எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை.-மதுரை மாவட்டம், பழங்காநத்தத்தில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ், தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு 1065 நபர்களுக்கு ரூ.15,02,95,922 மதிப்பில் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசும் பொழுது தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கி மூலம் கடன்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் அம்மா அவர்களின் ஆட்சியில் கூட்டுறவுத்துறை மகத்தான வளர்ச்சி அடைந்து இந்தியாவிற்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது.
2016 நவம்பர் 23ந் தேதி 1755 கோடி ரூபாய் நபார்டு வங்கி உதவியுடன் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை அறிந்து கேரளா, ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் தங்களது மாநிலங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்தினார்கள். கடந்த 6 ஆண்டுகளில் அனைத்து கூட்டுறவு வங்கிகளும், வாடிக்கையாளர்களுக்கு முழுமையான தொழில்நுட்ப வசதிகளை வழங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளுக்கு இணையாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகளில் இதுவரை எவ்வித ்டு நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி பணத்தினை முதலீடு செய்து பயன்பெறலாம்.
கூட்டுறவு வங்ககளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 7 சதவீதத்திலிருந்து 21 சதவீதம் ஊதிய உயர்வினை அம்மா வழங்கினார்கள். மேலும் அனைத்து பணியாளர்களுக்கு மருத்துவக்காப்பீடு வசதி செய்து தரப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் செயல்படும் நியாய விலைக்கடைகள் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் விலையில்லா அரிசி மற்றும் பல்வேறு உணவுப்பொருட்களை மலைப் பிரதேசத்திலுள்ள மக்களுக்கும் வழங்கி இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.
கடந்த 6 ஆண்டுகளில் 31.03.2017 முடிய மாநில அளவில் 58,57,408 விவசாயிகளுக்கு ரூ.27,422.22 கோடியும், மதுரை மாவட்டத்தில் மட்டும் 92,384 விவசாயிகளுக்கு ரூ.569.85 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. வறட்சி நிவாரணமாக தமிழகம் முழுவதும் உள்ள 19,45,568 விவசாயிகளுக்கு ரூ.1,284.58 கோடியும், மதுரை மாவட்டத்தில் 52,777 விவசாயிகளுக்கு ரூ.22.75 கோடியும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும் பொழுது தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மதுரை மாவட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 1065 பயனாளிகளுக்கு ரூ.15கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் இன்று (22.08.2017) வழங்கப்படவுள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு பல் உதவிகளை கூட்டுறவு சங்கம் மூலம் செய்து வரும் முதல் அரசு தமிழக அரசு தான். இது இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது மிகவும் பழமையான வங்கி ஆகும். இந்த வங்கி 43 கிளைகள் கொண்டு பல்வேறு கடன் உதவிகள் மற்றும் பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.
கூட்டுறவு வங்கி மூலம் தான் சில பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடிகிறது. மேலும் இக்கூட்டுறவு சங்கங்களின் மூலம் செயல்படுத்தப்படும் அம்மா மருந்தகம் 15 சதவீதம் தள்ளுபடி விற்பனையில் ஏழை, எளிய மக்களுக்கு மருந்துப்பொருட்களை வழங்கி வருகிறது. பொது விநியோகத்திட்டத்தின் கீழ் விலையில்லா அரிசி மற்றும் பல்வேறு உணவுப்பொருட்களை நியாயவிலைக்கடை மூலம் வழங்கி வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள சுமார் 2.5 இலட்சம் குடும்ப அட்டைகள் அனைத்தும் மின்னணு குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களின் விபரங்களை குறுஞ்செய்தி வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
