முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலூர் கோட்டநத்தம்பட்டி ஊராட்சி பால்பண்ணையில் 581 உறுப்பினர்களுக்கு ஊக்கத் தொகை ஆவின் சேர்மன் ஓ.ராஜா வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 5 மார்ச் 2019      மதுரை
Image Unavailable

மேலூர்-தமிழக  அரசின் மூலம் மதுரை மற்றும் தேனி மாவட்டங்களிலிருந்து சிறந்த பால் உற்பத்தியாளர்கள்  சங்கங்களுக்கான 2018-2019 ல் மேலூர் எம்.எஸ். 163 கோட்ட நத்தம்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் 2 வது பரிசு பெற்று மூன்று நட்சத்திர அந்தஸ்து பெற்றது. பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று கோட்டநத்தம்பட்டியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை ஆவின் சேர்மன் ஓ. ராஜா  581  உறுப்பினர்களுக்கு   2 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய்  ஊக்கத் தொகையை வழங்கினார். உடன் மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் என்ற செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ கே.தமிழரசன், மதுரை ஆவின் பொது மேலாளர் ஜெயஸ்ரீ, துணைப்பதிவாளர் பால்வளம் கணேசன், உதவி பொது மேலாளர்கள் வேலுச்சாமி, கார்த்திகேயன்,  மேலூர் ஒன்றிய கழக செயலாளர் பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி ஒன்றிய கழக செயலாளர் வெற்றிச்செழியன்,  புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் பெரியசாமி, அ.வல்லாளப்பட்டி பேரூர் கழக செயலாளர் வி.ஆர். மணிகண்டன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராகவன், சேர்மன் நேர்முக உதவியாளர் பிச்சையாண்டி, மேலூர் பால்சேகரிப்பு தலைவர் சீனிவாசன், கோட்ட நத்தம்பட்டி பால்பண்ணை தலைவர்  கந்தப்பன், கூட்டுறவு சங்க தலைவர்கள் கோட்டநத்தம்பட்டி அய்யாவு, அக்ரோ தலைவர் கயஸ் முகமது, சருகுவலையப்பட்டி செல்வராஜ், கல்லம்பட்டி மீராஉசேன், வெள்ளலூர் இளங்கண்ணன், தனியாமங்கலம் பூபதி, துணை தலைவர் அம்மாளு, முன்னாள் கவுன்சிலர்கள் சரவணக்குமார்,  ஓத்தப் பட்டி கண்ணன்,  சக்கரவர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்றதலைவர் கிடாரிபட்டி சுரேஷ்,  அம்மா பேரவை செயலாளர் உதயகுமார், திருவாதவூர் ஊராட்சி செயலாளர் இளவரசன்,  மேலூர் இளைஞர் பாசறை ஒன்றிய தலைவர் சிவா, அருள்பாண்டி,  கால்நடை மருத்துவர் ரவிச்சந்திரன், கரும்புச் செல்வன், செயலாளர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து