எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிட்னி : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கேப்டன் விராட் கோலி, முன்னாள் கேப்டன் டோனியைப் பின்பற்றியதாக இளம் வீரர் மயங்க் அகர்வால் கூறியுள்ளார்.
மவுனமாகவே...
மகேந்திர சிங் டோனி, இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக் கேப்டனாக பல ஆண்டுகளாக இருந்தார். தற்போது விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக அணியில் விளையாடி வருகிறார். எவ்வளவு பெரிய இக்கட்டான நிலையிலும் டோனி களத்தில் மிகவும் மவுனமாகவே இருப்பார். போட்டியில் வெற்றி பெற்ற பிறகும், அவர் பெரிய அளவில் ஆரவாரம் செய்ய மாட்டார். அதேநேரத்தில், போட்டி முடிந்தபிறகு, அணியில் இளம் வீரராக இருப்பவர் அல்லது அறிமுக வீரரிடம் வெற்றிக் கோப்பையை கொடுப்பதை டோனி வழக்கமாக வைத்திருந்தார். அவரின் எதார்த்தமான செயலைப் பல்வேறு நேரங்களில் பார்த்திருக்கலாம்.
டோனியை போல்...
டோனியின் அமைதியான மனநிலைக்கு நேர் எதிரானவர் தற்போதையக் கேப்டன் விராட் கோலி. மைதானத்தில் ஆக்ரோசமாக கோலி செயல்படுவார். ஆனால், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் டோனியைப் போல், கோலி செயல்பட்டுள்ளார். விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று 71 ஆண்டுகால தாகத்தை தீர்த்தது. பரிசளிப்பு விழாவில் கோப்பையை வாங்கிய விராட் கோலி, அறிமுக வீரர் மயங்க் அகர்வாலிடம் கொடுத்தார்.
மிகப்பெரிய வெற்றி...
இதுகுறித்து மயங்க் அகர்வால் கூறுகையில், “இது மிகப்பெரிய வெற்றி. எனக்கும், அணிக்கும் மிகவும் பெருமையான தருணம். அனைவரும் வெற்றி மேடையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, கோப்பை வைத்திருக்குமாறு கோலி என்னிடம் கூறினார். ஒரு கிரிக்கெட் வீரருக்கு இது மிகப்பெரிய தருணம்” என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


