எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை.-மதுரை மாவட்டம், பழங்காநத்தத்தில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ், தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு 1065 நபர்களுக்கு ரூ.15,02,95,922 மதிப்பில் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசும் பொழுது தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கி மூலம் கடன்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் அம்மா அவர்களின் ஆட்சியில் கூட்டுறவுத்துறை மகத்தான வளர்ச்சி அடைந்து இந்தியாவிற்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது.
2016 நவம்பர் 23ந் தேதி 1755 கோடி ரூபாய் நபார்டு வங்கி உதவியுடன் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை அறிந்து கேரளா, ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் தங்களது மாநிலங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்தினார்கள். கடந்த 6 ஆண்டுகளில் அனைத்து கூட்டுறவு வங்கிகளும், வாடிக்கையாளர்களுக்கு முழுமையான தொழில்நுட்ப வசதிகளை வழங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளுக்கு இணையாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகளில் இதுவரை எவ்வித ்டு நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி பணத்தினை முதலீடு செய்து பயன்பெறலாம்.
கூட்டுறவு வங்ககளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 7 சதவீதத்திலிருந்து 21 சதவீதம் ஊதிய உயர்வினை அம்மா வழங்கினார்கள். மேலும் அனைத்து பணியாளர்களுக்கு மருத்துவக்காப்பீடு வசதி செய்து தரப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் செயல்படும் நியாய விலைக்கடைகள் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் விலையில்லா அரிசி மற்றும் பல்வேறு உணவுப்பொருட்களை மலைப் பிரதேசத்திலுள்ள மக்களுக்கும் வழங்கி இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.
கடந்த 6 ஆண்டுகளில் 31.03.2017 முடிய மாநில அளவில் 58,57,408 விவசாயிகளுக்கு ரூ.27,422.22 கோடியும், மதுரை மாவட்டத்தில் மட்டும் 92,384 விவசாயிகளுக்கு ரூ.569.85 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. வறட்சி நிவாரணமாக தமிழகம் முழுவதும் உள்ள 19,45,568 விவசாயிகளுக்கு ரூ.1,284.58 கோடியும், மதுரை மாவட்டத்தில் 52,777 விவசாயிகளுக்கு ரூ.22.75 கோடியும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும் பொழுது தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மதுரை மாவட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 1065 பயனாளிகளுக்கு ரூ.15கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் இன்று (22.08.2017) வழங்கப்படவுள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு பல் உதவிகளை கூட்டுறவு சங்கம் மூலம் செய்து வரும் முதல் அரசு தமிழக அரசு தான். இது இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது மிகவும் பழமையான வங்கி ஆகும். இந்த வங்கி 43 கிளைகள் கொண்டு பல்வேறு கடன் உதவிகள் மற்றும் பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.
