எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
வாழ்வதற்காகவே உண்பவர்கள் இருக்கிறார்கள், உண்பதற்காகவே வாழ்பவர்களும் இருக்கின்றார்கள். இரண்டாம் வகையினர்தான் பல வியாதிகளையும், உடற்பருமனையும் விலைகொடுத்து வாங்கிக் கொள்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின் படி உலகம் முழுவதும் 100 கோடி பேர் அளவுக்கதிகமான எடையுடையோர்கள், 40 கோடி பேர் மிக அதிக எடையுடையோர், 30 கோடி பேர் மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர். நம் தமிழகத்தில் சென்னையில் மட்டும் 49மூ பேர் அளவுக்கு அதிகமான எடையுடையோர் பெரும்பாலான நோய்களுக்கு காரண கர்த்தாவாக அமையும் இந்த உடற் பருமனால் இரத்தக் குழாய் சம்பந்தப்பட்ட நோய்கள், இரத்த அழுத்த நோய், மாரடைப்பு, சில வகைப் புற்று நோய்கள், 2 வகை நீரிழிவு நோய், கணைய நோய், பால் உணர்வில் நாட்டமின்மை, போன்ற கொடிய நோய்கள் ஏற்படுகின்றன.
தேவை சரிவிகித உணவு
உணவின் ருசி கருதி தனக்குப் பிடித்த உணவை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்த்து பல உணவுகளைக் கலந்து உண்ணப் பழகிக் கொள்ள வேண்டும். புரோட்டீன், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், மாவுச் சத்து, நார்ச் சத்து போன்ற எல்லாம் கலந்து உணவை சரிவிகித உணவு எனலாம். அத்தோடு உட்கொள்ளும் உணவுப் பொருளின் வெப்ப வெளிப்பாட்டுத் திறன் (கலோரி)"ஐயும் கணக்கிடத் தெரிந்து கொள்ள வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை
போதைப் பொருட்களான மது, புகைபிடித்தல் குட்கா வகைகள், போதை மருந்து போன்றவற்றை முற்றாகத் தவிர்க்க வேண்டும். துரித உணவு வகைகள் , ஐஸ் கிரீம், சாக்லேட், செயற்கை குளிர்பான வகைகள் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதில் ப்ரிசர்வேட்டர் போன்ற வேதிப் பொருட்கள் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும். வனஸ்பதி போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவு களையும், வெள்ளை மைதா போன்ற மிகச் சுத்திகரிக்கப்பட்ட களையும் குறைத்துக்கொள்வது நல்லது. ஒரே எண்ணையை பல முறை உபயோகப்படுத்தக் கூடாது.
சமையல் எண்ணை ஓர் தெளிவு
சமையல் எண்ணையில் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது. கொழுப்புச் சத்துக்களை இரண்டுவகையாகப் பிரிக்கலாம்.
1) முழுமையடையாத கொழுப்பு
2) முழுமையடைந்த கொழுப்பு
இதில் முதல்வகைக் கொழுப்பில் அதிக தீங்குகள் இல்லை. இவை இரத்தக் குழாயில் படியாது. இதில் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையுடையது.
இரண்டாம் வகைதான் மிக ஆபத்தானது. இதில் உள்ள கொழுப்புக்கள் இரத்தக் குழாயில் படிந்து பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.
எனவே முழுமையடைந்த கொழுப்புக்கள் அதிகமாக உள்ள தேங்காய் எண்ணெய், நெய், பாம் ஆயில் போன்றவற்றை தவிர்த்துக் கொள்வதோடு சபோலா கார்டி ஆயில், கார்ன் ஆயில், சன் ஃபிளவர் போன்ற சமையல் எண்ணைகளை பயன்படுத்தி ஆரோக்கிம் காப்பீர்.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
மனித வாழ்க்கையில் மரணம் என்பது தடுத்து நிறுத்த முடியாத ஒன்று, எனினும் நாம் உடல் நலத்துடன் வாழ முயற்சித்தல் வேண்டும். இவ்வளவு விஷயங்களை நம் வாழ்வில் நடைமுறைப்படுத்துவது சாத்தியம் தானா? முயன்றால் நம்மால் முடியும். அதே நேரம் மார்க்கக் கண்ணோட்டத்தோடு நோக்கினால் நிச்சயம் முடியும்.
ஐந்துக்கு முன் உள்ள ஐந்தினைப் பேணிக் கொள்ளுங்கள்.
