முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன்-லைன் மருந்து விற்பனையை கண்டித்து மே 30-ல் முழு கடையடைப்பு போராட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 21 மே 2017      சென்னை

அனுமதியின்றி சில நிறுவனங்கள் ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்கக் கோரியும், ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக் கோரியும் நாடுமுழுவதும் மருந்து வணிகர்கள் அவ்வவ்போது கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, ஆன்லைன் மூலம் மருந்து விற்பனையை அனுமதிக்கக் கோரி ஏராளமான கோரிக்கைகள் மத்திய அரசுக்கு வந்தது. இதையடுத்து மத்திய சுகாதாரத் துறை தற்காலி கமாக ஒரு கமிட்டியை அமைத்து ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வது குறித்து ஆய்வு நடத்தியது.  அந்த கமிட்டி தனது ஆய்வறிக்கையை மத்திய சுகாதாரத் துறையிடம் சமர்ப்பித்தது. இதையடுத்து ஆன்லைனில் மருந்து விற்பனையை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்நிலையில், ஆன்-லைன் மருந்து விற்பனையை கண்டித்து மே 30-ம் தேதி அகில இந்திய அளவில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்