிச்சாமி,மொக்கராஜ்,ஆண்டிச்சாமி,மணிமுத்து ஆகியோரும் கிராமமக்களும் நேற்று காலை நேரில் பார்வையிட்டனர்.மேலும் ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்ளும் காளைகள் மற்றும் காளைகளை அடக்கிடும் மாடுபிடி வீரர்களுக்கான பதிவு இன்று முதல் தொடங்கி 1ம் தேதி வரை நடைபெறுவதாகவும்,மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி ஜல்லிக்கட்டு விழாவிற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் மற்றும் வசதிகள் செய்யப்பட இருப்பதாகவும் விழாகமிட்டி நிர்வாகிகள் தெரிவித்தனர்.பல்வேறு தடைகளை தாண்டி 12ஆண்டுகளுக்கு பிறகு கரடிக்கல் கிராமத்தில் வரும் 2ம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவதை முன்னிட்டு கிராமம் முழுவதும் தோரணங்கள்,பேனர்கள்,வரவேற்பு பதாகைகள் என விழாக்கோலம் பூண்டிருப்பதுடன் கிராமமக்கள் மகிழச்சியில் திளைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago