முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூட்டுவலிக்கு முடிவு கட்ட இயற்கை சிகிச்சை இருக்க அறுவை சிகிச்சை எதற்கு……

வெள்ளிக்கிழமை, 21 ஜூலை 2017      மாணவர் பூமி
Image Unavailable

Source: provided

1.உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாமல் எழுந்தால் உட்கார முடியாமல் மூட்டுவலி ஆளைக்கொள்லுது என்று வேதனையால் முனுமுனுக்கும் நிறைய நபர்களை பார்த்திருக்கின்றோம். சிறியவர் முதல் வயதானவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என்று எவ்வித வித்தியாசம் இன்றி வரும் வியாதியே மூட்டுவலியாகும்.

மூட்டுவலி என்பது உடலின் எவ்வித மூட்டிலும் ஏற்படகூடியதினால் பொதுவாக முழங்கால் மூட்டில் ஏற்படும் வலியை மூட்டுவலி என்கிறோம். அசையம் மூட்டுகளில் மிகப்பெரியது முழங்கால் மூட்டுதான்.

அடிப்பட்டுக் கொண்டும் அடிபடாமலேயும் கூட பல தொந்தரவுகளை இந்த முழங்கால் மூட்டு நமக்கு அளிக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த மூட்டைச் சுற்றி மிக மிருதுவான எலும்புகள் இருப்பதுதான். இந்த மூட்டில் சைனோவியல் என்கிற மூட்டுச் சுரப்பி படலம் இருக்கிறது. அதைச் சார்ந்த நோய்களும் மூட்டில் வர வாய்ப்பு உண்டு. முழங்கால் மூட்டில் பாதிப்பு ஏற்பட்டால், அந்த இடத்தின் இறுக்கம் ஏற்பட்டு அங்கு கடு:ம் வலியுடன் அசைவும் ஏற்படாமல் போகலாம்.

2. மூட்டுவலிக்கு முக்கியமான காரணங்கள் :

மூட்டுத் தேய்மானம், அதிக எடையினால் உடற்பயிற்சி இன்மை, கால்சியம் பற்றாக்குறை நரம்பு மற்றும் தசைப்பிடிப்புகளால், ஹார்மோன் மாற்றத்தால், இரத்த சோகை, அஜிரண தொல்லை, வாயுத்தொல்லை, சத்துள்ள உணவு எடுத்துக் கொள்ளாததால், கிருமிகளால்.

3. மூட்டுத் தேய்மானத்தில் பலவகைகள் உள்ளன. அதில் 3 வகையான மூட்டுத் தேய்மானங்கள்,
ஆஸ்டியோ ஆர்த்தரைடிஸ், ருமடாய்ட் ஆர்த்தரைடிஸ், எலும்பு அடர்க் குறைதல் (ழுளவநழிழசழளளை)

4. ஆஸ்டியோ ஆர்த்தரைடிஸ்:

ஆஸ்டியோ என்றால் எலும்பு என்று பொருள். அதாவது மூட்டுகளில் இருக்கும் எலும்புகள் தேய்ந்து விட்டால் அதற்கு ஆஸ்டியோ ஆர்த்தரைடிஸ் என்று பெயர். இந்த வகை மூட்டுத்தேய்மானம் கால் மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள மூட்டுகளில் தான் அதிகமாக வருகிறது.

நடப்பதற்கும்,உட்கார்ந்தால் எழுவதற்கும் மிகவும் கஷ்டமாக இருக்கும். நடந்தால் மூட்டுகளில் வலி, மூட்டு வீங்குதல், வலியால் இரவு தூக்கம் கெடுதல் போன்ற பிரச்சனைகளில் எது வேண்டுமானாலும் ஏற்படலாம்.

ரூமடாய்ட் ஆர்த்தரைடிஸ் :

எந்த வயதினருக்கும் வேண்டுமானாலும் இந்த ரூமடாய்ட் ஆர்த்தரைடிஸ் நோய் வரலாம். சில குடும்ப பரம்பரையாகவும் இந்த ரூமடாய்ட் ஆர்த்தரைடிஸ் நோய் வரலாம். மூட்டு, மணிக்கட்டு, கை, கால் மற்றும் விரல்கள் போன்ற இடங்களில் உள்ள மூட்டுகளில் இந்த நோயின் பாதிப்பு அதிகமாக இருக்கும். இந்த மூட்டுதான் பாதிக்கப்படும் என்று இல்லாமல் எந்த மூட்டும் பாதிக்கப்படலாம்.

5. எலும்பு அடர்த்தி குறைவு நோய் :

ஆஸ்டியோ போரோசிஸ் என்பது எலும்பின் அடர்த்தி குறைந்து பலம் இழப்பதால் ஏற்படுவது. இதை எலும்பு வலுவிடித்தல் நோய் என்றும் குறிப்பிடலாம். சாதாரண வயது ஏற ஏற ஆண்டுக்கு 0.7 சதம் எலும்பின் அடர்த்தி இழப்பு ஏற்பட்டாலும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கும் 60 வயது கடந்த ஆண்களுக்கும் இழப்பு அதிகம் ஏற்படும். மேலும் சினைப்பை அகற்றப்பட்ட பெண்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படும்.

6. மூட்டுவலியிலிருந்து விலக இயற்கை மருத்துவ சிகிச்சை:

யோகா : சில உடற்பயிற்சிகள் மற்றும் யோக ஆசனங்களாகிய ஜானுசிரசாசனம், பச்சிமோத்தாசனம், சலபாசனம், புஜங்காசனம் மற்றும் சில ஆசனங்கள் செய்வதால் இரத்த ஓட்டம் முழங்காலுக்கு சீராகப் பாய்கிறது. இதனால் முழங்கால் புத்துணர்ச்சி அடைகிறது.  மண் சிகிச்சை : மண்பட்டி, மண்குளியல், கடுகுபற்று மசாஜ், ஆயில் மசாஜ், அக்குபஞ்சர், நீர் சிகிச்சை : ஈரத்துணி பட்டி, சுடுநீர் ஒத்தடம், பாதக்குளியல், நீராவி மற்றும் வாழை இலைக்குளியல்.

காந்த சிகிச்சை:  காந்தக்கல் சிகிச்சை, காந்த நீர் அருந்துதல்.

பழங்கள்: அண்ணாச்சி, எலுமிச்சை, தர்பூசணி, சாத்துக்குடி, ஸ்ட்ராபெர்ரி, நெல்லிக்காய், ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழம்.

பச்சை காய்கறிகள்: வெண்டைக்காய், பூண்டு வெய்காயம், கேரட், வெள்ளரிக்காய், பீட்ரூட், பீன்ஸ் மற்றும் நீர்க்காய்கள்.

கீரைகள் :  அனைத்து வகை கீரைகளும் சாப்பிடலாம். முக்கியமான பிரண்டை, முடக்கத்தான் கீரை சாப்பிடலாம். கீரைகள், காய்கள், பழங்கள், சாப்பிடும் உணவில் சரிபாதி எடுத்துக்கொண்டாலே மூட்டுவலி நம்மை விட்டு ஓடிவிடும்.

ஜூஸ் : உருளைக் கிழங்கு ஜூஸ், முடக்கத்தான் சாறு,

7. மூட்டுவலி செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை :

 செய்ய வேண்டியவை :

40–50 வயதிற்கு மேற்பட்டவர்கள் தங்கள் உணவில் அன்றாடம் 4-5 வெண்டைக்காய்கள் (பச்சையாக உண்டால் மிகவும் நல்லது).

கந்தகச்சத்து அதிகமுள்ள உணவுகளாகிய பூண்டு, வெங்காயம் முதலியவைகளை அதிகம் எடுத்து கொள்ளவும். மேற்கூறப்பட்ட உணவுப் பொருட்களால் தேய்மானம் அடைந்த எலும்புகள், குருத்தெலும்புகள், இணைப்புத் திசுக்கள் ஆகியவை வலுபெறும். அன்னாச்சிபழத்திலுள்ள டீசழஅநடயையைn எனும் சத்து மூட்டு அழற்சி குறைக்கும் தன்மையுடையதால் அப்பழத்தினை அதிகமாக சேர்த்துக்கொள்ளவும்.

வைட்டமின் ‘ஊ’ சத்து மூட்டுத்தேய்மானம் அடைவதைத் தள்ளிப்போடும் தன்மை உடையது. எனவே வைட்டமின் ‘ஊ’ சத்து அதிகமுள்ள உணவுகளாகிய எலுமிச்சம்பழம், காலிஃபிளவர் டீசழஉஉழடi பீட்ரூட், ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகாசனம் பயிற்சிகளை செய்வது நல்லது.

செய்யக்கூடாதவை :

புளி, ஊறுகாய், டின்களில் அடைக்கப்பட்ட துரித உணவுகள் தவிர்க்கவும். தக்காளிப்பழம், புளி, பால், ஆட்டுக்கறி, கோழிக்கறி. கொழுப்பு பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

அறுவை சிகிச்சை மூட்டுவலிக்கு தீர்வு அல்ல: மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்பட்ட பல நபர்கள் எங்கள் மருத்துவமனையில் உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளனர். மூட்டுவலி மட்டுமல்லாமல் எங்கள் மருத்துவமனையில் சர்க்கரை வியாதி, உடல்பருமன், தோல்வியாதி, வயிற்றுப்புண், ஆஸ்துமா, மஞ்சள் காமாலை, சிக்கன்குனியா,வரும் மூட்டுவலி இரத்தகொதிப்பு, ஒற்றை தலைவலி, மலச்சிக்கல், மாதவிடாய் கோளாறு, தூக்கமின்மை, மூலம், சிறுநீரக கோளாறு, கற்பபை நீர்கட்டி, ஞாபகமறதி, மணஅழுத்தம் போன்று நாள்பட்ட வியாதிகளுக்கு இன்றைய நவீன மருத்துவத்தில் தீர்வில்லாத நோய்க்கும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட பக்க விளைவுகள் இல்லாத இயற்கை சிகிச்சை எங்கள் மருத்துவமனையில் அளிக்கின்றோம்.

 இயற்கையோடு இணைந்து வாழ கற்றுகொண்டால் எந்த நோயும் நம்மை நெருங்காது.

தொகுப்பு : செந்தில்ராஜன், N.ளு. இயற்கை மருத்துவமனை, சேலம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து