1) முதுமைக்கு முன் உள்ள வாலிபம்
2) வறுமைக்கு முன் உள்ள செல்வம்
3) நோய்க்கு முன் உள்ள ஆரோக்கியம்
4) வேலைக்கு முன் உள்ள ஓய்வு
5) மரணத்திற்கு முன் உள்ள வாழ்வு
எனவே மேலே கூறியது போன்று நோய்க்கு முன் உள்ள ஆரோக்கிய வாழ்வினைப் பெற்று அதனைத் தக்க வைத்துக் கொள்ள மரணத்திற்கு முன் உள்ள வாழ்வில் வேலைக்கு முன் உள்ள ஓய்வினை உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டுமே பயன்படுத்தாது நமக்கும், நம் குடும்பத்திற்கும், சமூகத்திற்கும், படைத்த இறைவனுக்கும் ஆற்ற வேண்டிய நற்செயல்களை கருத்தில் கொண்டு உணவுக் கட்டுப்பாட்டுடன் கூடிய உடற்பயிற்சி செய்து நோயற்ற வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவன் நமக்கு உதவி செய்வானாக என மனதில் கொண்டு வாழ்வோம் நாம் காலையில் சாப்பிடும் உணவை ஆங்கிலத்தில் பிரேக்பாஸ்டஎன்று கூறுவதன் அர்த்தத்தை நாம் அவசியம் தெரிந்துகோள்ள வேண்டும்.
நாம் முன்னாள் இரவு எட்டு மணிக்கு இரவு உணவைச் சாப்பிட்டு தூங்கப் போகிறோம். அதன் பிறகு காலை எட்டு மணிக்குத்தான் நாம் சாப்பிடுகிறோம். ஆக, நாம் 12 மணி நேரம் உண்ணாமல் விரதம் இருக்கிறோம். அந்த விரதத்தை முடித்து வைக்கும் காலை உணவைத்தான் நாம் பிரேக்பாஸ்ட் என்கிறோம். அப்படியில்லாமல் நாம் நம் காலை வேளையின் அவசரச் சூழலுக்கு ஆட்பட்டு காலை உணவை சாப்பிடாமலோ அல்லது தள்ளிப்போடும்போது நம் உண்ணாவிரதம் நீட்டிக்கப்படுகிறது. நாம் இரவு சாப்பிடாமல் இருக்கும்போது நாம் முழு ஓய்வில் இருக்கிறோம்.
ஆனால், அதுவே காலையில் நாம் வேலை பிஸியில் இருக்கிறோம். ஆகவே, காலையில் சாப்பிடாமல் இருப்பது மிகவும் கெடுதலான விளைவைத் தரும். ஆகவே, நாம் காலையில் அவசியம் சாப்பிடவேண்டும். அதாவது விரதம் முடிக்க வேண்டும். நமக்கு காலை வேளையில் நம் வேலைதான் முக்கியமா முன் வந்து நிற்கிறது என்றால் அதற்கு முன்னதாக நாம் அதிகாலையில் எழுந்து தயாராகும் பழக்கத்திற்கு நாம் வர வேண்டும். அப்படியில்லாவிட்டால், பிற்பாடு உடல் நலம் கெட்டு இப்பொழுது நாம் செய்துவரும் வேலையையும் செய்ய முடியாமல் போகும். இது பரவாயில்லையா?
நாம் உண்ணாவிரதம் முடிக்கும்போது நாம் முதல் எடுப்பது பழச்சாறாகத்தான் இருக்கவேண்டும். அப்படியில்லாமல், காலை எழுந்தவுடன் காப்பி அல்லது டீ குடித்தால்தான் வேலையே ஆகும் என்றால் நாம் மோசம்தான். அப்படிக் காலையில் நாம் குடிக்கும் காப்பியும் டீயும் நம் செரிமான சக்தியை காசெய்கிறது.அப்புறம் மிச்சம் மீதி இருக்கும் செரிமான சக்தியைக் கொண்டுதான் நாம் அன்றைய நாளை கடந்தாக வேண்டும். “சரி, அதெல்லாம் இருக்கட்டும், டீ காப்பியை விடுவதெல்லாம் ஆகாத காரியம், வேறு வழி ஏதேனும் இருந்தால் கூறுங்கள்’ என்று நீங்கள் கேட்டால் என் பதில் இதுதான் நான் உங்களுக்கு “அன்றாட வாழ்வில்ஆரோக்கியம்’ பற்றிதான் சொல்ல வந்தேன், “அன்றாட வாழ்வில் அழிச்சாட்டியம்’ பற்றி அல்ல.
