எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை.-மதுரை மாவட்டம், பழங்காநத்தத்தில் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ், தலைமையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு 1065 நபர்களுக்கு ரூ.15,02,95,922 மதிப்பில் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பேசும் பொழுது தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கி மூலம் கடன்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் அம்மா அவர்களின் ஆட்சியில் கூட்டுறவுத்துறை மகத்தான வளர்ச்சி அடைந்து இந்தியாவிற்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறது.
2016 நவம்பர் 23ந் தேதி 1755 கோடி ரூபாய் நபார்டு வங்கி உதவியுடன் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனை அறிந்து கேரளா, ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் தங்களது மாநிலங்களிலும் இத்திட்டத்தை செயல்படுத்தினார்கள். கடந்த 6 ஆண்டுகளில் அனைத்து கூட்டுறவு வங்கிகளும், வாடிக்கையாளர்களுக்கு முழுமையான தொழில்நுட்ப வசதிகளை வழங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளுக்கு இணையாக மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு வங்கிகளில் இதுவரை எவ்வித ்டு நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. கூட்டுறவு வங்கிகளில் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி பணத்தினை முதலீடு செய்து பயன்பெறலாம்.
கூட்டுறவு வங்ககளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 7 சதவீதத்திலிருந்து 21 சதவீதம் ஊதிய உயர்வினை அம்மா வழங்கினார்கள். மேலும் அனைத்து பணியாளர்களுக்கு மருத்துவக்காப்பீடு வசதி செய்து தரப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மூலம் செயல்படும் நியாய விலைக்கடைகள் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் விலையில்லா அரிசி மற்றும் பல்வேறு உணவுப்பொருட்களை மலைப் பிரதேசத்திலுள்ள மக்களுக்கும் வழங்கி இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.
கடந்த 6 ஆண்டுகளில் 31.03.2017 முடிய மாநில அளவில் 58,57,408 விவசாயிகளுக்கு ரூ.27,422.22 கோடியும், மதுரை மாவட்டத்தில் மட்டும் 92,384 விவசாயிகளுக்கு ரூ.569.85 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. வறட்சி நிவாரணமாக தமிழகம் முழுவதும் உள்ள 19,45,568 விவசாயிகளுக்கு ரூ.1,284.58 கோடியும், மதுரை மாவட்டத்தில் 52,777 விவசாயிகளுக்கு ரூ.22.75 கோடியும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசும் பொழுது தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க மதுரை மாவட்டத்தில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் 1065 பயனாளிகளுக்கு ரூ.15கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் இன்று (22.08.2017) வழங்கப்படவுள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு பல் உதவிகளை கூட்டுறவு சங்கம் மூலம் செய்து வரும் முதல் அரசு தமிழக அரசு தான். இது இந்தியாவிற்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது மிகவும் பழமையான வங்கி ஆகும். இந்த வங்கி 43 கிளைகள் கொண்டு பல்வேறு கடன் உதவிகள் மற்றும் பல்வேறு சேவைகளை செய்து வருகிறது.
கூட்டுறவு வங்கி மூலம் தான் சில பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடிகிறது. மேலும் இக்கூட்டுறவு சங்கங்களின் மூலம் செயல்படுத்தப்படும் அம்மா மருந்தகம் 15 சதவீதம் தள்ளுபடி விற்பனையில் ஏழை, எளிய மக்களுக்கு மருந்துப்பொருட்களை வழங்கி வருகிறது. பொது விநியோகத்திட்டத்தின் கீழ் விலையில்லா அரிசி மற்றும் பல்வேறு உணவுப்பொருட்களை நியாயவிலைக்கடை மூலம் வழங்கி வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள சுமார் 2.5 இலட்சம் குடும்ப அட்டைகள் அனைத்தும் மின்னணு குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களின் விபரங்களை குறுஞ்செய்தி வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
