முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுமிகள் பலாத்கார வழக்கு: பீகார் பெண் அமைச்சர் மஞ்சு ராஜினாமா

வியாழக்கிழமை, 9 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

பாட்னா, பீகாரில் சிறுமிகள் பலாத் காரம் செய்யப்பட்ட வழக்கில், சமூக நலத்துறை அமைச்சர் மஞ்சு வர்மா ராஜினாமா செய்துள்ளார்.

பீகார் மாநிலம் முசாபர்பூரில் அரசு நிதியுதவியுடன் கூடிய ஆதரவற்றோர் இல்லம் செயல் பட்டு வந்தது. இங்கு தங்கியிருந்த 30-க்கும் மேற்பட்ட சிறுமிகள், அதிகார வர்க்கத்தினாரால் பலாத்காரம் செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இச்சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக முசாபர்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியான ரவி ரோஷன் என்பவரை சி.பி.ஐ. அதிகாரிகள் அண்மையில் கைது செய்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அவரது மனைவியிடமும் விசாரணை நடத்தினர். அப்போது, பீகார் சமூக நலத்துறை அமைச்சரான மஞ்சு வர்மாவின் கணவர் சந்தேஷ்வர் வர்மாவுக்கும், சம்பந்தப்பட்ட காப்பகத்தின் உரிமையாளர் பிரஜேஷ் தாக்குருக்கும் இடையே தொடர்பு இருந்ததாக அவர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில், சி.பி.ஐ. அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், இதுதொடர்பான பல ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றன. இந்த விசாரணை அறிக்கைகள் வெளியானதைத் தொடர்ந்து, சமூக நலத்துறை அமைச்சர் மஞ்சுவர்மாவை ராஜினாமா செய்ய வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில், கணவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று, மஞ்சுவர்மா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை பீகார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் அவர் வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து