நாம் காலையில் எழுந்து பல் துலக்கி, சவரம் செய்து, காலைக்கடன் முடித்து, எனிமா எடுத்து, தொட்டிக் குளியல் செய்து பின் குளித்து, எளிய உடற்பயிற்சி முடித்து, பிராணயாமம் பயின்று, பின் தியானம் இயற்றிய பின் நாம் எடுக்கும் முதல் உணவு பழச்சாறாக இருந்தால் மிகவும் அற்புதமாக இருக்கும். அதற்கு நாம் கேரட் ஜூஸ் தயாரித்து அருந்தலாம். ஒரு நான்கு பேருக்கு செய்யும் அளவு முறைப் பற்றி பார்ப்போம். ஒருகால்கிலோ கேரட்டைத் துருவி அதனோடு ஒரு மூடித் தேங்காயையும் துருவிச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இதனோடு இயற்கை வெல்லம் தேவையான அளவில் சேர்த்து இரண்டு ஏலக்காயையும் போட்டு சிறிதுதண்ணீர் ஊற்றி மிக்ஸியில் ஓட்டிய பின்னர் வடிகட்டி அருந்தலாம். இப்படிக் காலையில் நீர்த் தன்மையோடுஎடுக்கப்படும் கேரட் ஜூஸானது நம் மண்ணீரலைப் புத்துணர்வாக்கி அன்றையச் செரிமானத் தன்மையைஉத்வேகம் கொள்ளவைக்கும்.
அடுத்து, நாம் காலையில் எடுக்கும் உணவானது செரிக்க இலகுவாகவும், வயிற்றை கெடுக்காததாகவும் இருக்க வேண்டும். காலையிலேயே நொறுக்குத் தீனிகளையும் எதிர்மறை உணவுகளையும் எடுக்க ஆரம்பித்தால் அன்றைய தினமும் மற்றொரு மோசமான தினமாகவே கழியும். அப்புறம் காலை அவசரத்திற்கு பிரட்டையும் சாஸையும் சாப்பிடுவதும் நம் செரிமானத்திற்கு நாமே சங்கு ஊதுவதற்குச் சமமாகும். நாம் அதிகாலையில் எழுந்து பொறுமையாக நம்மைத் தயார்படுத்தி, தரமான காலை உணவை மெதுவாக உண்டு காலை வேலையை ஆரம்பிப்போமேயாயின் அன்றைய நாள் முழுமையும் உற்பத்தி திறன் வாய்ந்த நாளாக விளங்கும் ஆகையால் அன்றைய இரவில் நாம் நிம்மதியாகத் தூங்குவோம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-12-2025.
18 Dec 2025 -
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
18 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வில் கடந்த 5 நாட்கள் நடந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்புக்காக த
-
தமிழகத்தில் டிச. 22-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
18 Dec 2025தமிழகத்தில் டிச. 22-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
-
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது: வெள்ளி விலை புதிய உச்சம்
18 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்து விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.12,440-க்கும், சவரன் ரூ.99,520-க்கும் விற்பனையானது.
-
மத்திய அரசு சார்பில் அனைவருக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளதா...? தமிழ்நாடு அரசு விளக்கம்
18 Dec 2025சென்னை, 'மத்திய அரசின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கும் திட்டம்' என்ற பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அது தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள
-
ஈக்வடார் நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் 9 ஆயிரத்திற்கும் அதிகமான கொலை சம்பவங்கள்..!
