இந்திய மத்திய வங்கியில் உள்ள 'தொழிற்பழகுநர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : பகவத் கீதையை பள்ளிகளில் கட்டாயமாக்கும் முயற்சியை நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து முறியடிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது , ''மோடி தலைமையிலான பாஜக சில கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, என்.டி.ஏ. என்ற தேசிய ஜனநாயக கூட்டணி அரசு என்ற பெயருடனே கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
மதச் சார்பற்ற அரசு என்ற ...
வளர்ச்சி, வேலைவாய்ப்புகளைப் பெருக்குதல், விவசாயிகளின் வாழ்வைப் பன்மடங்கு வளப்படுத்துவோம் என்றெல்லாம் தேர்தலில் கூறிவிட்டு, ஆட்சிக்குப் பெரும் பலத்தோடு வந்துவிட்ட பிறகு மதச் சார்பற்ற என்ற அரசமைப்புச் சட்டம் விதித்துள்ள ஆட்சிமுறையையே தூக்கி எறியும் வண்ணம் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் செயல்கள் நடைபெற்று வருகின்றன.
கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டு வைத்து ஒற்றை ஆட்சிமுறையைக் கொண்டு வரும் வகையில், மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசே எடுத்துக்கொள்ளும் பணியையும் அடக்கமாகவும், அதேநேரத்தில் உறுதியாகவும் திட்டமிட்டே நடத்துகின்றது. பன்மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் உள்ள ஜனநாயகக் குடியரசினை மாற்றி இந்து ராஷ்டிரமாக்கிட அவ்வப்போது தொடர்முயற்சிகளை பல்வேறு ரூபத்தில் நடத்திட முயலுகின்றது.
தனி நபர் மசோதா
பகவத் கீதை என்ற நூலை கல்வித் திட்டத்தில் பள்ளிகளில் கட்டாயமாக்கிட வேண்டும் என்று பாஜகவின் எம்.பி. ரமேஷ் பிதுரி என்ற ஒருவர் தனி நபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அந்த மசோதா நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் பகவத் கீதை வாசிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும், இதை அமலாக்காத பள்ளிகளின் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று அம்மசோதா கூறுகிறது.
இந்த முடிவுக்கு வந்தேன் , கோட்சே
அரசின் மதச்சார்பின்மை எப்படியெல்லாம் சின்னாபின்னப்படுத்தப்படுகிறது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு அல்லவா? சதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டம் என்று கடவுள் அவதாரமான கண்ணன் கூறுகிறான் என்று எழுதி, ஜாதியைப் பாதுகாக்கிறது. கொலையை நியாயப்படுத்தும் நூல் இந்நூல் - காந்தியாரைக் கொன்ற கோட்சே, நான் கீதையைப் படித்தபிறகே இந்த முடிவுக்கு வந்தேன் என்று நீதிமன்றத்திலேயே வாக்குமூலம் தந்துள்ளான்.
நஞ்சைப் புகுத்துவது அல்லவா?
இந்த வன்முறையைத் தூண்டும் நூலை- மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் புகுத்தினால் அது நஞ்சைப் புகுத்துவது அல்லவா? இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் உள்ள அத்தனை எதிர்க்கட்சிகளும் கடுமையாக எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்.
பகவத் கீதையை தேசிய நூலாக்க அரசு பிரகடனப்படுத்த வேண்டும் என்று முன்பு குரல் எழுப்பியவுடன் எதிர்ப்பு - கண்டனம் புயல்போல் கிளம்பியதால் அது பின்வாங்கப்பட்டது.மீண்டும் ஆழம் பார்க்கவே இம்முயற்சி; எல்லோரும் ஒன்று திரண்டு இம்முயற்சியை முறியடிக்க வேண்டும்'' என்று வீரமணி தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கீரை ஆம்லெட்![]() 6 hours 5 min ago |
உருளை கிழங்கு புட்டு![]() 4 days 6 hours ago |
தயிர் உருளைக்கிழங்கு![]() 1 week 6 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-22-03-2023.
22 Mar 2023 -
சென்னை அப்பல்லோவில் கனிமொழியின் கணவர் அனுமதி
22 Mar 2023சென்னை : சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அரவிந்தன் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
-
காஞ்சிபுரம் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து : உயிரிழந்தோர் என்ணிக்கை 9 ஆக உயர்வு
22 Mar 2023காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை அருகே நேற்று காலை நடந்த பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
-
ரஜினி மகள் வீட்டில் நகையை திருடி 95 லட்சத்துக்கு சொத்து வாங்கி குவித்த பெண் பணியாளர் கைது
22 Mar 2023சென்னை : நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகளை திருடி தனது 3 மகள்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்காகவும்,
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு : மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் 27-ம் தேதி வெளியிடப்படுகிறது
22 Mar 2023சென்னை : 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு வரும் 27-ம் தேதி ஹால் டிக்கெட் வெளியிடப்படுகிறது.