மேலும் அனைத்து ஊரக மற்றும் நகரப்பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் இ.சேவை மையம் தொடங்கப்பட்டு, இதன் மூலம் பொதுமக்களுக்கு சாதி சான்றிதழ், ண உதவி நலத்திட்ட சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் மற்றும் விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசின் சார்பில் சுகாதாரத்துறையின் மூலம் முதலமைச்சரின் விரிவான மருத்துக்காப்பீட்டு திட்டமும், மாவட்ட தொழில் மையம் மூலம் இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற 25 சதவீத மானியம் வழங்கும் திட்டமும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் ண நிதியுதவி திட்டமும், கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகையாக ரூ.18000 வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
முன்னதாக இவ்விழாவில் 9 நபர்களுக்கு ரூ.3,15,000 மதிப்பில் மாற்றுத்திறனாளிகள் கடன் உதவித்தொகையும், 758 நபர்களுக்கு ரூ.1,74,15,000 மதிப்பில் மகளிர் சுயஉதவிக்குழு கடன் தொகையும், 214 நபர்களுக்கு ரூ.1,77,79,600 மதிப்பில் முதலீட்டுக்கடன் தொகையும், 3 நபர்களுக்கு ரூ.12,00,000 மதிப்பில் வீட்டு அடமானக் கடன் தொகையும், 10 நபர்களுக்கு ரூ.29,70,000 மதிப்பில் சம்பளக்கடன் தொகையும், 49 நபர்களுக்கு ரூ4,90,000 மதிப்பில் சிறு வணிக கடன் தொகையும், 22 நபர்களுக்கு ரூ.11,01,26,322 மதிப்பில் பணியாளர் சிக்கன நாணயச்சங்க கடன் தொகையும் என மொத்தம் 1065 நபர்களுக்கு ரூ.15,02,95,922 மதிப்பில் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையர் டாக்டர்.அனீஷ்சேகர், மண்டல இணைப்பதிவாளர் வி.எம்.சந்திரசேகரன், இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குநர் பி.செந்தில்குமார், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கி லிட்., பெருந்தலைவர் கே.துரைபாண்டியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இம்ரான்கானை தனிமை சிறையில் அடைத்து சித்ரவதை: பாகிஸ்தான் எம்.பி. குற்றச்சாட்டு
30 Nov 2025லாகூர், : தனிமை சிறையில் இம்ரான்கானை அடைத்து சித்ரவதை செய்யப்படுவதாக பாகிஸ்தான் எம்.பி. குற்றச்சாட்டியுள்ளார்.
-
தென்காசி அருகே விபத்து: கவுன்சிலர் உட்பட 3 பேர் பலி
30 Nov 2025தென்காசி : சுரண்டை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் காங்கிரஸ் கவுன்சிலர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
62-வயதில் ஆஸ்திரேலியா பிரதமர் காதல் திருமணம் : பிரதமருக்கு நரேந்திரமோடி வாழ்த்து
30 Nov 2025புதுடெல்லி : 62-வயதில் காதல் திருமணம் செய்து கொண்ட ஆஸ்திரேலியா பிரதமருக்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கூட்ட நெரிசல் சம்பவம்: சுப்ரீம் கோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி இன்று கரூர் வருகை
30 Nov 2025கரூர் : கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்தி வரும் விசாரணையை கண்காணிக்க சுப்ரீம் கோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி இன்று கரூர் வருகிறார்.
-
விரைவில் முழு கொள்ளளவை எட்டும் செம்பரம்பாக்கம் ஏரி : பூண்டி ஏரியில் 4 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்
30 Nov 2025சென்னை : புயல் எச்சரிக்கையையொட்டி ஏற்கெனவே முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 2,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
-
இந்த ஆண்டும் திருவண்ணாமலை கோவிலில் பக்தர்களின் பாதுகாப்பு கருதி மகா தீபத்தன்று மலை ஏறத்தடை
30 Nov 2025தி.மலை : 'டித்வா' புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மிக கனமழை பொழிவதற்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வரும் புதன் கிழமை மகா தீபத்
