எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டம் அரக்கோணம் நகராட்சி டி.என்.எச்.பி. காலணியில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள டேக்வாண்டோ உள் விளையாட்டு அரங்க கட்டிடத்தை பள்ளி கல்வி,; விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி விழா சிறப்புiயாற்றினார்கள்.இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சி.அ.ராமன். தலைமை தாங்கினார்.இந்த விழாவிற்கு சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் என்.ஜி.பார்த்தீபன், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி அவர்களும் முன்னிலை வகித்தனர்.
ஊக்கத்தொகை
பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விழாவில் பேசியதாவது. மறைந்த தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியோடு வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இந்த டேக்வோண்டோ உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மறைந்த முதலவர் அம்மா இந்தியாவிலேயே தமிழகம் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கவேண்டும் என்ற எண்ணத்தில் பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களையும், இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் தமிழகத்தின் பெருமையை நிலைநாட்டும் வகையில் சிறந்து விளங்கும் வீரர் வீராங்கணைகளுக்கு நிதியுதவிகளை வழங்கி அவர்களுக்கு ஒரு ஊக்கத்தை ஏற்படுத்தி தந்துள்ளார்கள். மறைந்த முதல்வர் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில்தான் விளையாட்டுத்துறைக்கு என்று தனியாக ஒரு பல்கலைகழகத்தை உருவாக்கி விளையாட்டு துறைக்கு பெருமை சேர்த்துள்ளார்கள். அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையிலான அரசு விளையாட்டுத்துறையில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் ரூ.4.80 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகையினை வழங்கியுள்ளது. மேலும் மறைந்த முதல்வர் அம்மா சர்வதேச அளவிலான நேரு விளையாட்டரங்கினை அமைத்து தமிழகத்திற்கு பெருமையை சேர்த்தார்கள்.
வேலூர் மாவட்டம் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குகிறது. இந்த மாவட்டத்தை சேர்ந்த வீரர்கள் தேசிய அளவில் வெற்றி பெற்று சாதனையை படைத்துள்ளார்கள். வேலூர் மாவட்டத்தில் விளையாட்டு துறையை மேலும் மேம்படுத்தும் விதத்தில் ரூ5.0 கோடி மதிப்பீட்டில் மிகப்பெரிய விளையாட்டரங்கமும், ரூ.1.0 கோடி மதிப்பில் அரக்கோணத்தில் ஒரு விளையாட்டரங்கமும் விரைவில் கட்டப்படும். இந்த விளையாட்டரங்கம் தமிழக அரசின் தன்னிறைவு திட்டத்தில் ரூ.70 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதில் ரூ24 இலட்சம் தனியார் பங்களிப்பும் உள்ளது அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். விரைவில் வேலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி மாவட்டம் மூன்று கல்வி மாவட்டமாக உருவாக்கப்படும் இதனால் மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு திறன் மேம்படும் இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. வீரர் வீராங்கனைகளுக்கு விளையாட்டு போட்டியில் வெற்றியும் தோல்வியும் சகஐமான ஒன்று. தோல்வி என்பது வெற்றிக்கான படிகட்டுகள் மேலும் இளைஞர்கள் முயன்றால் முடியாதது ஏதுமில்லை. மூச்சு நின்றால்தான் மரணம் அல்ல முயற்சி செய்யவில்லை என்றாலும் அது வெற்றி கிடைப்பதில் ஏற்படும் மரணம் ஆகும். ஆகவே மாணவர்களும் இளைஞர்களும் தொடர்ந்து முயற்சி செய்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். இந்த அரக்கோணம் டோக்வோண்டோ விளையாட்டு மூலம் இப்பகுதியல் உள்ள பல இளைஞர்கள் பயனடைந்துள்ளனர் எதிர் வரும் காலங்களிலும் இந்த விளையாட்டை மாணவர்கள் சிறந்;;த முறையில் கற்று வெற்றி பெற்று தமிழகத்திற்கும் இந்தயாவிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என்று வாழ்த்தி விழாவில் பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.
