முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிலியில் விபத்து: 3 வாகனங்கள் மோதிக் கொண்டதில் 9 பேர் பலி

வியாழக்கிழமை, 10 ஜனவரி 2019      உலகம்
Image Unavailable

சாண்டிகோ : சிலியில் நடைபெற்ற சாலை விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர். 11 பேர் காயம் அடைந்துள்ளனர்.

சிலி நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது லேக் மாவட்டம். இந்த மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2 மணியளவில், மாபில் மற்றும் வல்டிவா ஆகிய இருநகரங்களையும் இணைக்கும் இருவழிச்சாலையில், பயங்கர விபத்து நடைபெற்றது. ஒரு கார், டிரெய்லர் லாரி, வேன் என மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டன. இந்த விபத்தில், ஒரு குழந்தை உட்பட 9 பேர் பலியாகினர். 11 பேர் காயம் அடைந்தனர். 10 மாத கைக் குழந்தை மற்றும் இரண்டு நபர்களுடன் வந்த கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டிரெயிலர் லாரி மீது மோதியுள்ளது. கார் மோதியதில், லாரி நிலை தடுமாறி எதிர்திசையில் உள்ள சாலைக்கு சென்று அங்கு வந்த வேனுடன் மோதியுள்ளது. உள்ளூர் நாளிதழ்களில் இந்த செய்தி வெளியாகியுள்ளது. காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து