எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெர்பி : பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்தை தோற்கடித்து இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்குள் நுழையும்.
முதல் நாளான நேற்று முன்தினம் டெர்பி ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, முன்னாள் சாம்பியன் இங்கிலாந்துடன் மோதியது. ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தது.
இதைத் தொடர்ந்து இந்தியாவின் இன்னிங்சை பூனம் ரவுத்தும், ஸ்மிர்தி மந்தனாவும் தொடங்கினர். அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்த இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 144 ரன்கள் (26.5 ஓவர்) திரட்டினர். அதிரடியில் மிரட்டிய மந்தனா 90 ரன்களில் (72 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். 2 முறை கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பிய பூனம் ரவுத் 86 ரன்களில் (134 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தார். கேப்டன் மிதாலி ராஜியும் (71 ரன், 73 பந்து, 8 பவுண்டரி) அரைசதம் அடிக்க, இந்திய அணி சவாலான ஸ்கோரை எட்டியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது. ஹர்மன்பிரீத் கவுர் 24 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.
இந்தியா வெற்றி
அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 47.3 ஓவர்களில் 246 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியில் 4 வீராங்கனைகள் ரன்-அவுட் ஆனது அவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. குறிப்பாக பிரான் வில்சனின் ரன்-அவுட்டே (81 ரன்) ஆட்டத்தின் திருப்பு முனையாகும். இங்கிலாந்துக்கு எதிராக 2012-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியா பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.
இந்திய தரப்பில் தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளும், ஷிகா பான்டே 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். இந்திய அணி தனது 2-வது லீக்கில் வருகிற 29-ந்தேதி வெஸ்ட் இண்டீசுடன் மோதுகிறது.
இலங்கை சுருண்டது
மற்றொரு ஆட்டத்தில் இலங்கை-நியூசிலாந்து சந்தித்தன. முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 188 ரன்களுக்கு அடங்கியது. ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டுக்கு 141 ரன்களுடன் (35.3 ஓவர்) விளையாடிக்கொண்டிருந்த இலங்கை அணி மேற்கொண்டு 47 ரன்கள் சேர்ப்பதற்குள் 8 விக்கெட்டுகளை தாரைவார்த்ததால் 200 ரன்களை கூட தொட முடியாமல் போய் விட்டது. வேகப்பந்து வீச்சாளர் ஹோலி ஹட்லெஸ்டன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
தொடர்ந்து களம் கண்ட நியூசிலாந்து அணி 37.4 ஓவர்களில் இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. கேப்டன் சுசி பேட்ஸ் சதம் (106 ரன்) அடித்து களத்தில் இருந்தார்.இன்று நடக்கும் 3-வது லீக்கில் பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா மோதுகின்றன.
மிதாலி ராஜ் தொடர்ந்து 7-வது அரைசதம்
இந்திய பெண்கள் அணியின் கேப்டன் 34 வயதான மிதாலிராஜ் நேற்றைய ஆட்டத்தில் 71 ரன்கள் விளாசினார். அவர் தொடர்ச்சியாக அடித்த 7-வது அரைசதம் இதுவாகும். இதன் மூலம் பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து 7 அரைசதங்கள் (70*, 64, 73*, 51*, 54, 62*,71) நொறுக்கிய முதல் வீராங்கனை என்ற மகத்தான சாதனையை படைத்தார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் லின்ட்சே ரீலர், இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ், ஆஸ்திரேலியாவின் எலிசி பெர்ரி ஆகியோர் தொடர்ந்து 6 அரைசதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.
ஒட்டுமொத்தத்தில் மிதாலியின் 47-வது அரைசதமாக இது பதிவானது. வீராங்கனைகளில் அதிக அரைசதங்கள் அடித்தவரும் இவர் தான். இங்கிலாந்தின் சார்லோட் எட்வர்ட்ஸ் 46 அரைசதங்கள் எடுத்ததே முந்தைய சாதனையாகும். அதையும் மிதாலி முறியடித்து விட்டார். அவருக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
24 Oct 2025சென்னை: மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-10-2025.
24 Oct 2025 -
சேலம் அருகே விபத்தில் 3 பேர் பலி
24 Oct 2025உளுந்தூர்பேட்டை: சேலம் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்கிறார் விஜய்
24 Oct 2025சென்னை: கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
-
துபாயில் இந்திய மாணவர் உயிரிழப்பு
24 Oct 2025துபாய்: துபாய் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் உயிரிழந்தார்.
-
என்றும் மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
24 Oct 2025சென்னை: மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் அடுத்த வாரம் முதல் தமிழகத்தில் துவக்கம் தலைமை தேர்தல் ஆணையம் தகவல்
24 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்கும்
24 Oct 2025புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
-
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு: வங்கக்கடலில் அக். 27-ம் தேதி உருவாகிறது 'மோந்தா' புயல் வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
24 Oct 2025சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன்
24 Oct 2025சென்னை: போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா வுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
-
வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம்
24 Oct 2025சென்னை, 'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' என்ற பெயரில் தி.மு.க.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
24 Oct 2025ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டதை அடுத்து அங்கு தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்க
-
ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன்..? மலேசியா பிரதமர் அன்வர் விளக்கம்
24 Oct 2025கோலாலம்பூர், ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன் என்பது குறித்து மலேசியா பிரதமர் அன்வர் விளக்கமளித்துள்ளார்.
-
குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால் பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை
24 Oct 2025பாகிஸ்தான், குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால்பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
-
முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
24 Oct 2025சென்னை, முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
குண்டு வைக்க சதி: டெல்லியில் 2 பயங்கரவாதிகள் கைது
24 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன்? மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்
24 Oct 2025சென்னை, தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன் என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து: பிரமதர் மோடி, ஆந்திரா அரசு சார்பில் நிவாரணம் அறிவிப்பு
24 Oct 2025ஐதராபாத், ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதி
-
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி ஆர்.ஜே.டி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது கடும் தாக்கு
24 Oct 2025பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார்.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
24 Oct 2025டெல்லி: டெல்லியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வெள்ளிக்கிழமை காலை நான்கு பள்ளிகளுக்கு வந்த மின்னஞ்சல்களால் பரபரப்பு நிலவியது.
-
பீகாரில் என்.டி.ஏ. ஆட்சிக்கு வந்தால் நிதிஷ் குமாரால் முதல்வராக முடியாது தேஜஸ்வி யாதவ் பிரச்சாரம்
24 Oct 2025பாட்னா: என்.டி.ஏ.
-
ஆந்திரா, கர்னூல் மாவட்டத்தில் பயங்கரம்: ஆம்னி பேருந்து தீ விபத்தில் 23 பேர் உடல் கருகி உயிரிழப்பு 18 பேர் படுகாயம் - மாவட்ட ஆட்சியர் தகவல்
24 Oct 2025கர்னூல்: ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஐதராபாத்-பெங்களூரு தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 23 பேர் பலியானதாகவும், 18 பேர் மருத்துவமனையில் சிகிச்ச
-
பீகாரில் 10 சட்டசபை தொகுதிகளில் இன்டியா கூட்டணிக்குள் போட்டி
24 Oct 2025பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இன்டியா கூட்டணிக் கட்சியினர் 10 தொகுதிகளில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
-
தி.மலை நீர் நிலைகளிலும், மலைப்பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு
24 Oct 2025சென்னை: மலைப் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
வருகிற 30-ம் தேதி தென் கொரியாவில் சீன அதிபர் ஜின் பிங்கை சந்திக்கிறார் ட்ரம்ப்
24 Oct 2025வாஷிங்டன், தென்கொரியாவில் வருகிற 30-ம் தேதி சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேசுகிறார்.