18 Dec 2025பார்சிலோனா, ஈக்வடாரில் இந்தாண்டு மட்டும் 9,000க்கும் அதிகமான கொலைகள் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
-
பயமில்லை பயமில்லை என்று சொல்லும் எதிரிகள் த.வெ.க.வை கண்டு கதறுகிறார்கள்: ஈரோடு பிரச்சாரத்தில் விஜய் பரபரப்பு பேச்சு
18 Dec 2025ஈரோடு, பயமில்லை பயமில்லை என்று சொல்லும் எதிரிகள் த.வெ.க.வை கண்டு கதறுகிறார்கள் என ஈரோடு பிரச்சாரத்தில் விஜய் பேசினார். மேலும், களத்தில் இருக்கும் எதிரிகளை மட்டுமே
-
காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாள் 125 நாட்கள் என்பது ஏமாற்று வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
18 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாள் 125 நாட்கள் என்பது ஏமாற்று வேலையே என தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை குளிர்விக்க ஏழைகள்
-
அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
18 Dec 2025நியூயார்க், அமெரிக்காவின் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக தலா ரூ. 1.60 லட்சம் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
காந்தியின் பெயர் நீக்கத்திற்கு எதிர்ப்பு: பார்லி. வளாகத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
18 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை திட்டத்தில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள
-
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே விபி-ஜி ராம்ஜி மசோதா பார்லி., மக்களவையில் நிறைவேற்றம்
18 Dec 2025புதுடெல்லி, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றான விபி-ஜி ராம்ஜி மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 
-
தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை ஜன.1 முதல் அமல்
18 Dec 2025சென்னை, தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை அடுத்த மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
-
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது: பெயர் இல்லாதவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
18 Dec 2025சென்னை, தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
-
ஈரோட்டில் பிரச்சாரத்தின் போது கம்பத்தில் ஏறிய ரசிகரை கண்டித்த விஜய்
18 Dec 2025ஈரோடு, த.வெ.க. தலைவர் விஜய் பேசிக் கொண்டிருந்தபோது கம்பத்தில் ஏறிய தொண்டரை, பேச்சை நிறுத்திவிட்டு அவர் கண்டித்தார்.
-
நேரு கடிதங்களை திருப்பி அளிக்க வேண்டும்: சோனியா காந்திக்கு மத்திய அரசு கடிதம்
18 Dec 2025புதுடெல்லி, கடந்த 2008-ம் ஆண்டு பெற்ற முன்னாள் பிரதமர் நேருவின் கடிதங்களை சோனியா காந்தி திருப்பி அளிக்க வேண்டும் என மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள
-
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 26 இந்தியர்கள் பலி: மத்திய அரசு
18 Dec 2025புதுடெல்லி, உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட ரஷ்ய ராணுவத்தில், 202 இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி பாதிப்பு: இரு தரப்பு ஒப்பந்தங்கள் மூலம் விரைவில் தீர்வு காண வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Dec 2025சென்னை, அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள என்றும், இதனால் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளது என்றும் பிரதமர் மோடிக்கு எழுத
-
ஈரோடு பிரச்சாரத்தில் சீமானை மறைமுகமாக விமர்சித்த விஜய்
18 Dec 2025ஈரோடு, ஈரோடு பிரச்சாரத்தில் சீமானை மறைமுகமாக விஜய் விமர்சித்ததாக இணையத்தில் பலர் தெரிவித்து வருகின்றனர்.
-
புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு இலவச லேப்டாப் வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி தகவல்
18 Dec 2025சென்னை, புத்தாண்டு விடுமுறை முடிந்து மாணவர்கள் கல்லூரிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.
-
ஜனவரி 5-ம் அ.ம.மு.க. பொதுக்குழுக்கூட்டம்: டி.டி.வி. தினகரன் அறிவிப்பு
18 Dec 2025சென்னை, அ.ம.மு.க.வின் செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற உள்ளதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு பொதுக்கூட்டத்தில் தொண்டர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை வெளியிட்ட விஜய்..!
18 Dec 2025ஈரோடு, ஈரோடு பிரச்சாரத்தில் தொண்டர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை விஜய், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் "நன்றி ஈரோடு" என்று பதிவிட்டுள்ளார்.
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் திருமணமாளிகை திறப்பு: என் வெற்றிக்குப்பின் என் மனைவி உள்ளார்: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
18 Dec 2025சென்னை, கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் அண்ணா திருமணமாளிகையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், என் வெற்றிக்குப்பின்
-
நடுவானில் திடீர் பழுது: ஏர் இந்தியா விமானம் கொச்சியில் அவசர தரையிறக்கம்
18 Dec 2025கொச்சி, நடுவானில் திடீர் பழுது காரணமாக ஏர் இந்தியா விமானம் கொச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கலைஞர் பல்கலைக்கழக மசோதா: ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Dec 2025சென்னை, கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
-
பூந்தமல்லி பணிமனையில் இருந்து 125 மின்சார பேருந்துகள் இயக்கம்: துணை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
18 Dec 2025சென்னை, 3-வது கட்டமாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து ரூ.214.50 கோடி மதிப்பிலான 125 மின்சார பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளது.


