எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று முன்தினம் தொடங்கி, 28-ம் தேதி வரை நீடிக்கிறது. இந்த காலகட்டத்தில் இயல்பாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும். வாட்டி வதைக்கும் இந்த வெயிலில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி என்பது குறித்து மருத்துவர் பாலாஜி சில யோசனைகளை வழங்கியுள்ளார்.
காற்றோட்டமான ஆடைகள், நீர்ச்சத்து நிறைந்த உணவு, சரியான நேரத்தில் விளையாட்டு என பட்டியலிட்டுள்ளார் குழந்தைகள் நல மருத்துவர் பாலாஜி. வாட்டும் வெயிலும் இயற்கையே. இயற்கையை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்பது நியதி. ஆனால், அதன் சீற்றத்திலிருந்து தற்காத்துக்கொள்ள முடியும். அந்த வகையில் வெயில் காலங்களில் குழந்தைகளுக்கு நோய் ஏற்படாமல் நம்மால் காப்பாற்ற முடியும்.
பருத்தி ஆடைகள் உகந்தது : பள்ளிக்கு அன்றாடம் சீருடையில் செல்லும் குழந்தைகளுக்கு விதவிதமான ஆடைகளை அணிவித்துப் பார்க்க ஆசையிருக்கலாம். அதற்காக பட்டாடைகளையும் வெல்வெட் ஆடைகளையும் வெயில் காலத்தில் உடுத்தக்கூடாது. பருத்தி ஆடைகளே இந்த வெயிலுக்கு உகந்தது. அதுவும் இறுக்கமாக இல்லாமல் சற்றே தளர்வாக ஆடைகளை அணிவிக்க வேண்டும். எண்ணை பொரித்த உணவு கூடாது.
எண்ணெயில் பொரித்த காரமான உணவு வகைகள் கூடாது. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், மோர், பழச்சாறு, பழங்கள் ஏற்புடையது. கூழ் வகைகள் உட்கொள்ளலாம். சாப்பிடும் முன் கைகழுவும் பழக்கத்தால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட தொற்று நோய்களை தவிர்க்க முடியும். வெயில் காலத்தில் அம்மை நோய்களும், காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களும் குழந்தைகளை அதிகம் தாக்கும். அம்மை நோய்களுக்கு தடுப்பூசி இருப்பதால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது அவசியம். தேவையற்ற அசவுகரியங்களை இதனால் தடுக்கலாம்.
இருமுறை குளிக்கலாம் : குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் இந்த வெயில் காலத்தில் இருமுறை குளித்து உடல் வெப்பத்தை குறைக்கலாம். சாதாரண சோப்பு மட்டுமே போதுமானது. குளித்த பிறகு பவுடர் போடுவதை தவிர்க்க வேண்டும். நம் சருமத்தில் சிறிய நுண் துளைகள் இருக்கும். நாம் வியர்க்குரு பவுடர் போடுவதால் அந்தத் துகள்கள் மூடப்படும். இதனால் வெப்பம் வெளியேறாமல் சரும நோய்கள் ஏற்படும். வியர்வை வெளியேறுவது நல்லது. அதை தடுக்கும் வகையில் பவுடர், சந்தனம், வாசனை திரவியங்கள் என எந்தப் பூச்சும் கூடாது.
ஜன்னக்காற்று போதும் : குளிர்சாதனம் ஆபீஸ் முதல் வீடுவரை ஆக்கிரமித்திருக்கிறது. குளிர்சாதனம் பயன்படுத்தும் பழக்கம் இருந்தால் அதை சீரான வெப்பநிலையில் இயக்க வேண்டும். நேரடியாக ஏசி காற்று முகத்தில்படும்படி படுக்க வேண்டாம். குழந்தைகளைப் பெரும்பாலும் ஏசி காற்றுக்கு பழக்கப்படுத்தாமல் ஜன்னலை திறந்துவைத்து மின்விசிறியைப் பயன்படுத்துவது நல்லது.
வெயில் காலம்தான் குழந்தைகளுக்கு விடுமுறை காலமாக இருக்கிறது. அவர்கள் விளையாட்டுக்குத் தடை போட முடியாது. ஆனால், கத்திரி வெயில் காலத்தில் காலை 9 மணிக்கு மேல் வெயிலில் விளையாட அனுமதிக்கக்கூடாது. அதேபோல், மாலை 5 மணிக்கு மேல்தான் குழந்தைகளை வெளியில் விளையாட அனுமதிக்க வேண்டும்.
பச்சிளங் குழந்தைகளுக்கு பவுடர் கூடாது : பச்சிளங் குழந்தைகள் வீட்டில்தான் இருக்கப்போகிறார்கள் என்பதால் பெரிய அளவில் பிரச்சினைகள் இருக்காது. 6 மாதம் வரை இருக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. 6 மாதத்துக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு திட உணவு ஆரம்பிக்கும்போது இந்த வெயில் காலத்தில் பழச்சாறு கொடுக்கலாம்.