மேலும் அனைத்து ஊரக மற்றும் நகரப்பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் இ.சேவை மையம் தொடங்கப்பட்டு, இதன் மூலம் பொதுமக்களுக்கு சாதி சான்றிதழ், ண உதவி நலத்திட்ட சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயத்திற்கு தேவையான உரங்கள் மற்றும் விதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இது மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசின் சார்பில் சுகாதாரத்துறையின் மூலம் முதலமைச்சரின் விரிவான மருத்துக்காப்பீட்டு திட்டமும், மாவட்ட தொழில் மையம் மூலம் இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற 25 சதவீத மானியம் வழங்கும் திட்டமும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் ண நிதியுதவி திட்டமும், கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகையாக ரூ.18000 வழங்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
முன்னதாக இவ்விழாவில் 9 நபர்களுக்கு ரூ.3,15,000 மதிப்பில் மாற்றுத்திறனாளிகள் கடன் உதவித்தொகையும், 758 நபர்களுக்கு ரூ.1,74,15,000 மதிப்பில் மகளிர் சுயஉதவிக்குழு கடன் தொகையும், 214 நபர்களுக்கு ரூ.1,77,79,600 மதிப்பில் முதலீட்டுக்கடன் தொகையும், 3 நபர்களுக்கு ரூ.12,00,000 மதிப்பில் வீட்டு அடமானக் கடன் தொகையும், 10 நபர்களுக்கு ரூ.29,70,000 மதிப்பில் சம்பளக்கடன் தொகையும், 49 நபர்களுக்கு ரூ4,90,000 மதிப்பில் சிறு வணிக கடன் தொகையும், 22 நபர்களுக்கு ரூ.11,01,26,322 மதிப்பில் பணியாளர் சிக்கன நாணயச்சங்க கடன் தொகையும் என மொத்தம் 1065 நபர்களுக்கு ரூ.15,02,95,922 மதிப்பில் கடன் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையர் டாக்டர்.அனீஷ்சேகர், மண்டல இணைப்பதிவாளர் வி.எம்.சந்திரசேகரன், இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குநர் பி.செந்தில்குமார், மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கி லிட்., பெருந்தலைவர் கே.துரைபாண்டியன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
கும்பகோணம்-தஞ்சை சாலையில் விபத்து - 4 பேர் பலி
08 Jul 2025தஞ்சை : சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய பேராசிரியை நிகிதா மீண்டும் கல்லூரி பணிக்கு திரும்பினார்
08 Jul 2025திண்டுக்கல் : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய நிகிதா மீண்டும் பணிககு திரும்பினார்.
-
டான் பிராட்மேன் போல... கில்லுக்கு ரவி சாஸ்திரி புகழாரம்
08 Jul 2025மும்பை : 0-1 என பின் தங்கியிருந்த இந்தியாவை டான் பிராட்மேன் போல விளையாடி சுப்மன் கில் தூக்கி நிறுத்தியதாக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி பாராட்டியுள்ளார்.
-
3-வது டெஸ்ட் போட்டி: பும்ராவுக்கு பிரசித் கிருஷ்ணா வழி விட வேண்டும்: கவாஸ்கர்
08 Jul 2025லண்டன் : 3-வது டெஸ்ட் போட்டியில், பும்ராவுக்கு பிரசித் கிருஷ்ணா வழி விட வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
-
இஸ்ரேலுடனான போரில் இதுவரை 1,060 பேர் பலி : ஈரான் அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
08 Jul 2025தெஹ்ரான் : இஸ்ரேல் தாக்குதலில் 1,190 பேர் ஈரானில் பலியாகி உள்ளனர் என வாஷிங்டனை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகளுக்கான செயற்பாட்டாளர்கள் குழு தெரிவித்து உள்ளது.
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு: முதல்முறையாக, பொதுமக்களே தங்கள் பெயரை சேர்க்கும் வசதி
08 Jul 2025புதுடெல்லி : மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் பெயரை சேர்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
-
டெக்சாஸ் வெள்ளத்தில் 81 பேர் பலி
08 Jul 2025வாஷிங்டன் : டெக்சாஸ் ஏற்பட்ட வெள்ளத்தில் 81 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள்: அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தகவல்
08 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கி வரும் ராணுவ உதவிகள் நிறுத்தப்படும் என கடந்த வாரம் வெள்ளை மாளிகை அறிவித்திருந்த நிலையில் தற்போது கூடுதல் ஆயுதங்களை வழங்கவுள்ளோம்
-
சி.எஸ்.கே. 3-வது இடத்துக்கு சரிந்தது: ஐ.பி.எல். பிராண்ட் மதிப்பில் ஆர்.சி.பி. அணிக்கு முதலிடம்
08 Jul 2025மும்பை : ஆர்.சி.பி. அணியின் பிராண்ட் மதிப்பு 227 மில்லியனாக இருந்து 269 மில்லியனாக அதிகரித்துள்ளது.
-
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை இறக்குமதி வரிக்கான கால அவகாசத்தை நீட்டித்த அமெரிக்கா
08 Jul 2025வாஷிங்டன் : இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான இறக்குமதி வரி விதிப்பு அமலாகும் கால அவகாசத்தை அமெரிக்க அரசு ஆகஸ்ட் 1ம் தேதி வரை நீட்டித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-07-2025.
