எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செம்பருத்தி - பருத்தி வகையைச் சேர்ந்த ஒரு செடியாகும். சிவப்புநிறப் பூக்களையுடைய பருத்திச் செடியே செம்பருத்தி என்று அழைக்கப்படுகிறது. காசிபியம் ஆர்போரியம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட மால்வேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த பெருஞ்செடிகளின் பூக்களே மருத்துவத்தில் பெருமளவு பயன்படுகின்றன. இந்தியா, இலங்கை போன்ற வரள்வலய இடங்களில் வளரும் தாவர இனத்தைச் சேர்ந்தது. இது கிழக்கு ஆசியாவில் தோன்றியது. இதை சீன ரோஜா எனவும் அழைக்கின்றனர்.
இது மலேசியாவின் தேசிய மலராகும். இது பொதுவாக அழகுத்தாவரமாக வளர்க்கப்படுகிறது. ஆயுர்வேதத்தில் இது ஜபா புஸ்பா, ருத்ர புஷ்ப, ரக்த கார்பாச என்றும் அழைக்கப்படுகிறது. செம்பருத்திப் பூக்கள் இரண்டு விதமாக இருப்பதுண்டு. ஒன்று தாமரை மலர் போன்று அடுக்கு அடுக்காகவும், தனித்தனியான இதழ்களுடனும் இருக்கும். இந்தப்பூக்களில் தங்கச்சத்து இருப்பதால், தங்க பஸ்பம் சாப்பிடும்போது இந்தப் பூ கஷாயத்தைத் துணை மருந்தாகச் சாப்பிடுவார்கள். இந்தச்செடியின் நுனி முதல் வேர் வரை அனைத்தும் பயன்தரக்கூடியது.
இதே குடும்பத்தைச் சார்ந்த செம்பரத்தை செடிகளை நாம் வீட்டில் அழகுக்காக வளர்க்கும் செடிகளாகும். செம்பரத்தை செடிகளும், செம்பருத்திச் செடிகளும் வேறு, வேறு செடிகளாகும்.
செம்பருத்தியில் ஸ்டெர்குலிக் அமிலம், மால்வாலிக் அமிலம், அஸ்கோர்பிக் அமிலம், குளுக்கோசைடுகள், சயனின், சயனிடின், தயமின், நியசின், கரோட்டின் ஆகிய வேதிப்பொருட்கள் காணப்படுகின்றன.
சில குழந்தைகள் உடல் பலகீனத்துடன் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருப்பார்கள். இந்தக் குறையை போக்கிட, ஐந்து செம்பருத்திப்பூக்களை ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரை லிட்டர் தண்ணீர் விட்டு கால் லிட்டர் ஆகும்வரை நன்கு காய்ச்சி வடிகட்டி பனைவெல்லம் சேர்த்து தொடர்ந்து கொடுத்து வர, சில நாட்களிலேயே குழந்தை வளர்ச்சியில் நல்ல பலன் கிடைக்கும்.
செம்பருத்தி பூக்களிலுள்ள காசிபால் என்னும் சத்து நமது கோபத்தை அதிகப்படுத்தும் ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தி, மனதை அமைதிப்படுத்துவதுடன், அதிக சூடு மற்றும் வைரஸ் தாக்குதலினால் ஏற்படும் அம்மை, அக்கி போன்ற நோய்கள் வராமல் நம்மை காக்கின்றன.
ஆண்மை பெருக்கத்திற்கும், உடல் வலிமைக்கும் செம்பருத்திப்பூக்களின் நடுவில் உள்ள மகரந்தக் காம்புகளை சேகரித்து, வெயிலில் நன்றாக உலர விடவேண்டும். உலர்ந்த மகரந்தக் காம்புகளை நன்கு தூளாக்கி, அந்த தூளை ஒரு கண்ணாடி புட்டியில் அடைத்து நன்கு மூடி வைக்க வேண்டும். பிறகு இந்த தூளை ஒரு வேளைக்கு ஒரு தேக்கரண்டி என்ற கணக்கில் தினமும் காலையும் மாலையும் பசும்பாலில் கலக்கிக் குடிக்க, உடலை நல்ல புஷ்டிகரமாகவும், ஆண்மையையும் பெருக்கும்.
பேன், பொடுகு தொல்லை நீங்க, இரவு படுக்கைக்குப் போகும் முன் செம்பருத்திப்பூக்களை எடுத்து தலையில் வைத்துக் கட்டிக்கொள்ள வேண்டும். இதேபோல் தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் தலையில் உள்ள பேன், பொடுகு மற்றும் சுண்டுகளும் நீங்கிவிடும்.
செம்பருத்திப் பூவிதழ்களை தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சியோ அல்லது தேங்காய் எண்ணெயில் ஊறவைத்தோ தலையில் தேய்த்து வந்தால் தலை சூடு தணியும். வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண்ணை குணமாக்க, தினமும் ஐந்து செம்பருத்திபூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.