கூட்டுறவு வங்கி மூலம் தான் சில பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடிகிறது. மேலும் இக்கூட்டுறவு சங்கங்களின் மூலம் செயல்படுத்தப்படும் அம்மா மருந்தகம் 15 சதவீதம் தள்ளுபடி விற்பனையில் ஏழை, எளிய மக்களுக்கு மருந்துப்பொருட்களை வழங்கி வருகிறது. பொது விநியோகத்திட்டத்தின் கீழ் விலையில்லா அரிசி மற்றும் பல்வேறு உணவுப்பொருட்களை நியாயவிலைக்கடை மூலம் வழங்கி வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள சுமார் 2.5 இலட்சம் குடும்ப அட்டைகள் அனைத்தும் மின்னணு குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களின் விபரங்களை குறுஞ்செய்தி வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
மேலும் அனைத்து ஊரக மற்றும் நகரப்பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் இ.சேவை மையம் தொடங்கப்பட்டு, இதன் மூலம் பொதுமக்களுக்கு சாதி சான்றிதழ், ண உதவி நலத்திட்ட சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் மற்றும் விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசின் சார்பில் சுகாதாரத்துறையின் மூலம் முதலமைச்சரின் விரிவான மருத்துக்காப்பீட்டு திட்டமும், மாவட்ட தொழில் மையம் மூலம் இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற 25 சதவீத மானியம் வழங்கும் திட்டமும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் ண நிதியுதவி திட்டமும், கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகையாக ரூ.18000 வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
முன்னதாக இவ்விழாவில் 9 நபர்களுக்கு ரூ.3,15,000 மதிப்பில் மாற்றுத்திறனாளிகள் கடன் உதவித்தொகையும், 758 நபர்களுக்கு ரூ.1,74,15,000 மதிப்பில் மகளிர் சுயஉதவிக்குழு கடன் தொகையும், 214 நபர்களுக்கு ரூ.1,77,79,600 மதிப்பில் முதலீட்டுக்கடன் தொகையும், 3 நபர்களுக்கு ரூ.12,00,000 மதிப்பில் வீட்டு அடமானக் கடன் தொகையும், 10 நபர்களுக்கு ரூ.29,70,000 மதிப்பில் சம்பளக்கடன் தொகையும், 49 நபர்களுக்கு ரூ4,90,000 மதிப்பில் சிறு வணிக கடன் தொகையும், 22 நபர்களுக்கு ரூ.11,01,26,322 மதிப்பில் பணியாளர் சிக்கன நாணயச்சங்க கடன் தொகையும் என மொத்தம் 1065 நபர்களுக்கு ரூ.15,02,95,922 மதிப்பில் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையர் டாக்டர்.அனீஷ்சேகர், மண்டல இணைப்பதிவாளர் வி.எம்.சந்திரசேகரன், இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குநர் பி.செந்தில்குமார், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கி லிட்., பெருந்தலைவர் கே.துரைபாண்டியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
செங்கோட்டையன் நீக்கம் ஏன்? - இ.பி.எஸ். பரபரப்பு விளக்கம்
01 Nov 2025சேலம் : செங்கோட்டையன் கட்சியில் இருந்து ஏன் நீக்கப்பட்டார் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். அப்போது அ.தி.மு.க.
-
முதியோர்- மாற்றுத்திறனாளிகளுக்கான 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தின் வயது வரம்பு தளர்வு
01 Nov 2025சென்னை, வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்திற்கான வயது வரம்பை 70 வயதில் இருந்து 65 வயதாக தமிழக அரசு தளர்த்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-11-2025.
01 Nov 2025 -
மண்டல பூஜைக்காக சபரிமலையில் நடை வரும் 16-ம் தேதி திறப்பு
01 Nov 2025திருவனந்தபுரம் : சபரிமலையில் மண்டல பூஜைக்காக வருகிற 16-ம் தேதி முதல் நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மருத்துவமனையில் இருந்து ஷ்ரேயாஸ் டிஸ்சார்ஜ்
01 Nov 2025சிட்னி : ஷ்ரேயாஸ் அய்யர் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
விலா பகுதியில்...
-
சட்டப்பேரவையில் அ.தி.மு.க. அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை : சபாநாயகர் அப்பாவு பேட்டி
01 Nov 2025நெல்லை : அ.தி.மு.க. அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
-
ஆந்திரா கூட்ட நெரிசல்: பிரதமர் மோடி இரங்கல்
01 Nov 2025விசாகப்பட்டினம் : ஆந்திரா கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
ஆஸி.க்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? - இன்று 3-வது டி-20 போட்டியில் மோதல்
01 Nov 2025ஹோபர்ட் : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இன்று நடைபெறும் 3-வது டி20 போட்டியில் வெற்றிப்பெற்று இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்று ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
-
இந்திய கலாச்சாரம் குறித்து ராகுலுக்கு தெரியவில்லை : பீகார் பிரச்சாரத்தில் அமித்ஷா தாக்கு
01 Nov 2025பாட்னா : ராகுலுக்கு இந்திய கலாச்சாரம் தெரியவில்லை என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
கடலில் மூழ்கி உயிரிழந்த 4 பெண்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
01 Nov 2025சென்னை : பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக 4 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
அதிநவீன சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன எல்.வி.எம்.–3 எம்5 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
01 Nov 2025திருப்பதி, கடலோர எல்லைகளைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சுமார் ரூ.1,600 கோடியில் 4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன சிஎம்எஸ்–03 செயற்கைக்கோள் எல்.வி.எம்.-3 ராக்கெட