09 Jul 2025 -
குஜராத்த்தில் பாலம் இடிந்து 10 பேர் பலி: ரூ.2 லட்சம் நிவாரண நிதி அறிவித்த பிரதமர் மோடி
09 Jul 2025காந்திநகர் : குஜராத் பாலம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
நம் உரிமைகளை பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான்: கனிமொழி எம்.பி. பேச்சு
09 Jul 2025தூத்துக்குடி, நம்முடை உரிமைகளையும் பாதுகாக்கக்கூடிய ஆட்சி தி.மு.க. ஆட்சி மட்டும்தான் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
குஜராத்: பால விபத்தில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
09 Jul 2025ஆனந்த் : குஜராத்தில் திடீரென பாலம் இடிந்து வாகனங்கள் ஆற்றில் விழுந்தது இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
நீதிமன்றத்தைவிட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மேலானவரா..? - அரசு அதிகாரிக்கு நீதிபதி கேள்வி
09 Jul 2025சென்னை : ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவர் என தன்னை நினைத்துக் கொள்கிறாரா?
-
திருத்தணியில் 14ம்தேதி அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம்: இ.பி.எஸ்.
09 Jul 2025சென்னை, திருத்தணியில் ஜவுளிப் பூங்கா மற்றும் தனி வாரியம் அமைக்கப்படும் என்ற தி.மு.க.
-
உணவு கெட்டுப்போனதாக கூறி ஊழியரை தாக்கிய சிவசேனா எம்.எல்.ஏ.
09 Jul 2025மும்பை : மகாராஷ்டிரத்தில் உணவு கெட்டுப்போனதாகக் கூறி உணவக ஊழியரை, சிவசேனை எம்.எல்.ஏ. சஞ்சய் கெய்க்வாட் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
-
மத்திய அரசை கண்டித்து 'பந்த்': புதுச்சேரியில் கடைகள் அடைப்பு; தனியார் பேருந்துகள் ஓடவில்லை
09 Jul 2025புதுச்சேரி, மத்திய அரசை கண்டித்தும்,17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரியில் நேற்று (ஜூலை 9) பந்த் நடந்தது.
-
பொது வேலைநிறுத்தம் எதிரொலி: தமிழ்நாடு - கேரளா இடையே பஸ்கள் இயக்கப்படவில்லை
09 Jul 2025கோவை, தமிழ்நாட்டிற்கு வழக்கமாக இயக்கப்படும் கேரளா அரசு பஸ்களும் இயக்கப்படவில்லை.இரு மாநிலங்களுக்கு இடையே பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
-
ராஜஸ்தானில் கனமழைக்கு திறப்பதற்கு முன்பே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட புதிய சாலை
09 Jul 2025ராஜஸ்தான் : ராஜஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில், புதிதாக அமைக்கப்பட்ட சாலை திறப்பதற்கு முன்பே அடித்து செல்லப்பட்டது.
-
பிரான்சில் திடீர் காட்டுத்தீ: 700 ஹெக்டேர் நிலப்பரப்பு எரிந்து நாசம்
09 Jul 2025பாரீஸ் : பிரான்சில் காட்டுத்தீக்கு 13 பேர் காயம் அடைந்தனர். இதில் 700 ஹெக்டேர் நிலப்பரப்பு தீயில் எரிந்தது.
-
சுங்கச்சாவடிகளில் அரசு பஸ்களுக்கு தடை? ஐகோர்ட்டில் அரசுத்தரப்பில் முறையீடு
09 Jul 2025சென்னை, தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச்சாவடிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் அரசு பஸ்களை அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், அரசுத்தரப்பில் முறையீ
-
பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும்: சீனாவின் அணையால் இந்தியாவுக்கு ஆபத்து : அருணாசல் முதல்வர் எச்சரிக்கை
09 Jul 2025பெய்ஜிங் : பிரம்மப்புத்திரா நதியின் குறுக்கே புதிய அணையால் இந்தியாவுககு ஆபத்து என்று அருணாசல முதல்வர் எச்சரித்துள்ளார்.
-
பிரதமர் நரேந்திர மோடிக்கு நமீபியாவில் உற்சாக வரவேற்பு: மேளம் கொட்டி உற்சாகம்
09 Jul 2025விந்தோக், நமீபியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு உள்ளது. அங்கு மேளம் கொட்டி பிரதமர் மோடி மகிழ்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
கடலூர் ரயில் விபத்திற்கு காரணம்? - வெளியான தகவலால் அதிர்ச்சி
09 Jul 2025கடலூர் : ரயில் வரும் நேரத்தில் கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தூங்கி கொண்டிருந்ததால் விபத்து நேரிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.