முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்னல் பென்னி குவிக் நினைவிடத்தில் ஓ.பீ.ரவீந்திரநாத் குமார் அஞ்சலி.

திங்கட்கிழமை, 18 ஜூன் 2018      தேனி
Image Unavailable

கம்பம்,- முல்லைப் பெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக் நினைவிடத்தில் தேனி மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஓ.பீ.ரவீந்திர நாத் குமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் இதன் அருகில் பென்னி குவிக்குக்கு சிலை வைக்க ஆய்வு மேற்கொண்டார். மதுரை,தேனி,திண்டுக்கல்,சிவகங்கை,இராமநாதபுரம் ஆகிய ஜந்து மாவட்ட மக்களின் நீர் ஆதரமாகவும் பாசனத்திற்கும் முக்கிய பங்கு வகிப்பது முல்லை பெரியாறு அணை.இந்த அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னி குவிக் நினைவிடம் லண்டனில் உள்ளது.இந்த நினைவிடத்தை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆசியோடு அண்ணா தி.மு.க.கழக ஓருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் உத்தரவின் பேரில் தேனி மாவட்ட அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ஓ.பீ.ரவீந்திரநாத்குமார் நேரில் சென்று லண்டனில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி  செலுத்தினார்.பின்னர் பென்னிகுவிக் உறவினர்கள் மற்றும் அங்கு வாழும் தமிழர்களை சந்தித்து நினைவிடம் அருகே பென்னிகுவிக் சிலை வைக்கும் இடத்தை ஆய்வு செய்தார்.இந்நிகழ்வில் பென்னிகுக் உறவினர்கள் லண்டன் வாழ் தமிழர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து