முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம்: கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடந்தது

வியாழக்கிழமை, 28 டிசம்பர் 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் கே.விவேகானந்தன், தலைமையில் நடைபெற்றது. உலக வங்கி சார்பாக ஸ்மிர்தி ஷகாமுரி மணிவண்ணன் ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்று இத்திட்டம் குறித்து விளக்கமளித்தனர்.

கள ஆய்வு

நிறுவனத்திலிருந்து பி.ஜெயசித்ரா, டி.பி.ஹேமலதா மற்றும் என்.பி.மணிகண்டன் ஆகியோர்; கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் குறித்து பயிற்சி வழங்கினர்.பாலக்கோடு ஒன்றியத்தில் 32 ஊராட்சிகளிலும், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் 19 ஊராட்சிகளிலும், பென்னாகரம் ஒன்றியத்தில் 33 ஊராட்சிகளிலும் ஆக மொத்தம் தருமபுரி மாவட்டத்தில் 84 ஊராட்சிகளிலும் களஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.காளிதாசன், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் எஸ்.வெங்கடாசலம், மகளிர் திட்ட கண்காணிப்பாளர் கலையரசி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலக்கோடுபென்னாகரம்பாப்பிரெட்டிப்பட்டி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலக்கோடுபென்னாகரம்பாப்பிரெட்டிப்பட்டி, ஊராட்சி செயலர்கள் கொரவாண்டஅள்ளி கிட்டனஅள்ளிகவுண்டம்பட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து