-
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா 29-ம் தேதி துவக்கம் : 3-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி
22 Mar 2023பழனி : பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவி்ழா வரும் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
இந்திய வம்சாவளி நடிகைக்கு தேசிய மனிதநேய விருது : அதிபர் ஜோபைடன் வழங்கினார்
22 Mar 2023வாஷிங்டன் : சிறந்த கலைச் சேவைக்காக இந்திய வம்சாவளி அமெரிக்க நடிகைக்கு தேசிய மனிதநேய விருதை அதிபர் ஜோபைடன் வழங்கினார்.
-
கூட்டுறவு வங்கிகளில் ஆன்லைன் பண பரிவர்த்தனை முறை துவக்கம் : செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
22 Mar 2023சென்னை : கூட்டுறவு வங்கிகளில் ஆன்லைன் பண பரிவர்த்தனை முறை தொடங்கப்பட்டுள்ளதாக செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
-
மந்தைவெளி வெளிவட்ட சாலைக்கு பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் பெயர் : தமிழக அரசு அரசாணை வெளியீடு
22 Mar 2023சென்னை : டி.எம்.சவுந்தர ராஜனின் 100-வது பிறந்தநாளை ஒட்டி சென்னை மந்தைவெளியில் அவர் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் வெளிவட்ட சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படுகிறது.
-
பாக். - ஆப்கனில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 11 பேர் பலி
22 Mar 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 11 பேர் பலியான நிலையில், 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்
-
வைக்கம் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்க முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு : கடிதம் அனுப்பினார் பினராய் விஜயன்
22 Mar 2023சென்னை : ஏப். 1-ல் நடைபெறவுள்ள வைக்கம் நூற்றாண்டு விழாவை தொடங்கி வைக்க வேண்டும் என கோரி மு.க. ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் கடிதம் அனுப்பி உள்ளார்.
-
டிரம்ப் கைது செய்யப்படுவது போன்ற போலி புகைப்படங்கள் : வலைதளங்களில் வெளியானதால் சர்ச்சை
22 Mar 2023வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது செய்யப்படுகிறார் என்ற தகவல் வெளியான நிலையில் அவர் கைது செய்யப்படுவது போன்ற போலியான புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற
-
நிபந்தனைகளை நீக்கினால் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார்: ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். தகவல்
22 Mar 2023நிபந்தனைகளை நீக்கினால் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிடத் தயார் என்று சென்னை ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
-
நம்மை காக்கும் தண்ணீரை நாம் காக்க வேண்டும் : முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்
22 Mar 2023சென்னை : நம்மை காக்கும் தண்ணீரை நாம் காக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
-
காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலியானோரின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்: இ.பி.எஸ்.
22 Mar 2023சென்னை : காஞ்சிபுரம் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
கனடாவில் ஆசிரியர்களை கத்தியால் குத்திய மாணவன்
22 Mar 2023நோவா : கனடாவின் நோவா ஸ்காட்டியா மாகாணம் ஹாலிபாக்ஸ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.
-
வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா நிற்கிறது: ரஷ்ய அதிபர்
22 Mar 2023மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் போரில் வரலாற்றின் சரியான பக்கத்தில் சீனா நிற்கிறது என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
-
உக்ரைனுக்கு மேலும் 350 மில்லியன் டாலர் ஆயுத உதவி: அமெரிக்கா
22 Mar 2023வாஷிங்டன் : உக்ரைனுக்கு மேலும் 350 மில்லியன் டாலர்கள் ஆயுத உதவி வழங்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
-
ஓரின சேர்க்கையாளர்களுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை : உகாண்டா பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்
22 Mar 2023கம்பாலா : உகாண்டாவில் ஓரின சேர்க்கையாளர்களுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேறியது.
-
வரும் 26-ம் தேதி கோவளம் கடற்கரையில் படகு போட்டி : அமைச்சர் உதயநிதி தொடங்கி வைக்கிறார்
22 Mar 2023சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் 70-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வரும் 26-ம் தேதி கோவளம் கடற்கரையில் மாபெரும் படகுப்போட்டி நடத்தப்படுகிறது.
-
பார்லி.யில் பதிலளிக்க வாய்ப்பு கேட்டு சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு ராகுல்காந்தி மீண்டும் கடிதம்
22 Mar 2023தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வாய்ப்பு அளிக்குமாறு சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு, ராகுல் காந்தி மீண்டும் கடிதம் எழுதி உள்ளார்.
-
கொரோனா: குணமடைந்தார் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் : மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை
22 Mar 2023சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.
-
தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்தது
22 Mar 2023சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (மார்ச் 22) சவரனுக்கு ரூ.800 குறைந்து, ரூ.43,760-க்கு விற்பனையானது.
-
பில்கிஸ் பானு வழக்கில் 11 பேர் விடுவிப்பு: எதிரான மனுவை விசாரிக்க புதிய அமர்வுக்கு சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்
22 Mar 2023பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுவிப்புக்கு எதிரான மனுவை விசாரிக்க புதிய அமர்வை அமைக்க சுப்ரீம் கோர்ட் நேற்று ஒப்புதல் அளித்து உள்ளது.
-
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு ஆலோசனை
22 Mar 2023நாட்டில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து நேற்று பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு கூடி ஆலோசனை நடத்தியது.