இந்தக் குழந்தைகளுக்கும் பருத்தி ஆடையே சிறந்தது. குளியலுக்குப் பின்னர் பவுடர் போடுவதை தவிர்த்துவிடவும். இவ்வாறு மருத்துவர் பாலாஜி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-04-2025
22 Apr 2025 -
தமிழ்நாட்டுக்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
22 Apr 2025சென்னை : தமிழ்நாட்டிற்கு 2.5 டி.எம்.சி. தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
பிராமணர்கள் குறித்த அவதூறு கருத்து: மன்னிப்பு கோரிய அனுராக் காஷ்யப்
22 Apr 2025டெல்லி : பிரமாணர் சமூகம் குறித்த கருத்துக்கு மீண்டும் மன்னிப்புக் கோரியிருக்கிறார் இயக்குநர் அனுராக் காஷ்யப்.
-
புதுச்சேரியில் பேருந்து நிலையத்தை திறக்க கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
22 Apr 2025புதுச்சேரி : புதுச்சேரியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை திறக்க வலியுறுத்தி அ.தி.மு.க. மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
-
ஜம்மு - காஷ்மீர் தாக்குதல்: அமித்ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை
22 Apr 2025புதுடில்லி : ஜம்மு - காஷ்மீர் தாக்குதல் குறித்து மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
-
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கின் முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமீன் : சென்னை ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2025சென்னை : கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தாமோதரன், கன்னுக்குட்டி ஆகியோருக்கு சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
-
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாற்று திறனாளிகள் கைது
22 Apr 2025சென்னை : சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாற்று திறனாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் : சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
22 Apr 2025சென்னை : அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் விவகாரத்தில் உரிய நேரத்தில், உரிய முடிவை அரசு எடுக்கும் என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ள
-
இந்த ஆண்டில் 50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் : அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு
22 Apr 2025சென்னை : தமிழக சட்ட சபையில் மின்சாரத்துறை மானியக் கோரிக்கையின் போது முக்கிய அறிவிப்புகளை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்.
-
3 ஆண்டுகளாக நீடிக்கும் உக்ரைன் போர்: அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார்: ரஷ்ய அதிபர் புதின் திடீர் அறிவிப்பு
22 Apr 2025மாஸ்கோ : உக்ரைன் போர் தொடர்பாக அமைதி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
-
புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் குழுவில் 4 இந்திய கார்டினல்களுக்கு இடம்
22 Apr 2025வாடிகன் : புதிய போப் ஆண்டவரை தேர்வு செய்யும் குழுவில் 4 இந்திய கார்டினல்கள் இடம் பெற்றனர்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு: இறுதி தரவரிசை பட்டியல் வெளியீடு
22 Apr 2025சென்னை : குரூப் 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் வெளியிட்டுள்ளது.
-
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி
22 Apr 2025ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக சம்பளம்: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
22 Apr 2025சென்னை : தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
பழைய ஓய்வூதிய திட்டம்: தமிழக அரசு மீது விஜய் கடும் தாக்கு
22 Apr 2025சென்னை : அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களைத் தேர்தல் நேரத்தில் மட்டுமே நம்ப வைத்து ஏமாற்றுவதைக் கைவிட்டு விட்டு கொடுத்த வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்ட
-
40-வது ஐ.பி.எல். லீக் ஆட்டம்: குஜராத் டைட்டன்ஸ் வெற்றி
22 Apr 2025கொல்கத்தா : கொல்கத்தா அணிக்கு எதிரான ஐ.பி.எல். லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
-
ஜெய்ப்பூர் ஆம்பர் கோட்டையை பார்வையிட்ட ஜே.டி.வான்ஸ்
22 Apr 2025ஜெய்ப்பூர் : இந்தியா வந்துள்ள அமெரிக்கா துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், நேற்று குடும்பத்துடன் ஜெய்ப்பூர் ஆம்பர் கோட்டையை பார்வையிட்டார்.
-
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் குழந்தைகளுக்கு பரிசளித்த பிரதமர் மோடி
22 Apr 2025டெல்லி : அமெரிக்க துணை ஜனாதிபதி குழந்தைகளுக்கு பரிசளித்தார் பிரதமர் மோடி.
-
பாகிஸ்தானில் விபத்து: 16 பேர் பலி
22 Apr 2025லாகூர் : பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள மலைப்பகுதியில் அதிவேகமாகச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகியுள்ளனர்.
-
மோசடி வழக்கில் நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
22 Apr 2025ஹைதராபாத் : ரியல் எஸ்டேட் நிறுவன நிதி மோசடி தொடர்பான வழக்கில் வரும் 28-ம் தேதி ஹைதராபாத் அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுக்கு அமலாக்கத்துறை
-
ஒரேநாளில் ரூ.2,200 அதிகரிப்பு: ரூ.75 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கம்
22 Apr 2025சென்னை : தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சமாக நேற்று (ஏப்.22) பவுனுக்கு ரூ.2,200 அதிகரித்து ஒரு பவுன் ரூ.74,320-க்கு விற்பனையானது.
-
ஜம்மு-காஷ்மீரில் வெள்ளம்-நிலச்சரிவு: முதல்வர் உமர் அப்துல்லா நேரில் ஆறுதல்
22 Apr 2025ஸ்ரீநகர் : விலைமதில்லாத உயிர்களைப் பாதுகாப்பதே எங்களின் முதன்மையான நோக்கம்.
-
கவர்ச்சிகரமான முதலீட்டு திட்டங்கள்: தமிழக டி.ஜி.பி. சங்கர் ஜிவால் எச்சரிக்கை
22 Apr 2025சென்னை : அதிக லாபம் தரும் கவர்ச்சிகரமான முதலீட்டு தகவல்களை நம்ப வேண்டாம் என்று டி.ஜி.பி. சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வில் உ.பி.யை சேர்ந்த மாணவி முதலிடம்
22 Apr 2025புதுடெல்லி : 2024 ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் (ஏப். 22) வெளியிடப்பட்டுள்ளன.