இவ்விழாவில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் வேலூர் மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையிலான அரசு பதவியேற்று 100 நாட்களில் செயல்படுத்தப்பட்ட நலத்திட்ட உதவிகள் அடங்கிய 100 நாள் சாதனை கையேட்டினை பள்ளி கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அவர்களும், வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி அவர்களும் வெளியிட்டார்கள். மேலும் வருவாய் துறையின் மூலம் 120 இருளர் இனத்தை சார்ந்தவர்களுக்கு இருளர் இன சான்றிதழ்களையும், 44 பயனாளிகளுக்கு ரூ.5.இலட்சத்து 10ஆயிரம் மதிப்பிலான முதியோர் உதவி, திருமண நிதியுதவித்தொகை, இயற்கை மரணம் மற்றும் விபத்து நிவாரண நிதியுதவித்தொகையினையும் அமைச்சர் பெருமக்கள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எ.ஜி.விஜயன், அரக்கோணம் துணை காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம், வேக்வாண்டோ சங்கத் தலைவர் மரு.சி.எஸ்.சந்திரமௌலி, நகர கூட்டுறவு வங்கித் தலைவர் துரைகுப்புசாமி, செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை கே.ராமமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஜி.கமலகுமாரி, நகராட்சி பொறியாளர் எம்.சண்முகம், அரக்கோணம் வட்டாட்சியர் பாஸ்கரன், அல்ட்ராடெக் நிர்வாக அலுவலர் ஜி.உதயகுமார், கிளைத் தலைவர் பிரசாந்த்ரஸ்தோகி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்6 days 18 hours ago |
மினி பான் கேக்1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-05-2024.
10 May 2024 -
குஜராத்தில் சர்ச்சைக்குள்ளான வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடக்கிறது
10 May 2024ஆமதாபாத் : குஜராத்தில் நேரலை ஒளிபரப்பால் சர்ச்சைக்குள்ளான வாக்குச்சாவடியில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
-
காங்கிரஸ் தலைவர் மர்ம மரணம்: ஜெயக்குமார் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் கத்தி மீட்பு
10 May 2024நெல்லை : காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் இறந்து கிடந்த தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து கத்தி ஒன்றை தடயவியல் நிபுணர்கள் மீட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
-
கலவரத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது: இம்ரான் கான் அறிவிப்பு
10 May 2024இஸ்லாமாபாத் : கடந்த ஆண்டு மே 9-ம் தேதி நடந்த கலவர சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று இம்ரான்கான் திட்டவட்டமாக தெரிவித்தார்.
-
23 வகை நாய்களுக்கு தடை விதித்த உத்தரவு வாபஸ் : தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை அறிவிப்பு
10 May 2024சென்னை : :23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை தமிழக கால்நடை பராமரிப்பு துறை திரும்ப பெற்றுள்ளது.
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
10 May 2024சென்னை : கல்வி எனும் அறிவாயுதம் உங்களுக்கு துணையாக அமையட்டும் என்று எஸ்.எஸ்.எல்.சி.
-
தெலுங்கானாவில் அரசு பஸ்சில் பயணம் செய்த ராகுல் காந்தி
10 May 2024ஐதராபாத் : தெலுங்கானாவில் பிரச்சாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி அங்கு அரசு பஸ்சில் பயணம் செய்து காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள திட்டங்கள் குறித்து எடுத்து க
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற இரண்டு மாணவிகள்
10 May 2024கமுதி : பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 500-க்கு 499 மதிப்பென் எடுத்து கமுதி மற்றும் திண்டுக்கல் மாணவிகள் 2 பேர் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர்.
