எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடிக்காக ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பது குறித்து நம்பியூர் வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளதாவது.
இந்தியாவின் மொத்தப் பரப்பபில் 75 சதம் மானாவாரி நிலமாகும். தமிழகத்தில் மொத்த சாகுபடிப் பரப்பில் சுமார் 50 சதம் வானம் பார்த்த பூமியாகும். மானாவாரியாக பயிரிடப்படும் நிலங்களில் குறைந்த மகசூலே கிடைக்கிறது. இதற்குக் காரணம் பருவம் தவறிய மழை, மழை அளவில் நிலையில்லாத தன்மை, குறைந்த கால மழைப்பருவம், அதிக அளவில் நீர் ஆவியாதல், மண் அரிப்பு - போன்றவையாகும்.
எனவே, நிலையில்லாத சூழ்நிலையில் மானாவாரி விவசாயத்தில் சில உத்திகளைப் பயன்படுத்தி ஓரளவு நிலைத்த வருமானத்தைப் பெறலாம். இதில் முக்கியமானது ஊட்டமேற்றிய தொழு உரமாகும். மண் வளப் பராமரிப்பு வேளாண்பயிர்களின் விளைச்சலில் மிக முக்கிய பங்கு வகுக்கிறது. . மண்ணில் உள்ள சத்துக்களில் மணிச்சத்தானது பயிர்களுக்கு அதிக அளவில் தேவைப்படும் சத்தாகும். குறிப்பாக பயிர்கள் வேரூன்றி செழித்து வளர மணிச்சத்தானது மிக அவசியமாகிறது. மண்ணில் காணப்படும். தழைச்சத்தும் பயிருக்கு உடனே கிடைக்கும் நிலையில் இருப்பதில்லை. இந்த ஊட்டச்சத்துக்களை ஊட்டமேற்றிய தொழுஉரம் மூலமாக இடுவதன் மூலம் பயிருக்கு உடனே கிடைக்கும் நிலைக்கு மாற்றலாம்.
உரமிட்டால் மகசூல் கூடும்
மானாவாரி சாகுபடி வயல்களில் உரமிட்ட பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கிறது என ஆராய்ச்சி முடிவுகள் மூலம் தெரியவருகிறது. தமிழகத்தில் மானாவாரி சாகுபடிப் பரப்பில்10 சதம் மட்டுமே போதிய உரமிடப்படுகிறது. நம்பியூர் வட்டாரத்தில் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் மானாவாரிப் பகுதியாக உள்ளது. இதில் 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக ஆண்டுதோறும் மானாவாரி நிலக்கடலை பயிராகிறது. நிச்சயமற்ற மழை மற்றும் வறட்சி காரணமாக மானாவாரி நிலக்கடலைக்கு உரமிட விவசாயிகள் தயங்குகின்றனர். மேலும், போதிய தொழுஉரம் கிடைக்காததாலும் அதன் விலை அதிகமாக இருப்பதாலும் இயற்கை உரத்தின் பயன்பாடும் குறைந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் பயிருக்கு உரமிடுவதில் புதிய உத்தியைக் கையாள்வது அவசியமாகிறது.
அதிகம் செலவு பிடிக்காத, மிகவும் எளிமையான இந்த ஊட்டமேற்றிய தொழு உரம் இடும் முறையை கையாள்வதன் மூலம் மானாவாரியிலும் மகத்தான மகசூலைப் பெறலாம்.
தயாரிப்பது எப்படி?
ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பது மிகவும் எளிமையானதாகும். மானாவாரி நிலக்கடலை விதைப்பதற்கு குறைந்தது ஒரு மாதம் முன்பே இதைத் தயாரித்து வைக்க வேண்டும். ஒரு வண்டி (சுமார் 300 கிலோ) நன்கு மட்கிய தொழு உரத்துடன் (சாணிக்குப்பை) ஒரு ஏக்கருக்கு பரிந்துரை செய்யப்படும் உரங்களான 25 கிலோ சூப்பர் பாஸ்பேட், 30 கிலோ பொட்டாஷ் ஆகிய உரங்களை நன்கு கலந்து மூட்டமாகக் குவித்து வைத்து நிழலில் களி மண் மூலம் நன்கு மூடி வைக்க வேண்டும். அல்லது நன்கு தண்ணீர் தெளித்து கெட்டியாக குவியலை தட்டிவிட வேண்டும். காற்றுப் புகாத நிலையில் உரச்சத்துகள் வீணாகாமல் தடுக்கப்படும். அதை அப்படியே ஒரு மாதகாலம் விட்டு வைக்கும் போது, தொழு உரம் ஊட்டம் பெற்று கூடுதல் சத்துக்களைப் பெறுகின்றன. ஒரு மாதம் கழித்து இத்துடன் 9 கிலோ யூரியாவைக் கலந்து ஒரு ஏக்கரில் விதைப்பருப்பு சால் விடும் போது அந்தப் படைக்காலிலேயே தூவிவிட வேண்டும். அதாவது முழுவதும் அடியுரமாகவே இட வேண்டும்.
