எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேனி - தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி கழகத்தின் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி.பழனிச்சாமி ஆகியோரின் ஆணைக்கினங்க தேனியில் காவிரி நதிநீர் மீட்புப் போராட்ட வெற்றி விளக்க பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தேனி நகர் கழக செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் கிருஷ்ணகுமார் வரவேற்றார். பெரியகுளம் நகர செயலாளர் என்.வி.ராதா, தேனி ஒன்றிய கழக செயலாளர் ஆர்.டி.கணேசன், பெரியகுளம் முன்னாள் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் செல்லமுத்து, பெரியகுளம் ஒன்றிய கழக செயலாளர் அன்னபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் கழக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே.ஜக்கையன், தலைமைகழக பேச்சாளர்கள் நடிகை பபிதா, இசைமுரசு ராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் பேசும்போது, நமது கழக அரசு எப்பொழுதும் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும், உறுதிசெய்யும் திட்டங்களையே செயல்படுத்தியுள்ளது. தேனி, மதுரை ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் முல்லைபெரியார் அணையில் 136 அடியாக இருந்த நீர்மட்டத்தை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சட்டபோராட்டம் நடத்தி 142 அடியாக உயர்த்த வழிவகுத்தார். அதே போல் டெல்டா பகுதி மக்களின் துயர்துடைக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தில் போராடி காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவை பெற்றுத்தந்தார். கழகத்தை பொறுத்தவரையில் 11 ஆண்டுகாலம் தமிழகத்தில் பொற்கால ஆட்சியை கொடுத்த கழக நிறுவனர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மறைவுக்கு பின் கழகம் இரண்டாக பிரிந்து இரட்டை இலை முடக்கப்பட்டது. பின்னர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் முயற்சியில் கழகம் ஒன்றுபட்டு இரட்டை இலை சின்னம் மீட்கப்பட்டது. அதேபோல் தற்போதும் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் இணைந்து இரட்டை இலை சின்னத்தை மீட்டுள்ளனர். அவர்களின் வழியில் கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. புரட்சித்தலைவி அம்மா கூறியதுபோது இன்னும் 100 ஆண்டுகளுக்கு மேல் கழகம் நிலைத்திருக்கும் அதற்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.
தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன் பேசும்போது காவிரி நதிநீரின் உரிமையை தமிழகத்திற்கு பெற்று தருவதில் உறுதியாக இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களின் முயற்சியால் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் 22 நாட்கள் கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தை இயங்க விடாமல் போராடினோம் என்றார்.
கழக துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி அவர்கள் பேசும்போது காவிரி நதிநீர் என்பது தமிழர்களின் வாழ்க்கை மேம்பாடு, வளர்ச்சியோடு ஒன்றோடு ஒன்று கலந்ததாகும். காவிரி நதி எப்போது பிறந்ததோ அன்றிலிருந்து திசை மாறாமல் ஒரே சீராக இன்று வரை சுமார் 416 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு சென்று கொண்டிருக்கிறது. காவிரியில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட 5ம் நூற்றாண்டிலேயே கரிகால்சோழன் காவிரியில் கல்லணையை கட்டினார். 12ம் நூற்றாண்டில் மைசூர் மன்னன் காவிரியை தடுத்து அணைகட்ட நினைத்தார். அதை அப்போதைய தமிழக மன்னரால் தடுக்கப்பட்டது. பின்னர் 17ம் நூற்றாண்டில் காவிரியில் அணை கட்ட முற்பட்டபோது சரபோகி மன்னர் மதுரைமைய ஆண்ட ராணிமங்கம்மாள் அவர்களும் இணைந்து தடுத்தனர். 