-
உத்தரகாண்டில் நிலநடுக்கம்
30 Nov 2025டேராடூன் : உத்தரகண்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.
-
உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் பட்டியல் ஜப்பானை பின்னுக்குத்தள்ளி 3-வது இடத்திற்கு முன்னேற்றிய இந்தியா
30 Nov 2025புதுடெல்லி : லோவி இன்ஸ்டிடியூட் என்ற குழு ‘ஆசிய சக்தி குறியீடு' மூலம் உலகில் தலைசிறந்த நாடுகள் எவை? என்ற பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
-
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: 4 பேர் பலி
30 Nov 2025நியூயார்க் : அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியான சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விமானப்படையின் 80-வது ஆண்டு விழா: வான்சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்த அதிபர் கிம்
30 Nov 2025பியாங்யாங் : வடகொரிய விமானப்படையின் 80-வது ஆண்டு விழாவில் வான்சாகச நிகழ்ச்சியை அதிபர் கிம் கண்டுகளித்தார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக கவர்னர் சாமி தரிசனம்
30 Nov 2025திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
-
எந்த விமானமும் பறக்கக் கூடாது: வெனிசுலாவின் வான்வெளி மூடப்படுவதாக ட்ரம்ப் அறிவிப்பு
30 Nov 2025நியூயார்க் : வெனிசுலாவின் வான்வெளி மூடப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல், சோனியா எதிராக புதிதாக எப்.ஐ.ஆர். பதிவு
30 Nov 2025புதுடெல்லி : நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் ராகுல்காந்தி, சோனியா மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கர்நாடகாவில் சோகம்: விபத்தில் ஒரே குடும்பத்தினர் 5 பேர் பலி
30 Nov 2025நகரி : கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் கோவிலுக்கு சென்றபோது, சாலையில் எதிர் திசையில் வேகமாக வந்த மற்றொரு கார் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
-
இங்கிலாந்தில் இந்தியர் குத்திக்கொலை
30 Nov 2025லண்டன் : இங்கிலாந்தில் உயர்கல்வி பயின்று வந்த அரியானவை சேர்ந்த இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
-
டெல்லியில் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் : ராமதாஸ் அறிவிப்பு
30 Nov 2025சென்னை : தேர்தல் ஆணையத்தின் மோசடி நடவடிக்கையை கண்டித்து டெல்லியில் 04.12.2025 வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு பா.ம.க.
-
'டித்வா' புயலால் இலங்கையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 190 ஆக உயர்வு
30 Nov 2025கொழும்பு : டித்வா புயலால் இலங்கை முழுவதும் 9.68 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 190 ஆக உயர்ந்துள்ளது.
-
டித்வா புயல் எதிரொலி: சென்னையில் 2-வது நாளாக 47 விமானங்கள் சேவை ரத்து
30 Nov 2025சென்னை : டித்வா புயல் காரணமாக, சென்னையில் 2-வது நாளாக நேற்றும் 47 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.
-
டித்வா புயல்: தேவையான உதவிகளை மக்களுக்கு செய்ய நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்
30 Nov 2025சென்னை : டித்வா புயல் காரணமாக பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள களத்தில் தயாராக இருக்குமாறு அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
-
கார்த்திகை தீப திருவிழா வரலாறு
30 Nov 2025தி.மலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் கார்த்திகை தீபத்திருவிழா வரலாறு வருமாறு:-
-
கோவையில் கொள்ளை சம்பவத்தில் சுட்டுப்பிடிக்கப்பட்ட 3 பேரில் ஒருவன் சிகிச்சை பலனின்றி பலி
30 Nov 2025கோவை : கோவை கொள்ளை சம்பவத்தில் சுட்டுப்பிடிக்கப்பட்ட 3 பேர்களில் ஒருவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலைியல் ஆசிப் என்பவர் சிகிச்சை பலனின
-
காசாவில் இடிந்த கட்டிடங்களில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான உடல்கள் மீட்பு
30 Nov 2025டெல்அவீவ் : இஸ்ரேல் படைகளின் பல்வேறு உக்கிரமான தாக்குதல்களினால் காசாவில் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் 10,000-க்கும் அதிகமான உடல்கள் சிக்கியிருக்கின்றன என்றும், அ
-
டெல்லியில் தீவிபத்து: 4 பேர் பலி
30 Nov 2025டெல்லி : தலைநகர் டெல்லியில் நடந்த தீவிபத்தில் ஒரு சகோதரி மற்றும் சகோதரர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
-
தமிழ கவர்னரின் கோரிக்கை ஏற்பு: 'ராஜ்பவன்' பெயர் 'லோக் பவன்' என மாற்றம்
30 Nov 2025சென்னை : தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில், இந்தியா முழுவதும் உள்ள ராஜ்பவன்கள் 'லோக் பவன்' என்றும் (மக்கள் பவன்), ராஜ் நிவாஸ்கள் 'லோக்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-12-2025.
01 Dec 2025