இதன் மூலம், மானாவாரி நிலக்கடலைக்கு இடவேண்டிய உரச்சத்துகள் இழப்பின்றிப் பயிருக்கு உடனே கிடைக்கின்றன. பயிர்களின் வேர்வளர்ச்சி அதிகமாகி மகசூல் கூடுகிறது. மணிச்சத்து வீணாகாமல் பயிருக்குக் கிடைக்கிறது. மண்ணின் இயற்பியல் தன்மை மேம்படுகிறது. மண்ணில் நீர் தேங்கும் திறன் அதிகரிக்கிறது. மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மற்ற சத்துக்களும் பயிருக்குக் கிடைத்து, விளைச்சல் அதிகரிக்கிறது. மேலும், வறட்சியின் போது இரசாயன உரமிடுவதால் ஏற்படும் அபாயமும் குறைகிறது. அதுமட்டுமின்றி ஒரளவு தொழு உரமும் பயிருக்கு இடும் வாய்ப்புக் கிட்டுகிறது. ஒரு ஏக்கருக்கு ஒரு வண்டிக்கும் கூடுதலாகத் தொழு இட்டால், இன்னும் மகசூல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.
மேலும், ஒரு ஏக்கருக்கு குறைந்தது இரண்டு பொட்டலம் (400 கிராம்) ‘ரைசோபியம்”, இரண்டு பொட்டலம் ‘பாஸ்போபேக்டீரியா” ஆகிய உயிர் உரங்களை நிலக்கடலை விதையுடன் ஆறியகஞ்சியில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைப்பதால் கூடுதல் மகசூல் பெறலாம். விதை விதைக்கும் போது மேற்கூறப்பட்ட உயிர் உரங்களைத் தனியாக சிறிது தொழு உரத்துடன் கலந்து வயலில் இட்டு அதிக மகசூல் பெறலாம். பெருகிவரும் உரத்தட்டுப்பாடு, இடுபொருள்களின் விலை உயர்வு போன்ற இடர்பாடுகளுக்கு மத்தியில் இதற்கு மாற்றாக நல்ல தரமான ஊட்டமேற்றிய தொழுஉரத்தை விவசாயிகள் உற்பத்தி செய்து பயன்படுத்தி நல்ல மகசூல் பெறலாம்.
இவ்வாறு நம்பியூர், வேளாண்மை உதவி இயக்குநர், அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-05-2025
08 May 2025 -
சென்னை விமானநிலையத்தில் 10 விமானங்கள் ரத்து
08 May 2025சென்னை, சென்னை விமான நிலையத்தில் 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்: துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கீடு
08 May 2025சென்னை, தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் பிளஸ்-2 ரிசல்ட் வெளியீடு: அரியலூர் மாவட்டம் முதல் இடம்
08 May 2025சென்னை, தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதில் அரியலூர் மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது.
-
தொடர்ந்து விழிப்போடு இருங்கள்: பல்வேறு துறை அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தல்
08 May 2025புதுடெல்லி, மாநில அதிகாரிகள், கள நிறுவனங்களுடன் இணைந்து நெருங்கிய ஒத்துழைப்பை பேண வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
-
பழனிசாமியின் கபட நாடகங்கள் ஒருநாளும் வெற்றி பெறாது: ஆர்.எஸ்.பாரதி பதிலடி
08 May 2025சென்னை, தி.மு.க.
-
ஸ்ரீநகர் உள்ளிட்ட 15 முக்கிய நகரங்களில் பாகிஸ்தான நடத்த இருந்த தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தது இந்தியா
08 May 2025புதுடெல்லி: ஸ்ரீநகர், பதன்கோட், ஜலந்தர் உள்ளிட்ட இந்தியாவின் 15 நகரங்களில் பாகிஸ்தான் நடத்த இருந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக இந்திய பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
-
எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை
08 May 2025அமிர்தசரஸ், இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையை கடக்க முயன்ற பாகிஸ்தானியர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
08 May 2025சென்னை, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
இந்தியா-பாக். போர் பதற்றம்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு
08 May 2025இஸ்லாமாபாத், அமெரிக்க துணைத் தூதரகம் அனைத்து தூதரக ஊழியர்களையும் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்க உத்தரவிட்டுள்ளது.