1924ல் மைசூர் சமஸ்தானமும் சென்னை மாகாணமும் காவிரி பாசன பகுதிகள் எந்த வகையிலும் பாதிக்காமல் 50 ஆண்டுகால ஒப்பந்தம் செய்து கொண்டு கர்நாடகத்தில் 41 டிஎம்சி தண்ணீரை தேக்கும் வகையில் கிருஷ்ணசாகராஜ அணையும். 91 டிஎம்சி தண்ணீரை தேக்கும் வகையில் மேட்டூர் அணையும் கட்டப்பட்டது. நாடு சுதந்திரத்திற்கு பின் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்பட்டபின் 1974ல் 50 ஆண்டு கால ஒப்பந்தத்தை அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி புதுப்பிக்க தவறியதால் கர்நாடகம் காவிரியில் தண்ணீர் தர மறுத்தது. அப்போதைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காததால் டெல்டா பகுதி விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 1990ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வி.பி.சிங் காவிரி நடுவர் மன்றத்தை உருவாக்கினார். அதனை தொடர்ந்து காவிரி நடுவர் மன்றம் இடைக்கால நிவாரணமாக 566 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு தரவேண்டும் என்று கூறியது. அதனை கர்நாடக அரசு தராததால் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. 1991 டிசம்பம் மாதம் முதல்வராக இருந்த புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை தராததை கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொண்டார். 4 நாட்கள் நீடித்த அந்த உண்ணாவிரதத்தால் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் உடனடியாக காவிரியில் தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டார். அதேபோல் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எதிர்கட்சி தலைவராக இருந்தபோதும் காவிரிக்காக வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். இவ்வாறு தமிழகத்தின் நலன் கருதி சட்ட போராட்டம் நடத்திய புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சீரிய முயற்சியின் காரணமாக 2018ல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. இதன்படி 15 ஆண்டு காலத்திற்கு ஒரு ஆண்டிற்கு 177.25 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும். காவிரி எந்த மாநிலத்திற்கும் சொந்தமில்லை. காவிரியில் அணை கட்டக்கூடாது. காவிரி மேலாண்மை வாரியம் டெல்லியில் இயங்கும். எனவே காவிரியில் தமிழகத்திற்கு கிடைத்த இந்த வெற்றிக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்களை தவிர கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. தமிழக நலனை கருத்தில் கொண்டு தான் மத்திய அரசோடு தமிழக அரசு நட்பு கொண்டுள்ளது. மேலும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ வசதி, சாலை வசதி, கல்வி வசதி, மின்வசதி ஆகியவை சிறப்பாக உள்ளது. 49 சதவிகித மாணவர்கள் உயர்கல்வி பயிலும் மாநிலமாக தமிழகம் உருவாகியுள்ளது. தற்போது கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் சிறப்பாக கட்சியையும், ஆட்சியையும் நடத்தி வருகின்றனர். அதிமுகவை உடைக்க நினைக்கின்றவர்கள் கட்சிக்கு பின்கதவு வழியாக வந்தவர்கள் தான் என்று சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பெரியகுளம் தொகுதி கழக நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்
04 Jul 2025சிவகங்கை, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் பிரேதபரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
-
தங்கம் விலை சற்று சரிவு
04 Jul 2025சென்னை, தங்கம் விலை நேற்று சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 72,400 ரூபாய்க்கும் விற்பனையானது.
-
ஆபரேஷன் சிந்தூரின் போது 3 எதிரிகளை எதிர் கொண்டோம்: ராணுவ துணை தலைமை தளபதி
04 Jul 2025புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரின் போது ஒரு எல்லையில் பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 எதிரிகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று ராணுவத் துணைத் தலைமை தளபதி ராகுல் ஆர்.
-
பரந்தூர் விமான நிலையம்: முதல்வருக்கு விஜய் கடிதம்
04 Jul 2025சென்னை : பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்படாது என்கிற உத்தரவாதத்தை அப்பகுதி மக்களுக்கு உடனடியாக அளிக்க வேண்டும் என என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு த
-
அரசு ஊழியர்களுக்கு அக். 1 முதல் ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
04 Jul 2025சென்னை, தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண், வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் த.வெ.க. முதல்வர் வேட்பாளர் விஜய்: பனையூர் கூட்டத்தில் 20 தீர்மானங்கள்
04 Jul 2025சென்னை, 2026 சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய். த.வெ.க. தலைமையில் தான் கூட்டணி அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
திருப்பூர் மாவட்டம் புதுப்பெண் தற்கொலை வழக்கில் மாமியார் கைது
04 Jul 2025திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் அருகே புதுப்பெண் ரிதன்யா தற்கொலை வழக்கில் மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
-
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Jul 2025சென்னை, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.10.57 கோடி செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்து, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலின் 6 பணியா
-
பரபரப்பான வாக்கெடுப்பில் அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி மசோதா 4 வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றம்
04 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிமுகம் செய்த 'பிக் பியூட்டிபுல் பில்' எனப்படும் வரி மற்றும் செலவு மசோதா காங்கிரசில் குறுகிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்
-
டிரினிடாட் - டொபாகோ பிரதமருக்கு கும்பமேளா புனிதநீரை பரிசாக வழங்கினார் பிரதமர் மோடி
04 Jul 2025போர்ட் ஆப் ஸ்பெயின் : டிரினிடாட்- டொபாகோ நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் கமலா பெர்சாத்-பிஸ்ஸேசருக்கு மகாகும்பமேளாவின் புனித நீரையும், ரா
-
கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா..? தமிழக அரசு விளக்கம்
04 Jul 2025சென்னை, வரும் ஜூன் 30-ம் தேதிக்குள் கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாது என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு தமிழக அரசு விளக்கமளித்துள
-
தி.மு.க., பா.ஜ.க.வுடன் என்றைக்கும் த.வெ.க. கூட்டணி இல்லை: விஜய்
04 Jul 2025சென்னை, தி.மு.க., பா.ஜ.க.வுடன், என்றைக்கும் நேரடியாகவோ, மறைமுகவோ கூட்டணி இல்லை, என்பதில் த.வெ.க.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
04 Jul 2025மேட்டூர் : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 19,286 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டம்: : முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
04 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் நகர வளர்ச்சியை நோக்கமாக கொண்ட கோயம்புத்தூர் 2-வது முழுமைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
அஜித்குமார் கொலை வழக்கு: நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் சாட்சியம்
04 Jul 2025சிவகங்கை : உயரதிகாரிகள் கூறியதாக, போலீஸார் அஜித்குமார் உடலை எடுத்துச் சென்றனர் என மாவட்ட நீதிபதியிடம் திருப்புவனம் அரசு மருத்துவர் கார்த்திகேயன் சாட்சியம் அளித்தார்.
-
திபெத் விவகாரத்தில் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
04 Jul 2025பெய்ஜிங் : திபெத் விவகாரத்தில் தலையிடுவதை இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது: அருள் எம்.எல்.ஏ.
04 Jul 2025சென்னை, ஜி.கே.மணி அனுமதி இல்லாமல் பா.ம.க. கொறடா பொறுப்பில் இருந்து என்னை நீக்க முடியாது என்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
-
யுவராஜ் சிங் மீண்டும் கேப்டன்
04 Jul 2025ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் தொடர் வரும் 18-ம் தேதி தொடங்க உள்ளது.
-
உக்ரைன் உடனான போர்: புதின் மீது ட்ரம்ப் அதிருப்தி
04 Jul 2025வாஷிங்டன் : உக்ரைன் உடனான போரை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நிறுத்துவார் என்று தோன்றவில்லை என்றும் அவர் விஷயத்தில் தான் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டொனா
-
ஓராண்டில் 17,702 பேர் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. தகவல்
04 Jul 2025சென்னை : டி.என்.பி.எஸ்.சி.
-
இமாச்சல்லில் மேகவெடிப்பு: 69 பேர் பலி; ரூ.700 கோடி சேதம்
04 Jul 2025சிம்லா : இமாச்சல பிரதேச மாநிலத்தில் பருவமழைக் காரணமாக ஏற்பட்ட மேகவெடிப்பு, மழை வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றால் 69 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
செஸ் விளையாடவே பிடிக்கவில்லை: குகேஷிடம் தோற்ற கார்ல்சென் விரக்தி
04 Jul 2025சாக்ரப் : தற்போதைக்கு தனக்கு செஸ் விளையாடவே பிடிக்கவில்லை என்று உலகின் நம்.1 வீரரான மாக்னஸ் கார்ல்சென் தெரிவித்துள்ளார்.
-
சொகுசு கப்பலுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அ.தி.மு.க. மறியல் போராட்டம்
04 Jul 2025புதுச்சேரி : சுற்றுலா சொகுசு கப்பல் வருகையை எதிர்த்து அ.தி.மு.க. மறியல் போராட்டம் நடத்தியது.
-
இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: காசாவில் 15 பேர் பலி
04 Jul 2025காசா சிட்டி : காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
அஜித்குமார் கொலை வழக்கில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை
04 Jul 2025சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருப்புவனத்தில் 3-வது நாளாக மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தினார்.