எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி - தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி.பழனிச்சாமி ஆகியோரின் ஆணைக்கினங்க தேனியில் காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்க பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தேனி நகர் கழக செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். பெரியகுளம் நகர செயலாளர் என்.வி.ராதா, தேனி ஒன்றிய கழக செயலாளர் ஆர்.டி.கணேசன், பெரியகுளம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் செல்லமுத்து, பெரியகுளம் ஒன்றிய கழக செயலாளர் அன்னபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், தலைமைகழக பேச்சாளர்கள் நடிகை பபிதா, இசைமுரசு ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் பேசும்போது, நமது கழக அரசு எப்பொழுதும் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும், உறுதிசெய்யும் திட்டங்களையே செயல்படுத்தியுள்ளது. தேனி, மதுரை ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் முல்லைபெரியார் அணையில் 136 அடியாக இருந்த நீர்மட்டத்தை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சட்டபோராட்டம் நடத்தி 142 அடியாக உயர்த்த வழிவகுத்தார். அதே போல் டெல்டா பகுதி மக்களின் துயர்துடைக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தில் போராடி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவை பெற்றுத்தந்தார். கழகத்தை பொறுத்தவரையில் 11 ஆண்டுகாலம் தமிழகத்தில் பொற்கால ஆட்சியை கொடுத்த கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மறைவுக்கு பின் கழகம் இரண்டாக பிரிந்து இரட்டை இலை முடக்கப்பட்டது. பின்னர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் முயற்சியில் கழகம் ஒன்றுபட்டு இரட்டை இலை சின்னம் மீட்கப்பட்டது. அதேபோல் தற்போதும் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் இணைந்து இரட்டை இலை சின்னத்தை மீட்டுள்ளனர். அவர்களின் வழியில் கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. புரட்சித்தலைவி அம்மா கூறியதுபோது இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேல் கழகம் நிலைத்திருக்கும் அதற்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.
தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன் பேசும்போது காவிரி நதிநீரின் உரிமையை தமிழகத்திற்கு பெற்று தருவதில் உறுதியாக இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் முயற்சியால் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் 22 நாட்கள் கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தை இயங்க விடாமல் போராடினோம் என்றார்.
கழக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி அவர்கள் பேசும்போது காவிரி நதிநீர் என்பது தமிழர்களின் வாழ்க்கை மேம்பாடு, வளர்ச்சியோடு ஒன்றோடு ஒன்று கலந்ததாகும். காவிரி நதி எப்போது பிறந்ததோ அன்றிலிருந்து திசை மாறாமல் ஒரே சீராக இன்று வரை சுமார் 416 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. காவிரியில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட 5ம் நூற்றாண்டிலேயே கரிகால்சோழன் காவிரியில் கல்லணையை கட்டினார். 12ம் நூற்றாண்டில் மைசூர் மன்னன் காவிரியை தடுத்து அணைகட்ட நினைத்தார். அதை அப்போதைய தமிழக மன்னரால் தடுக்கப்பட்டது. பின்னர் 17ம் நூற்றாண்டில் காவிரியில் அணை கட்ட முற்பட்டபோது சரபோகி மன்னர் மதுரைமைய ஆண்ட ராணிமங்கம்மாள் அவர்களும் இணைந்து தடுத்தனர். 1924ல் மைசூர் சமஸ்தானமும் சென்னை மாகாணமும் காவிரி பாசன பகுதிகள் எந்த வகையிலும் பாதிக்காமல் 50 ஆண்டுகால ஒப்பந்தம் செய்து கொண்டு கர்நாடகத்தில் 41 டிஎம்சி தண்ணீரை தேக்கும் வகையில் கிருஷ்ணசாகராஜ அணையும். 91 டிஎம்சி தண்ணீரை தேக்கும் வகையில் மேட்டூர் அணையும் கட்டப்பட்டது. நாடு சுதந்திரத்திற்கு பின் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபின் 1974ல் 50 ஆண்டு கால ஒப்பந்தத்தை அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி புதுப்பிக்க தவறியதால் கர்நாடகம் காவிரியில் தண்ணீர் தர மறுத்தது. அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காததால் டெல்டா பகுதி விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 1990ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வி.பி.சிங் காவிரி நடுவர் மன்றத்தை உருவாக்கினார். அதனை தொடர்ந்து காவிரி நடுவர் மன்றம் இடைக்கால நிவாரணமாக 566 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு தரவேண்டும் என்று கூறியது. அதனை கர்நாடக அரசு தராததால் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. 