-
அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே வள்ளலார் சர்வதேச மையம் : உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி
10 May 2024சென்னை : வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகே கட்டப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
-
இந்திய மக்களவை தேர்தலில் நாங்கள் தலையிடவில்லை : ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு
10 May 2024வாஷிங்டன் : நாங்கள் இந்திய மக்களவைத் தேர்தலில் தலையிடவில்லை என்று ரஷ்யாவின் குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.
-
சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புதிய வழக்குப்பதிவு
10 May 2024சென்னை : கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அவதூறு பரப்பியதாக சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புதிய வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
யானை வழித்தட வரைவு அறிக்கை: தமிழக அரசுக்கு எடப்பாடி கண்டனம்
10 May 2024சென்னை : யானை வழித்தட வரைவு அறிக்கையை செயல்படுத்த முனைப்பு காட்ட கூடாது என்று அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு
10 May 2024சென்னை : தமிழகம் முழுவதும் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஜூன் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1 வரை இடைக்கால ஜாமீன் : நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது சுப்ரீம் கோர்ட்
10 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்.
-
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 89.14 சதவீதம் தேர்ச்சி
10 May 2024புதுச்சேரி : 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் புதுச்சேரியில் 89.14 சதவீதம் தேர்ச்சி பேர் பெற்றுள்ளனர்.
-
பாராளுமன்ற 4-ம் கட்ட தேர்தல்: 10 மாநிலங்களில் இன்று மாலை ஓய்கிறது பிரசாரம் : இறுதிக்கட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் மும்மூரம்
10 May 2024புதுடெல்லி : பாராளுமன்ற 4-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 10 மாநிலங்களில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்கிறது.
-
வரும் திங்கட்கிழமை முதல் அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை துவக்கம்
10 May 2024சென்னை : வரும் திங்கட்கிழமை முதல் அரசுப் பள்ளிகளில் பிளஸ்-1 மாணவர் சேர்க்கை தொடங்குகிறது.
-
காலக்கெடுவுக்கு முன்பே இந்திய வீரர்கள் வெளியேறி விட்டனர் : மாலத்தீவு அரசு தகவல்
10 May 2024மாலே : கெடு முடியும் முன்பே மாலத்தீவில் நிலை நிறுத்தப்பட்டு இருந்த இந்திய ராணுவ படைகள் முற்றிலுமாக வெளியேற்றப்பட்டதாக அதிபர் முகமது முய்சுவின் செய்தி தொடர்பாளர் தெரிவித
-
செனகல் நாட்டில் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்த விமானம்
10 May 2024டக்கார் : செனகல் நாட்டில் ஓடுபாதையில் இருந்து திடீரென தவறி விழுந்த விமான விபத்தில் 11 பேருக்கு காயம் ஏற்பட்டது.
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 800 கனஅடியாக அதிகரிப்பு
10 May 2024சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து 800 கனஅடியாக அதிகரித்தது.
-
அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை ஒரே நாளில் 3-வது முறை அதிகரித்தது
10 May 2024சென்னை : அட்சய திருதியை முன்னிட்டு நேற்று ஒரே நாளில் தங்கம் விலை 3-வது முறை அதிகரித்து விற்பனையானது.
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 91.55 சதவீத மாணவர்கள் தேர்ச்சி : அரியலூர் மாவட்டம் முதலிடம் - தமிழ் பாடத்தில் 8 பேர் 100-க்கு 100
10 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 91.55 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
-
பாகிஸ்தான் குறித்த மணிசங்கர் ஐயரின் பேச்சு: உடன்பாடு இல்லை என காங்கிரஸ் கட்சி விளக்கம்
10 May 2024புதுடெல்லி : முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மணிசங்கர் ஐயர், பாகிஸ்தான் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
-
ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கியது : கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்
10 May 2024ஊட்டி : ஊட்டி தாவரவியல் பூங்காவில் நேற்று மலர் கண்காட்சி தொடங்கியதை தொடர்ந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அதனை கண்டு ரசித்தனர்.
-
சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
10 May 2024சென்னை : திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஏலரப்பட்டி பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற