எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
மாஸ்கோ : அமெரிக்க, தென்கொரிய ராணுவங்கள் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அந்த நாடுகளுக்கு சவால் விடும் வகையில் கொரிய தீபகற்பத்தில் ரஷ்ய போர் விமானங்கள் பறந்துச் சென்றன. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் முற்றி வருகிறது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா மீது அமெரிக்கா அடுத்ததடுத்து பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. மேலும் அமெரிக்காவில் பணியாற்றும் ரஷ்ய தூதரக ஊழியர்களையும் வெளியேற்றி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ரஷ்ய தூதரகத்தை மூட அமெரிக்க அரசு உத்தரவிட்டது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்யா, சர்வதேச தூதரக விதிகளை அமெரிக்கா மீறி வருவதாக குற்றம் சாட்டியுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிலும் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மோதல் முற்றி வருகிறது.
இதனிடையே வடகொரியா விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அண்மையில் கூறியபோது, வடகொரியாவை மிரட்டி பணிய வைக்க முடியாது. இது தவறான அணுகுமுறை என்று எச்சரித்தார்.
வடகொரியாவின் அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆகஸ்ட் இறுதியில் அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டிருந்தன. அப்போது ரஷ்ய விமானப் படையின் அதிநவீன போர் விமானங்கள் கொரிய தீபகற்பத்தின் மீது பறந்துச் சென்றன.
இதுதொடர்பாக ரஷ்ய பாதுகாப்புத் துறை கூறியபோது, சர்வதேச எல்லையில்தான் ரஷ்ய போர்விமானங்கள் பறந்தன. வேறு எந்த நாட்டின் எல்லையிலும் நுழையவில்லை என்று விளக்கமளித்தார்.
ஏற்கெனவே சிரியா விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. தற்போது வடகொரியா விவகாரத்திலும் ரஷ்யா மறைமுகமாக தலையிடக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் ரஷ்ய போர் விமானங்கள் கொரிய தீபகற்ப பகுதியில் வட்டமடித்துள்ளன என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையில் ஐ.நா. பொது சபையின் கூட்டம் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது. இதில் ரஷ்ய அதிபர் புடின் பங்கேற்க மாட்டார் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
- ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம்: தி.மு.க. இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்: மதுரை தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஆப்கானிஸ்தான் எல்லையில் பாக்., நடத்திய தாக்குதலில் உயிரிழப்பு 80 ஆக உயர்வு
23 Feb 2026இஸ்லாமாபாத், ஆப்கனிஸ்தானுக்கு உட்பட்ட எல்லைப் பகுதிகள் மீது பாகிஸ்தான் விமானப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-க்கும் மேலாக அதிகரி
-
தங்கம் விலை உயர்வு
23 Feb 2026தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,18,880-க்கு விற்பனையானது.
-
நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி
23 Feb 2026காத்மாண்டு, நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகினர்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
23 Feb 2026- திருச்செந்தூர் முருகன் தங்க முத்துகிடா வாகனம், அம்பாள் வெள்ளி அன்னவாகனம்.
- மதுரை கூடலழகர் கஜேந்திர மோட்சம், இரவு சேசவாகனம்.
- காரமடை ரெங்கநாதர் விழா தெடக்கம்,
-
இன்றைய நாள் எப்படி?
23 Feb 2026