1991 டிசம்பம் மாதம் முதல்வராக இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை தராததை கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். 4 நாட்கள் நீடித்த அந்த உண்ணாவிரதத்தால் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் உடனடியாக காவிரியில் தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டார். அதேபோல் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எதிர்கட்சி தலைவராக இருந்தபோதும் காவிரிக்காக வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இவ்வாறு தமிழகத்தின் நலன் கருதி சட்ட போராட்டம் நடத்திய புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சீரிய முயற்சியின் காரணமாக 2018ல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. இதன்படி 15 ஆண்டு காலத்திற்கு ஒரு ஆண்டிற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும். காவிரி எந்த மாநிலத்திற்கும் சொந்தமில்லை. காவிரியில் அணை கட்டக்கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் டெல்லியில் இயங்கும். எனவே காவிரியில் தமிழகத்திற்கு கிடைத்த இந்த வெற்றிக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்களை தவிர கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. தமிழக நலனை கருத்தில் கொண்டு தான் மத்திய அரசோடு தமிழக அரசு நட்பு கொண்டுள்ளது. மேலும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ வசதி, சாலை வசதி, கல்வி வசதி, மின்வசதி ஆகியவை சிறப்பாக உள்ளது. 49 சதவிகித மாணவர்கள் உயர்கல்வி பயிலும் மாநிலமாக தமிழகம் உருவாகியுள்ளது. தற்போது கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் சிறப்பாக கட்சியையும், ஆட்சியையும் நடத்தி வருகின்றனர். அதிமுகவை உடைக்க நினைக்கின்றவர்கள் கட்சிக்கு பின்கதவு வழியாக வந்தவர்கள் தான் என்று சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பெரியகுளம் தொகுதி கழக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது: வெள்ளி விலை புதிய உச்சம்
18 Dec 2025சென்னை, தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்து விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.12,440-க்கும், சவரன் ரூ.99,520-க்கும் விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-12-2025.
18 Dec 2025 -
மத்திய அரசு சார்பில் அனைவருக்கும் ரூ.30 ஆயிரம் வழங்கப்பட உள்ளதா...? தமிழ்நாடு அரசு விளக்கம்
18 Dec 2025சென்னை, 'மத்திய அரசின் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கும் திட்டம்' என்ற பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் அது தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள
-
திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
18 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கில் ஐகோர்ட் மதுரை கிளை இரு நீதிபதிகள் அமர்வில் கடந்த 5 நாட்கள் நடந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்புக்காக த
-
தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை ஜன.1 முதல் அமல்
18 Dec 2025சென்னை, தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை அடுத்த மாதம் முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
-
நடுவானில் திடீர் பழுது: ஏர் இந்தியா விமானம் கொச்சியில் அவசர தரையிறக்கம்
18 Dec 2025கொச்சி, நடுவானில் திடீர் பழுது காரணமாக ஏர் இந்தியா விமானம் கொச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பயமில்லை பயமில்லை என்று சொல்லும் எதிரிகள் த.வெ.க.வை கண்டு கதறுகிறார்கள்: ஈரோடு பிரச்சாரத்தில் விஜய் பரபரப்பு பேச்சு
18 Dec 2025ஈரோடு, பயமில்லை பயமில்லை என்று சொல்லும் எதிரிகள் த.வெ.க.வை கண்டு கதறுகிறார்கள் என ஈரோடு பிரச்சாரத்தில் விஜய் பேசினார். மேலும், களத்தில் இருக்கும் எதிரிகளை மட்டுமே
-
காந்தியின் பெயர் நீக்கத்திற்கு எதிர்ப்பு: பார்லி. வளாகத்தில் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்
18 Dec 2025புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை திட்டத்தில் இருந்து நீக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற வளாகத்தில் உள்ள
-
தமிழகத்தில் டிச. 22-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
18 Dec 2025தமிழகத்தில் டிச. 22-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
-
ஈரோட்டில் பிரச்சாரத்தின் போது கம்பத்தில் ஏறிய ரசிகரை கண்டித்த விஜய்
18 Dec 2025ஈரோடு, த.வெ.க. தலைவர் விஜய் பேசிக் கொண்டிருந்தபோது கம்பத்தில் ஏறிய தொண்டரை, பேச்சை நிறுத்திவிட்டு அவர் கண்டித்தார்.
-
ஈரோடு பொதுக்கூட்டத்தில் தொண்டர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை வெளியிட்ட விஜய்..!
18 Dec 2025ஈரோடு, ஈரோடு பிரச்சாரத்தில் தொண்டர்களுடன் எடுத்த செல்பி வீடியோவை விஜய், தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் "நன்றி ஈரோடு" என்று பதிவிட்டுள்ளார்.
-
கலைஞர் பல்கலைக்கழக மசோதா: ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Dec 2025சென்னை, கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
-
அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி பாதிப்பு: இரு தரப்பு ஒப்பந்தங்கள் மூலம் விரைவில் தீர்வு காண வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Dec 2025சென்னை, அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ள என்றும், இதனால் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளது என்றும் பிரதமர் மோடிக்கு எழுத
-
ஈக்வடார் நாட்டில் கடந்த ஓராண்டில் மட்டும் 9 ஆயிரத்திற்கும் அதிகமான கொலை சம்பவங்கள்..!
18 Dec 2025பார்சிலோனா, ஈக்வடாரில் இந்தாண்டு மட்டும் 9,000க்கும் அதிகமான கொலைகள் நடைபெற்றுள்ளதாக அந்நாட்டின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
-
காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாள் 125 நாட்கள் என்பது ஏமாற்று வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
18 Dec 2025சென்னை, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் வேலை நாள் 125 நாட்கள் என்பது ஏமாற்று வேலையே என தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசை குளிர்விக்க ஏழைகள்
-
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது: பெயர் இல்லாதவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
18 Dec 2025சென்னை, தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
-
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே விபி-ஜி ராம்ஜி மசோதா பார்லி., மக்களவையில் நிறைவேற்றம்
18 Dec 2025புதுடெல்லி, எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மாற்றான விபி-ஜி ராம்ஜி மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 
-
அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
18 Dec 2025நியூயார்க், அமெரிக்காவின் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக தலா ரூ. 1.60 லட்சம் வழங்கப்படும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
பூந்தமல்லி பணிமனையில் இருந்து 125 மின்சார பேருந்துகள் இயக்கம்: துணை முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
18 Dec 2025சென்னை, 3-வது கட்டமாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து ரூ.214.50 கோடி மதிப்பிலான 125 மின்சார பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளது.
-
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 26 இந்தியர்கள் பலி: மத்திய அரசு
18 Dec 2025புதுடெல்லி, உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட ரஷ்ய ராணுவத்தில், 202 இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
ஈரோடு பிரச்சாரத்தில் சீமானை மறைமுகமாக விமர்சித்த விஜய்
18 Dec 2025ஈரோடு, ஈரோடு பிரச்சாரத்தில் சீமானை மறைமுகமாக விஜய் விமர்சித்ததாக இணையத்தில் பலர் தெரிவித்து வருகின்றனர்.
-
நேரு கடிதங்களை திருப்பி அளிக்க வேண்டும்: சோனியா காந்திக்கு மத்திய அரசு கடிதம்
18 Dec 2025புதுடெல்லி, கடந்த 2008-ம் ஆண்டு பெற்ற முன்னாள் பிரதமர் நேருவின் கடிதங்களை சோனியா காந்தி திருப்பி அளிக்க வேண்டும் என மத்திய அரசின் கலாச்சாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ள
-
ஜனவரி 5-ம் அ.ம.மு.க. பொதுக்குழுக்கூட்டம்: டி.டி.வி. தினகரன் அறிவிப்பு
18 Dec 2025சென்னை, அ.ம.மு.க.வின் செயற்குழு - பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெற உள்ளதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.
-
இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கான ஒரு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி
18 Dec 2025மஸ்கட், இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு புதிய திசையையும் உத்வேகத்தையும் அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூ
-
புத்தாண்டு விடுமுறைக்குப் பிறகு இலவச லேப்டாப் வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி தகவல்
18 Dec 2025சென்னை, புத்தாண்டு விடுமுறை முடிந்து மாணவர்கள் கல்லூரிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார்.