ரகசிய நோயான வெட்டை நோயை குணமாக்க, செம்பருத்திப்பூவை அதிகாலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டவுடன் ஒரு டம்ளர் பசும்பால் சாப்பிட்டால் நல்லது. இப்படியாக 40 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோயாக இருந்தாலும் குணமாகும்.
ஐந்து அல்லது ஆறு செம்பருத்திப்பூக்களின் இதழ்களை எடுத்து ஒரு சட்டியில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, அதை ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி எடுத்த கஷாயத்தை நான்கு மணிக்கு ஒரு முறை ஒரு தேக்கரண்டி வீதம் குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் கல்லீரல் சம்பந்தமாக ஏற்படும் பலவித குறைபாடுகளையும் அகற்றிவிடலாம்.
ஐந்து செம்பருத்திப்பூக்களை எடுத்துக் கொண்டு ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக இதனை குடிக்க உடல் உஷ்ணம் தனியும்.
செம்பருத்தி பூவிதழ்களை மட்டும் பிரித்து அம்மியில் வைத்து நன்கு அரைத்து அரைநெல்லிக் காயளவு உருண்டையாக உருட்டி பாலுடன் கலந்து காலை மாலை இருவேளையும் தொடர்ந்து 5 நாட்கள் குடித்து வந்தால் தேவையற்ற கோபம் மற்றும் பதட்டத்தினால் உண்டான உடல் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சியுண்டாகும்.
செம்பருத்திப்பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் குடித்து வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.
செம்பருத்திப்பூக்களை நிழலில் உலர்த்தி பொடி செய்து கஷாயமாகக் காய்ச்சி குடித்து வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலையிடி, மயக்கம் போன்றவை குறையும். வெள்ளைப்படுதலும் குணமாகும்.
இருதய நோய் அணுகாமல் தடுக்க செம்பருத்திப்பூ இருநூறு எண்ணிக்கை எடுத்துக்கொண்டு சிறுசிறு துண்டாக்கி ஒரு பீங்கான் தட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு எலுமிச்சம் பழங்கள் இருபத்தைந்து எண்ணிக்கை எடுத்து பிழிந்து கொள்ள வேண்டும். அந்தச் சாற்றை செம்பருத்திப்பூ உள்ள பீங்கான் தட்டில் ஊற்றி நன்கு பிசைய வேண்டும். இந்த கலவையை வெயிலில் வைக்க வேண்டும்.
மாலையில் இதனை எடுத்து மீண்டும் பிசைய வேண்டும். எந்த அளவுக்கு நாம் டானிக் தயாரிக்கயிருக்கிறோமோ அதற்கு தகுந்தாற்போல் சர்க்கரையை ஒரு இரும்புச் சட்டியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் கலந்து தேன் பாகு பக்குவத்திற்கு நன்கு காய்ச்ச வேண்டும். பின்பு இதில் முன்பு தயார் செய்து வைத்திருந்த செம்பருத்திபூச்சாற்றை வடிகட்டி ஊற்றி கலக்கிக்கொள்ள வேண்டும்.
இந்த சர்பத் பக்குவ டானிக்கை தினமும் காலை மாலை என இரண்டு வேளையும் வேளைக்கு இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்துவர இருதய நோய் அணுகாமல் தடுக்கலாம். இருதய நோய் ஏற்பட்டவர்களும் இதனை குடித்துவர நோயை தடுத்துவிடலாம்.
செம்பருத்தி இலைகள் புற்று நோயை எதிர்த்து போராடுகிறது, இந்த இலைகளை வெந்நீரில் கலந்து குடிக்க புற்று நோயை குணமாக்கலாம். இதன் இலைகளை கொண்டு பேஸ்ட் செய்து புற்று நோயால் ஏற்பட்ட புண்களில் மீதும் தடவலாம்.
செம்பருத்தி இலையில் வைட்டமின் சி வளமையாக உள்ளதால், சளி, இருமல் மற்றும் காய்ச்சலை குணமாக்க இது பெரிதும் உதவுகிறது.
செம்பருத்தி இலையில் ஆற்றல் திறன் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தின் போது ஏற்படும் காய்ச்சல் போன்ற வெப்பத்தை தணிக்கவும் இது பெரிதும் உதவுகிறது.
செம்பருத்தி இலை உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து உடலின் தட்பவெப்ப நிலையை மேம்படுத்த உதவுகிறது.
சிறுநீரக பிரச்சனை மற்றும் செரிமான பிரச்சனை உள்ள நோயாளிகள் செம்பருத்தி இலை கலந்த தேநீரை பருகினால் சிறுநீரக தொற்றுக்களை சரி செய்து, இரத்த கொதிப்பை குறைக்கவும் உதவுகிறது.
செம்பருத்தி இலைகளை சீரான முறையில் மென்று வந்தால், செரிமானத்திற்கு உதவி புரிந்து உடல் எடையையும் குறைக்கச் செய்யும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.