எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவகங்கை : தடைகளையெல்லாம் உடைத்தெறிந்து வெற்றிச் சின்னமாம் இரட்டை இலையை நிச்சயம் பெறுவோம் என்று சிவகங்கை விழாவில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
சிலகங்கையில் நேற்று எம்.ஜி.ஆர் .நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் திரளாக கலந்துகொண்டனர். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்தை திறந்து வைத்தார். பிறகு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்த அவர், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் ரு.39 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர்.
முன்னதாக இந்த விழாவில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
வீரம் செறிந்த மண்
இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் முதல் முதலாக வெள்ளையரை எதிர்த்து, வீரப் போர் புரிந்து, வெற்றி கண்டு, வீரமங்கை என்று பெயரெடுத்த ராணி வேலு நாச்சியார் ஆண்ட மண் சிவகங்கை. தியாகத்திற்கும், விசுவாசத்திற்கும், இலக்கணமாய் வாழ்ந்த மருது சகோதரர்கள் வாழ்ந்த பூமி, சிவகங்கை பூமி. தனது இன்னுயிரை கொடுத்து,வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை வெடிக்கச் செய்த,தியாக மங்கை, வீரத்தாய் குயிலிவளர்ந்த பூமி இந்த சிவகங்கை.வீரம் செறிந்த மண், தியாகம் நிறைந்த மண், வெற்றி திகழ்ந்த மண்,என்று தமிழகமே பெருமை கொள்ளும் இந்த சிவகங்கை சீமையில், புரட்சித் தலைவருக்கு நூற்றாண்டு விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
அ.தி.மு.க மாபெரும் இயக்கம்
எம்.ஜி. ஆர் நூற்றாண்டு விழா, மக்கள் நடத்துகிற மகத்தான விழாவாக, உலகமே வியக்கும் வகையில் நடந்து கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆரின் மங்காத மக்கள் செல்வாக்கைப் பார்த்து, நமது எதிரிகள் மலைத்துப் போயிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். உருவாக்கிய மாபெரும் இயக்கத்தை அசைக்க முடியாமல், சில உதிரிகள் களைத்துப் போயிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் மட்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் இயக்கத்தை தொடங்காமல் இருந்திருந்தால், சில சுயநலவாதிகள் கச்சத் தீவை தாரை வார்த்தது போல, தமிழ் நாட்டையே தாரை வார்த்திருப்பார்கள்.
புகழுக்காக ஏங்கியவர் அல்ல
மக்கள், தங்களது தேவைகளை கடவுளிடம் வேண்டுகிறார்கள். எங்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடு, மகிழ்ச்சியைக் கொடு, நிம்மதியைக் கொடு, பாதுகாப்பைக் கொடு என்று தங்களுக்கு வேண்டியதை ஆண்டவனிடம் கேட்பார்கள். தமிழக மக்களின் இந்த வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற, நூறு ஆண்டுகளுக்கு முன்பு தனது தவப் புதல்வனை இந்த பூமிக்கு அனுப்பி வைத்தான் ஆண்டவன். அவர்தான் கொடை வள்ளல் நமது எம்.ஜி.ஆர். சிலரைப் போல, சொத்து சேர்க்க ஆசைப்பட்ட தலைவர் அல்ல நமது எம்.ஜி.ஆர். ! மக்களின் அன்பை சேர்த்தவர் நமது எம்.ஜி.ஆர் ! சிலரைப் போல, புகழுக்காக ஏங்கிய தலைவர் அல்ல நமது எம்.ஜி.ஆர்! ஏழைகளின் துன்பங்களை நீக்கி புகழின் உச்சிக்கு சென்ற தலைவர் நமது எம்.ஜி.ஆர் !சிலரைப் போல, குடும்பத்திற்காக ஆட்சி நடத்தியவர் அல்ல நமது எம்.ஜி.ஆர் !ஆட்சிக்குள்ளே குடும்பத்தின் தலையீடே இருக்கக் கூடாது என்று ஆணையிட்டவர் நமது எம்.ஜி.ஆர் ! மக்களின் பசியாற்றி, அவர்களின் வயிறும், மனமும் நிறைவதைப் பார்த்து நிம்மதி அடைந்தவர் எம்.ஜி.ஆர் ! எதிர்காலத்தை தமிழக மக்களுக்கு உருவாக்கி தந்த உன்னத தலைவர் எம்.ஜி.ஆர் ! பிறருக்கு கொடுத்து வாழ்வதையே கொள்கையாக கொண்டு வாழ்ந்த எம்.ஜி.ஆர் ! கொடுப்பதற்கு நல்ல மனம் வேண்டும். அதுவும் பிறவி குணமாக இருக்க வேண்டும்.
அம்மாவின் ஆட்சி...
ஏழைகள் இன்ப வாழ்வு பெற வேண்டும் என்பதையே தனது லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்..அந்த அன்பு மழைதான்,இன்றும்தமிழ் நாட்டையே வளப்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டிலே ஜாதிச் சண்டைகள் இல்லை. மதச் சண்டைகள் இல்லை. அதற்கு காரணம் அம்மாவின் ஆட்சி. தமிழ் நாட்டில் அடுப்பெரியாத வீடுகள் இல்லை. விளக்கெரியாத வீதிகள் இல்லை. அதற்குத் காரணம் அம்மாவின் ஆட்சி. பிள்ளைகளைப் படிக்க வைக்க வசதி இல்லையே, என்று மனம் உடையும் பெற்றோர்கள் தமிழ் நாட்டில் இல்லை. அதற்குத் காரணம் அம்மாவின் ஆட்சி.
இரட்டை இலை சின்னம்
மக்கள் பணத்தை தனக்காக சுருட்டுவது அராஜக ஆட்சி. மக்கள் பணத்தை மக்களுக்கே கொடுப்பது ஜனநாயக ஆட்சி. அந்த ஜனநாயக ஆட்சிக்குப் பெயர்தான் அம்மாவின் ஆட்சி. எம்.ஜி.ஆரை போலவே,கொடுக்கின்ற குணமும், ஏழைகளின் பசியாற்றுகின்ற குணமும், பிறவிக் குணமாய் பெற்று வந்தவர் அம்மா. எம்.ஜி.ஆர். மற்றும் அம்மா, தமிழக மக்களின் இதயத்தில் இருக்கிறார்கள். விசுவாசத் தொண்டர்களின் உள்ளத்தில் இருக்கிறார்கள். அந்த இரண்டு தெய்வங்களின் ஆசிகளோடு,தற்காலிகமாக போடப்படும் தடைகளையெல்லாம் உடைத்து, நமது வெற்றிச் சின்னமாம் இரட்டை இலையை நிச்சயம் பெறுவோம். சின்னம் நமக்குத்தான் கிடைக்கும் என்பது நன்றாகத் தெரிந்திருந்தும், மக்களை ஏமாற்ற சிலர் மனசாட்சியின்றி பொய் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 19 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
கிருஷ்ணகிரி 5 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 5 புதிய அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
-
ஒசூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரோடு ஷோ
14 Sep 2025ஒசூர் : ஒசூரில் முதல்வர் ஸ்டாலின் ரோடு ஷோ மேற்கொண்டார். ஒசூரில் ரோடு ஷோ சென்ற மு. க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
கிருஷ்ணகிரியில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில் 85,711 பேருக்கு இலவச பட்டாக்கள் வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.
-
பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2000 வழங்கிடும் அன்புக் கரங்கள் திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்து உதவித் தொகையினை வழங்குகிறார்
14 Sep 2025சென்னை : பெற்றோரை இழந்த குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில் அக்குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர
-
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தால் மக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது : மத்திய அமைச்சர் நிர்மலா பேச்சு
14 Sep 2025சென்னை : ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பொதுமக்கள் மீதான வரிச்சுமை குறைந்துள்ளது என்று மத்திய அமைச்சர் நிர்மலா தெரிவித்துள்ளார்.
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு விழா: 2,885 கோடி ரூபாயில் புதிய திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
14 Sep 2025கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில் நடந்த அரசு விழாவில் ரூ.2,885 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினா
-
திருச்சியின் வளர்ச்சியை சரியாக பார்க்கவில்லை : விஜயக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பதிலடி
14 Sep 2025திருச்சி : திருச்சியின் வளர்ச்சியை விஜய் சரியாக பார்க்கவில்லை என்று த.வெ.க. தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
நவம்பர், டிசம்பர் மாதங்களில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகும் : வானிலை முன்கணிப்பில் தகவல்
14 Sep 2025சென்னை : நவம்பர் பிற்பகுதி மற்றும் டிசம்பர் முற்பகுதியில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகக்கூடும் என்றும், புயல் சின்னங்கள் டெல்டா, வட தமிழகம், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள
-
அஸ்ஸாமில் ரூ. 5,000 கோடியில் மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
14 Sep 2025திஸ்பூர் : அஸ்ஸாம் மாநிலத்தில் கோல்கா மாவட்டத்தில் ரூ. 5,000 கோடி மதிப்பிலான மூங்கில் - எத்தனால் ஆலையை பிரதமர் மோடி தொடக்கிவைத்தார்.
-
பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும்: இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
14 Sep 2025சென்னை : இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இனி ஆண்டுதோறும் இசைஞானி இளையராஜா பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
-
விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
14 Sep 2025திருச்செந்தூர் : விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
-
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட் இன்று இடைக்கால உத்தரவு
14 Sep 2025புதுடெல்லி : மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.
-
அபராதம் இன்றி வருமான வரியை தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் : வருமான வரித்துறை தகவல்
14 Sep 2025மும்பை : ‘2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்கு இதுவரை 6 கோடிக்கும் மேல் வருமான வரிக் கணக்குகள் (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக’ வருமான வரித் துறை சாா்பில் சனிக்கிழமை தெரிவ
-
வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்: பெரம்பலூர் மாவட்டத்திற்கு நிச்சயம் மீண்டும் வருவேன் த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
14 Sep 2025சென்னை : பெரம்பலூர் மக்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ள த.வெ.க.
-
திருச்சியில் மர்மநபர்கள் துணிகரம்: வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளை : 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் விசாரணை
14 Sep 2025திருச்சி : திருச்சியில் வியாபாரியை வழிமறித்து 10 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மர்மநபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர விசாரணை நடத்தி
-
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு: எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்
14 Sep 2025சென்னை : முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-09-2025.
15 Sep 2025