முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேசில் சிறையில் கைதிகள் இடையே நடந்த பயங்கர மோதலில் 5 பேர் பலி

வியாழக்கிழமை, 13 ஏப்ரல் 2017      உலகம்
Image Unavailable

பிரேசிலியா  - மத்திய மேற்கு மாகாணமான மாட்டோ கிராஸ்சோ மாகாணத்தில் உள்ள சிறையில் இரு தாதா கும்பல்களிடையே கடும் மோதல் ஏற்பட்டதில் 5 பேர் பலியானார்கள்.

அடிக்கடி மோதல்
பிரேசில் நாட்டில் உள்ள சிறைகளில் அளவுக்கு அதிகமாக கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்களிடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்த மோதல்கள் காரணமாக உயிர்ப்பலிகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு கைதிகள் இடையே நடந்த மோதல்களில் பல கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு
இந்த நிலையில் அங்கு மத்திய மேற்கு மாகாணமான மாட்டோ கிராஸ்சோ மாகாணத்தில் உள்ள சிறையில் நேற்று முன் தினம் இரு தாதா கும்பல்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதைக் கண்ட ஒரு கைதி மாரடைப்பால் உயிரிழந்தார். 17 கைதிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பாதுகாப்பு அதிகரிப்பு
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த சிறையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் பயன்படுத்திய 2 துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றினர். அங்கு அமைதியை நிலைநாட்ட சிறைத்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago