எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உணவுப்பாதை, வயிறு, சிறு குடல் இவற்றில் புண் ஏற்படுவதினை வயிற்றுப் புண் என்கின்றோம்.
அல்சர் எனப்படும் வயிற்றுப் புண் நம்மிடையே சர்வ சாதாரணமாக பேசப்படும் ஒன்று. உணவுப்பாதை, வயிறு, சிறு குடல் இவற்றில் புண் ஏற்படுவதினை வயிற்றுப் புண் என்கின்றோம். இந்தியாவில் மட்டும் வருடத்திற்கு 10 மில்லியன் மக்கள் இப்பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என ஆய்வுகள் கூறுகின்றன. இதில்
- ஆரம்ப நிலையில் உள்ளதனை மருத்துவர்கள் எளிதில் சிகிச்சை அளித்து சரி செய்து விடுவர்.
- அதிக பரிசோதனைகள் தேவைப்படலாம்.
- குணம் பெற சில மாதங்கள் கூட ஆகலாம்.
அதிக ஆசிட் வயிற்றில் சுரப்பது வயிற்றின் பல படிவுகளை அழித்து விடும். புண் தோன்ற இது காரணமாக இருக்கும் ஹெச் பைலோரி என்ற கிருமி பாதிப்பினால் புண் ஏற்படலாம். வலி நிவாரணம் என்பதற்காக அதிக ஆன்லரின் மாத்திரை சாப்பிடுபவர்களுக்கு இப்பாதிப்பு ஏற்படலாம். மேல்வயிற்று வலியே இதன் முக்கிய அறிகுறியாக இருக்கும். ஆசிட் குறைக்க மருந்தும், கிருமி இருந்தால் அதற்கான மருந்தும் தேவைப்படுகின்றது.
19 வயதிலிருந்து 60&க்கும் மேற்பட்டவர்களுக்கு மிக அதிகமாகவும், 3&18 வயதுடையோருக்கு ஓரளவும், 0&3 வயதுடையோருக்கு மிக மிக குறைந்த அளவிலும் இப்பாதிப்பு ஏற்படுகின்றது.
- மேல் வயிற்று வலி
- நெஞ்செரிச்சல்
- இரவில் வலி
- உப்பிசம், அஜீரணம், வயிற்றுப் பிரட்டல், வாந்தி
- அதிக காற்றுப்போக்கு
- சோர்வு
போன்ற அறிகுறிகளும் இருக்கலாம்.
- யாராவது உங்கள் ஆபிசில் அடிக்கடி உங்களிடம் கோபப்பட்டால் உங்களுக்கு டென்சன் கூடி அல்சர் வந்து விடும்.
- இராத்திரி வெகுநேரம் கண் விழித்து வேலை செய்கிறீர்களா அல்சர்தான்.
- ரொம்ப கவலைப்படாதீங்க. அல்சர்தான்.
அல்சரை பிறருக்கு கொடுப்பதும் சுலபம். அல்சரை நாம் பெறுவதும் சுலபம். அதிக ஸ்ட்ரெஸ், மன உளைச்சல் தான் இதற்குக் காரணம்.
வயிற்றில், உணவுப் பாதையில் உருவாகும் இப்புண் மிகுந்த வலியினைத் தரக் கூடியது. சிறுகுடலில் மேல் பகுதியிலும் இப்புண் வரும். பெட்டிக் அல்சர், டயோடிலை அல்சர் என இதனைக் குறிப்பிடுவர்.
சுமார் 100 வருடங்களுக்கு முன்பு வரை ஸ்டிரெஸ், கார, மசாலா உணவுகள், ஆல் கஹால் இவை மட்டுமே வயிற்று குடல் புண்களுக்கு காரணமாக பார்க்கப்பட்டது. ஆய்வுகளின் முடிவாக கிருமிகள், சிலவகை மருந்துகள், புகை பிடித்தல் இவையும் புண்களுக்குக் காரணம் என கண்டறியப்பட்டது. இந்த கிருமிகளைப் பற்றிய ஆய்வுக்காக 1982-ல் இரு டாக்டர்கள் நோபல் பரிசு பெற்றனர்.
புண்கள் ஏற்பட்டு அதில் ஹெச் பைலோரி கிருமி பாதிப்பு இருக்கலாம் என்ற ஒரு கருத்து இருந்தாலும் ஹெச் பைலோரி கிருமி பாதிப்பு உடையவர்களுக்கெல்லாம் வயிற்று புண் இருப்பதில்லை. சிலருக்கு மற்றவர்களைக் காட்டிலும் வயிற்றில் ஆசிட் சுரப்பது இயற்கையாகவே கூடுதலாக இருப்பதும் வயிற்று புண் ஏற்பட காரணமாகின்றது. இப்படி ஆசிட் சுரப்பது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கும் காரணம் ஆகின்றது. வயிற்று வலிதான் புண்ணின் அறிகுறி. கடுமையான வலி, மேல் வயிற்றில் ஏற்படலாம். சாப்பிட்ட சில மணி நேரங்கள் கழித்து ஏற்படலாம். இரவு அல்லது விடியற்காலை ஏற்படலாம். ஏதாவது சாப்பிடுவதோ, ஆன் டாசிட் எடுத்துக் கொள்வதோ வலி நிவாரணமாக அமையலாம். இந்த அறிகுறிகளை ஒதுக்கி மருத்துவ உதவி பெறாமல் இருப்பது புண்ணை பெரிதாக்கி ஓட்டைகளை ஏற்படுத்தி விடும்.
இரத்தக் கசிவு ஏற்பட்டு ஆபத்தாக்கி விடும்.
மேலும் சில அறிகுறிகளும் உண்டு
- பசியின்மை
- அடிக்கடி துடிக்கும் வயிற்று வலி
- அடிக்கடி ஏப்பம்
- அடிக்கடி விக்கல்
- எடை குறைவு
- வாந்தியில் ரத்தம்
- வெளிப்போக்கில் ரத்தம்
ஆகியன ஆகும்.
பல மருத்துவ சோதனைகள் இதனை கண்டறிய உள்ளன. அதற்கேற்ப சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. ஹெச் பைலோரி கிருமி வாய் எச்சில், உணவு, தண்ணீர் மூலம் பரவக் கூடியது என்பதனை அனைவரும் அறிய வேண்டும். ஆக எப்பொழுதும் கைகளை கழுவி சுத்தமாய் வைத்திருப்பது சிறந்த பாதுகாப்பாக அமையும். தொடர்ந்து குணமடை யாவிடில் அறுவை சிகிச்சை மூலம் ‘அல்சர்’ சிகிச்சை அளிக்கப்படுகின்றது. ப்ளேவ நாய்ட்ஸ் எனப்படுபவை புண்கள் வெகுவாய் ஆற்ற உதவுகின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது இயற்கையாகவே காய்கறிகள் பழங்களில் நிரம்பி உள்ளன.
அவை
- சோயா பீன்ஸ்
- பருப்பு வகைகள்
- ப்ரோகலி எனும் பச்சை காலி ப்ளவர்
- ஆப்பிள்
- க்ரீன்டீ ஆகும்
- தயிர்
- மோர்
- தேன்
- பூண்டு இவையும் அல்சருக்கு சிறந்தவையாக அமையும்.
தவிர்க்க வேண்டியவை :
- காபி
- புட்டியில் அடைக்கப்பட்ட பானங்கள்
- மிளகாய்
- அதிகம் வறுத்த உணவு
- அதிக மசாலா உணவு
பொதுவில் டாக்டரிடம் செல்லாமல் தானே ஏதோ ஒரு வலி நிவாரண மருந்து அல்லது டாக்டர் பல வருடங்களுக்கு முன்னால் எழுதி கொடுத்த சீட்டை வைத்து மருந்து என வாங்கி சாப்பிடுவர். இது அனைவருக்குமே தீங்கு ஏற்படுத்தலாம். குறிப்பாக அல்சர் நோயாளிகளுக்கு மிக அதிக பாதிப்பினை ஏற்படுத்தலாம். ஆஸ்பரின் கொண்டுள்ள மாத்திரைகளை அவர்கள் எடுத்துக் கொள்ளும் பொழுது வயிற்றில் ரத்தக் கசிவு ஏற்படலாம். எனவே இத்தகு பாதிப்புகள் ஏற்படாது இருக்க மருத்துவ உதவி அவசியம். அல்சர் உருவாவதற்கு முன் வயிற்றுப் போக்கு ஒரு அறிகுறியாக அமையலாம். புண், வயிற்றில் ஓட்டை கூட ஏற்படுத்தக் கூடும். இதில் கிருமிகளின் தாக்குதல் ஏற்படும் பொழுது ஜுரம் ஏற்படக்கூடும். சில சமயங்களில் இந்த புண்களில் ரத்தக் கசிவு ஏற்படும் பொழுது அதிக சோர்வும், மூச்சு வாங்குவதும் ஏற்படலாம்.
வீட்டிலேயே சில சிகிச்சை முறைகள் :
- முன்பெல்லாம் மசாலா, கார உணவுகள் மிக முக்கியமான காரணமாகக் கருதப்பட்டன. ஆனால் இன்று அவை அல்சர் இருப்பவர்களுக்கு சில தொந்தரவுகளை கொடுக்கும் என அறிவுறுத்தப்படுகின்றது.
- தியானம் கண்டிப்பாய் ஸ்டிரெஸ் நீக்குகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. ஸ்டிரெஸ் அல்சருக்கு ஒரு முக்கிய காரணம்.
- வாழைப்பழம் சாப்பிடுங்கள். இது ஹெச் பைலோரியால் உருவாகும் அல்சர் வராது தவிர்க்கின்றது.
- மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தினமும் அரைமணி நேர உடற்பயிற்சியும், நன்கு நீர் குடிப்பதும் இப்பிரச்சனையைத் தவிர்க்கும்.
- மிக வேக வேகமாக உண்ணாதீர்கள். கேட்டால் நேரம் இல்லை என்று சொல்வீர்கள். இப்படி உணவை அடைத்து நோய் வரவழைத்துக் கொள் வதினை விட உண்ணாமல் இருப்பது கூட குறைவான தீங்கினைச் செய்யும்.
- அதிகமாக தொண்டை வரை உண்ணாதீர்கள். தீவிர அஜீரணம் அசிடிடி, அல்சர் என கொண்டு வந்து விடும். எப்பொழுதும் அளவாக உண்ணுங்கள்.
- நெஞ்செரிச்சல், தொண்டை வரை ஆசிட் எகிறுதல் போன்றவற்றிற்குக் காரணம் அதிக மசாலா உணவு. இத்துடன் தூங்கச் செல்லும் முன் அதிக கார உணவு, அதிக உணவு, வேகமாக உண்ணும் உணவு, சிகரெட் ஆகியவை ஆகும். இவற்றினை உடனடியாக நிறுத்துங்கள்.
- வயிற்றுப் பிரட்டலுக்கு இஞ்சி சாறுடன் சிறிது தேன் கலந்து எடுத்துக் கொள்ளுங்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.