எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி நாமக்கல் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்றுவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (19.04.2017) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கலெக்டர் மு.ஆசியா மரியம் தலைமை வகித்து பேசும் போது தெரிவித்ததாவது, சீமைக்கருவேல மரங்களால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகின்றது. பூமிக்கடியில் 75 அடி ஆழம் வரை உள்ள நீரையும் சீமைக்கருவேல மரங்கள் உறிஞ்சி விடுகிறது. இந்த மரத்தின் விதைகள், காய்கள் எதுவும் உபயோகப்படுவதில்லை. எதற்குமே பயன்படாத இயற்கை வளத்தை பாதிக்கின்ற சீமைக்கருவேல மரங்களை அகற்றிட வேண்டுமென மாண்பமை சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிப்பகுதிகள், நகராட்சிப்பகுதிகள், பொதுப்பணித்துறை, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத்துறை), நெடுஞ்சாலைத்துறை மற்றும் இதர இடங்களிலுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகின்றது. மேலும் இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் துண்டுப்பிரசுரங்கள், ஆட்டோக்கள் மூலம் விளம்பரங்கள், தண்டோரா, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களும் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு தங்களது முழு பங்களிப்பை அளித்திட வேண்டுமென தொடர்ந்து கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட குளங்களில் 1328.230 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 547.500 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. ஊராட்சிப்பகுதிகளில் உள்ள குளங்களில் 1409.120 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 683.380 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. பொது ஃ புறம்போக்கு இடங்களில் 481.370 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 337.831 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. தனியார் இடங்களில் 738.592 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 339.490 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன.மேலும் பொதுப்பணிப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஏரிகளில் 3618.000 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 652.700 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஆறுகளில் 1437.000 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 190.140 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் 110.900 கி.மீட்டர் நீளத்தில் இருந்த சீமைக்கருவேல மரங்களில் இதுவரை 104.000 கி.மீட்டர் நீளத்திலிருந்த சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் 41.700 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் இதுவரை 4.560 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. நகராட்சிப்பகுதிகளில் 148.090 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் இதுவரை 131.650 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன. பேரூராட்சிப் பகுதிகளில் 118.060 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் இதுவரை 71.830 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளன என்றார்.இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வி.சி.மாலதி, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் இரா.பிரியதர்சினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் எஸ்.பாலகிருஷ்ணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) க.சந்திரசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) லீலாகுமார் மற்றும் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை உட்பட பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்6 days 18 hours ago |
மினி பான் கேக்1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-05-2024.
10 May 2024 -
குஜராத்தில் சர்ச்சைக்குள்ளான வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடக்கிறது
10 May 2024ஆமதாபாத் : குஜராத்தில் நேரலை ஒளிபரப்பால் சர்ச்சைக்குள்ளான வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்: ஜெயக்குமார் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் கத்தி மீட்பு
10 May 2024நெல்லை : காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் இறந்து கிடந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து கத்தி ஒன்றை தடயவியல் நிபுணர்கள் மீட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
-
கலவரத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது: இம்ரான் கான் அறிவிப்பு
10 May 2024இஸ்லாமாபாத் : கடந்த ஆண்டு மே 9-ம் தேதி நடந்த கலவர சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று இம்ரான்கான் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
23 வகை நாய்களுக்கு தடை விதித்த உத்தரவு வாபஸ் : தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அறிவிப்பு
10 May 2024சென்னை : :23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை தமிழக கால்நடை பராமரிப்பு துறை திரும்ப பெற்றுள்ளது.
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
10 May 2024சென்னை : கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு துணையாக அமையட்டும் என்று எஸ்.எஸ்.எல்.சி.
-
தெலுங்கானாவில் அரசு பஸ்சில் பயணம் செய்த ராகுல் காந்தி
10 May 2024ஐதராபாத் : தெலுங்கானாவில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி அங்கு அரசு பஸ்சில் பயணம் செய்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள திட்டங்கள் குறித்து எடுத்து க
-
இந்திய மக்களவை தேர்தலில் நாங்கள் தலையிடவில்லை : ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு
10 May 2024வாஷிங்டன் : நாங்கள் இந்திய மக்களவைத் தேர்தலில் தலையிடவில்லை என்று ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற இரண்டு மாணவிகள்
10 May 2024கமுதி : பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 500-க்கு 499 மதிப்பென் எடுத்து கமுதி மற்றும் திண்டுக்கல் மாணவிகள் 2 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.
-
அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே வள்ளலார் சர்வதேச மையம் : உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி
10 May 2024சென்னை : வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே கட்டப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
-
சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புதிய வழக்குப்பதிவு
10 May 2024சென்னை : கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அவதூறு பரப்பியதாக சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
யானை வழித்தட வரைவு அறிக்கை: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
10 May 2024சென்னை : யானை வழித்தட வரைவு அறிக்கையை செயல்படுத்த முனைப்பு காட்ட கூடாது என்று அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு
10 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் : நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது சுப்ரீம் கோர்ட்
10 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்.
-
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 89.14 சதவீதம் தேர்ச்சி
10 May 2024புதுச்சேரி : 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் புதுச்சேரியில் 89.14 சதவீதம் தேர்ச்சி பேர் பெற்றுள்ளனர்.
-
வரும் திங்கட்கிழமை முதல் அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை துவக்கம்
10 May 2024சென்னை : வரும் திங்கட்கிழமை முதல் அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்குகிறது.
-
செனகல் நாட்டில் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்த விமானம்
10 May 2024டக்கார் : செனகல் நாட்டில் ஓடுபாதையில் இருந்து திடீரென தவறி விழுந்த விமான விபத்தில் 11 பேருக்கு காயம் ஏற்பட்டது.
-
காலக்கெடுவுக்கு முன்பே இந்திய வீரர்கள் வெளியேறி விட்டனர் : மாலத்தீவு அரசு தகவல்
10 May 2024மாலே : கெடு முடியும் முன்பே மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டு இருந்த இந்திய ராணுவ படைகள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டதாக அதிபர் முகமது முய்சுவின் செய்தி தொடர்பாளர் தெரிவித
-
பாராளுமன்ற 4-ம் கட்ட தேர்தல்: 10 மாநிலங்களில் இன்று மாலை ஓய்கிறது பிரசாரம் : இறுதிக்கட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் மும்மூரம்
10 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற 4-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்களில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 800 கனஅடியாக அதிகரிப்பு
10 May 2024சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து 800 கனஅடியாக அதிகரித்தது.
-
அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை ஒரே நாளில் 3-வது முறை அதிகரித்தது
10 May 2024சென்னை : அட்சய திருதியை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் தங்கம் விலை 3-வது முறை அதிகரித்து விற்பனையானது.
-
பாகிஸ்தான் குறித்த மணிசங்கர் ஐயரின் பேச்சு: உடன்பாடு இல்லை என காங்கிரஸ் கட்சி விளக்கம்
10 May 2024புதுடெல்லி : முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் ஐயர், பாகிஸ்தான் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி : அரியலூர் மாவட்டம் முதலிடம் - தமிழ் பாடத்தில் 8 பேர் 100-க்கு 100
10 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 91.55 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கியது : கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
10 May 2024ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேற்று மலர் கண்காட்சி தொடங்கியதை தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அதனை கண்டு ரசித்தனர்.
-
சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
10 May 2024சென்னை : திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஏலரப்பட்டி பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற