எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கர்நாடகா தேர்தல் முடிவுகளால் இந்திய பங்குச்சந்தைகளின் வர்த்தகத்தில் ஏற்ற இறக்கமான மற்றும் நிச்சயமற்ற சூழல் நிலவியது. வர்த்தகத்தின் தொடக்கத்தில் பா.ஜ.க அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. அதனால் சென்செக்ஸ் 400 புள்ளிகள் வரையும் உயர்ந்தன. ஆனால் மதியத்துக்கு பிறகு பா.ஜ.கவுக்கு பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகள் இல்லாததால் பங்குச்சந்தைகள் சரிந்தன. தவிர திங்கள் கிழமை வெளியான பணவீக்கம் உள்ளிட்ட முக்கிய குறியீடுகளும் முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை தரவில்லை.
துறை வாரியாக பார்க்கும்போது ஆட்டோமொபைல், ஹெல்த்கேர் மற்றும் கேபிடல் குட்ஸ் ஆகிய துறைகள் சரிந்து முடிந்தன. வர்த்தகத்தின் முடிவில் சென்செக்ஸ் 12 புள்ளிகள் சரிந்து 35543 புள்ளியில் முடிந்தன. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 35993 புள்ளி வரை சென்செக்ஸ் சென்றது. குறைந்த பட்சம் 35497 வரை சரிந்தது. நிப்டி 4 புள்ளிகள் சரிந்து முடிந்தன. சென்செக்ஸ் பட்டியலில் டாடா ஸ்டீல், பவர் கிரிட், இண்டஸ்இந்த் வங்கி, டிசிஎஸ் ஆகியவை உயர்ந்தன. மாறாக டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ, கோல் இந்தியா மற்றும் சன் பார்மா ஆகிய பங்குகள் சரிந்து முடிந்தன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


