முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெக்சிக்கோ நிலநடுக்கத்தின் சுவடே மறையாத நிலையில் மேலும் ஒரு நிலநடுக்கம்

சனிக்கிழமை, 23 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

மெக்சிக்கோ சிட்டி: மெக்சிக்கோ நாட்டில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மத்திய அமெரிக்க நாடான மெக்சிகோவில் கடந்த 19-ஆம் தேதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் மத்திய மெக்சிகோ பகுதியில் உள்ள மெக்சிகோ சிட்டி, மொர்லோஸ், ப்யூப்லா மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் தரைமட்டமாகின. இதனால் 273 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் அந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை குறித்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவில் 5.8-ஆக பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து