Idhayam Matrimony

ஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான வர்த்தக வரம்பு ரூ. 40 லட்சமாக உயர்வு

வியாழக்கிழமை, 10 ஜனவரி 2019      வர்த்தகம்
Image Unavailable

புது டில்லி : ஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 40 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் மாநில நிதி அமைச்சர்கள் பலரும் கலந்து கொண்டனர்.  இந்த கூட்டத்திற்கு பின் ஜெட்லி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஜி.எஸ்.டி. தொகுப்பு சலுகைக்கான ரூ.1.5 கோடியாக அதிகரிக்கப்படுகிறது. இது வரும் ஏப்ரல் மாதம் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த சலுகை திட்டத்தின் கீழ் வருபவர்கள், வரியை, காலாண்டிற்கு ஒரு முறை வரி சலுத்த வேண்டும். ஆனால், ஆண்டிற்கு ஒரு கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். சேவை துறையினருக்கும் இந்த திட்டத்தை அமல்படுத்த கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது. தொகுப்பு சலுகைக்கான பலன்கள், சேவை துறையினருக்கும் கிடைக்கும். ஜி.எஸ்.டி. செலுத்துவதற்கான ஆண்டு வர்த்தக வரம்பு ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 40 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 2 years 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 2 years 1 day ago
View all comments

வாசகர் கருத்து