-
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை: பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு முழு ஆதரவு..!
08 May 2025புதுடெல்லி, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
-
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: புதுச்சேரியில் தனியார் பள்ளிகளில் 98.5 சதவீதம் தேர்ச்சி
08 May 2025புதுச்சேரி, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள தனியார் பள்ளிகளின் பிளஸ் 2 தேர்ச்சி விழுக்காடு 98.5 சதவீதமாகும். இம்முறை அரசுப் பள்ளிகள் சி.பி.எஸ்.இ.
-
இந்தியா - பாக். இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் அமெரிக்க அதிபர் அறிவிப்பு
08 May 2025வாஷிங்டன்: இந்தியா- பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
மதுரையில் மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்: பக்தர்கள் பரவசம்
08 May 2025மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாளான நேற்று (மே.8) காலையில் மீனாட்சி சுந்தரேசுவரருக்கு திருக்கல்யாணம் காலை 8.51 மணியளவில் நடைபெற்
-
சென்னை வெற்றியால் நெருக்கடி: பிளே ஆப்-க்கு முன்னேறுமா கொல்கத்தா?
08 May 2025கொல்கத்தா, சென்னை வெற்றியால் கொல்கத்தாவின் பிளே ஆப் வாய்ப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை வெற்றி...
-
அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காத பிரதமர் மோடி..!
08 May 2025டெல்லி, எல்லையில் ஏற்பட்டிருக்கும் போர்ப் பதற்றம் தொடர்பாக நேற்று (மே 8) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை.
-
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தலைவர்கள் முதிர்ச்சியை வெளிப்படுத்தினர்: கிரண் ரிஜிஜு
08 May 2025புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசியல் தலைவர்களும் முதிர்ச்சியை வெளிப்படுத்தியதாக நாடாளுமன்ற வி
-
பா.ம.க. மாநாட்டிற்கு எதிரான மனு: சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி
08 May 2025சென்னை, பா.ம.க. மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
தங்கம் கிராமுக்கு ரூ.55 உயர்வு
08 May 2025சென்னை, சென்னையில் நேற்று (மே.8) தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,130-க்கு விற்பனையானது.
-
மத்திய அரசுக்கு முழு ஆதரவு: ராகுல் காந்தி
08 May 2025புதுடில்லி, மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
-
ரூ.60 ஆயிரம் கோடியில் தொழிற்கல்வி மேம்பாட்டு திட்டம்:மத்திய அமைச்சரவை ஒப்புதல்
08 May 2025புதுடெல்லி, சென்னை உள்ளிட்ட 5 நகரங்களில் தேசிய திறன் பயிற்சி நிறுவன மேம்பாட்டுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது
-
திருச்சி மாவட்டம், துவாக்குடியில் 19.65 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மாதிரிப்பள்ளிக்கு புதிய கட்டிடம் * 18.91 கோடி ரூபாய் செலவில் விடுதிக் கட்டிடங்கள் * தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
08 May 2025திருச்சி: திருச்சி மாவட்டம், துவாக்குடியில் 19.65 கோடி ரூபாய் மதிப்பில் அரசு மாதிரிப்பள்ளிக்கு புதிய கட்டிடம் மற்றும் 18.91 கோடி ரூபாய் செலவில் விடுதிக் கட்டிடங்க
-
கேளிக்கை வரி மசோதாவுக்கு தமிழ்நாடு கவர்னர் ஒப்புதல்
08 May 2025சென்னை, கேளிக்கை வரி மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
-
பாராளுமன்றத்தை கூட்ட ராகுல் காந்தி வலியுறுத்தல்
08 May 2025புதுடெல்லி, பாராளுமன்றக் கூட்டத்தொடரைக் கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதாக மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
-
பதற்றத்தை ஏற்படுத்தவில்லை: பதிலடி மட்டுமே இந்தியா கொடுக்கிறது: மத்திய அரசு
08 May 2025புதுடெல்லி, இந்தியா பதற்றத்தை ஏற்படுத்தவில்லை, பதிலடி மட்டுமே கொடுக்கிறது என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.