-
தெரு நாய் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தது தமிழக அரசு
01 Nov 2025புதுடெல்லி : தெரு நாய் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.
-
தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் 70,449 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்
01 Nov 2025சென்னை : தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் 70,449 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்: இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது நியூசிலாந்து அணி
01 Nov 2025வெலிங்டன் : இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது நியூசிலாந்து அணி.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் குறித்து ஆலோசனை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்: த.வெ.க. உள்ளிட்ட 60 கட்சிகளுக்கு தி.மு.க. அழைப்பு
01 Nov 2025சென்னை, வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க தி.மு.க. சார்பில் த.வெ.க.
-
கொள்முதல் விரைவாக நடைபெறுகிறது: லாரிகளில் நெல் எடுத்து செல்வதில் எந்த தாமதமும் இல்லை: அமைச்சர்
01 Nov 2025சென்னை : நெல் கொள்முதல் விரைவாக நடைபெறுகிறது என்றும் லாரிகளில் நெல் எடுத்துச் செல்வதில் எந்த தாமதமும் இல்லை என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
நெல் கொள்முதல் குறித்து அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
01 Nov 2025சென்னை : நெல் கொள்முதல் குறித்து அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.
-
மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது : சத்தீஸ்கரில் பிரதமர் மோடி பேச்சு
01 Nov 2025ராய்ப்பூர் : மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உலகில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் முதலில் உதவிக்க
-
அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு: தான்சானியா வன்முறையில் 700 பேர் பலி
01 Nov 2025டொடோமா : கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறையில் 700 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அரசியல் கட்சி கூட்டங்களுக்கு புதி வழிகாட்டு நெறிமுறைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
01 Nov 2025சென்னை, தமிழ்நாட்டில் அரசியல் கட்சி கூட்டங்களுக்கான புதிய ேவழிகாட்டு நெறிமுறைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
-
இந்தியாவின் தொலைநோக்கு பார்வை தெளிவாக உள்ளது : மலேசியாவில் ராஜ்நாத் சிங் பேச்சு
01 Nov 2025கோலாலம்பூர் : இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை எப்போதும் தெளிவாக உள்ளது என்றும், அனைத்து வித அழுத்தங்களில் இருந்தும் இந்தோ - பசிபிக் விடுபட வேண்டும் என்பதே இந்தியாவின் க
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்த நடிகர் அஜித்
01 Nov 2025சென்னை : கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல என்று நடிகர் அஜித்குமார் முதல்முறையாக அந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
-
நான் மக்களுக்காக உழைத்தேன், என் குடும்பத்திற்காக அல்ல: நிதிஷ் குமார்
01 Nov 2025பாட்னா, பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நிதிஷ்குமார் நான் மக்களுக்காக உழைத்தேன் என் குடும்பத்திற்காக அல்ல என்று தெரிவித்தார்.
-
ரஷ்யப் படைகளுக்கு வினியோகம் செய்யும் முக்கிய எரிபொருள் பைப்லைனை தாக்கி அழித்தது உக்ரைன் படைகள்
01 Nov 2025மாஸ்கோ : ரஷ்யாவின் எரிபொருள் கட்டமைப்புகளை குறி வைத்து உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
கண்ணகி நகரில் உருவாகும் கபடி மைதானத்தை நேரில் ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி
01 Nov 2025சென்னை, கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.


