எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : பாராளுமன்ற தேர்தலின் 2-ம் கட்டமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகள் உள்பட 95 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும், தமிழகத்தில் காலியாக அறிவிக்கப்பட்ட 22 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் தயார்நிலையில் வைத்துள்ளன.
97 தொகுதிகளில்...
பாராளுமன்றத்துக்கு கடந்த 11-ம் தேதி முதல் மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக கடந்த 11-ம் தேதி 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. தமிழகம், புதுச்சேரி உட்பட மொத்தம் 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கு தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. பாராளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இன்று நடைபெறுகிறது.
வேலூர் தொகுதி...
வேலூர் தொகுதியில் தி.மு.க.வினர் பணப்பட்டுவாடா செய்வதாக வந்த புகாரின் பேரில் ரூ. 14 கோடி பறிமுதல் செய்யப்பட்டதால் அந்த தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அது போல் திரிபுராவில் நடைபெறவிருந்த ஒரு தொகுதிக்கான தேர்தல் வருகிற 23-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று 95 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பிரசாரம் நிறைவு...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. வேலூர் தொகுதி நீங்கலாக 39 தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக இன்று தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலையொட்டி கடந்த 20 நாட்களாக நடந்து வந்த பிரசாரம் நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவுக்கு வந்தது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தேனியிலும், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நாகப்பட்டினத்திலும் தங்களது பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.
பாதுகாப்பு...
பிரச்சாரம் ஓய்ந்ததை தொடர்ந்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 4 லட்சம் பேர் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு நேற்று தேர்தல் பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி நேற்று காலை முதல் நடந்தது. தமிழகத்தில் மொத்தம் 67,720 வாக்குச்சாவடிகள் உள்ளன. 8,293 வாக்குச்சாவடிகள் பதட்டமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் போலீசார் மட்டுமின்றி துணை ராணுவப் படையினரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த வாக்குச்சாவடிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு ஏற்பாடு...
வாக்குப்பதிவு சமயத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டால் தீர்த்து வைப்பதற்காகவும், வாக்குப்பதிவு சுமூகமாக நடத்துவதற்காகவும் அதிவிரைவுப்படை உருவாக்கப்பட்டுள்ளது. பிரச்சினை ஏற்படும் பகுதிகளில் அதிவிரைவுப்படையினர் விரைந்து சென்று நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். தமிழகத்தில் மொத்தம் 5.98 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக வாக்குச்சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கூடுதல் மணி நேரம்...
தமிழகத்தில் மதுரை நீங்களாக 37 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுவதால் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக மதுரை தொகுதியில் மட்டும் கூடுதலாக 2 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை அடுத்து இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
13 மாநிலங்களில்...
தமிழகம், புதுச்சேரியுடன் மொத்தம் 13 மாநிலங்களுக்கு பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. அசாம் மாநிலத்தில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 2, காஷ்மீரில் 2, கர்நாடகாவில் 14, மராட்டியத்தில் 10, மணிப்பூரில் 1, ஒடிசாவில் 5, மேற்குவங்கத்தில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் ந்டைபெறுகிறது. மத்திய அமைச்சர்கள் சதானந்தா கவுடா, பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் பிரதமர் தேவகவுடா, நடிகை ஹேமமாலினி ஆகியோரின் தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த ஒரு பவுன் தங்கம் விலை
18 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலையில் குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்தது.
-
வைகையில் கடும் வெள்ளப்பெருக்கு : விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
18 Oct 2025தேனி : தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும்: டி.டி.வி.தினகரன் தகவல்
18 Oct 2025சென்னை : விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி
18 Oct 2025சென்னை : விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா 25-ம் தேதி கோவை வருகை
18 Oct 2025கோவை, ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க கோவைக்கு வருகிற 25-ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிறார்.
-
நாடு முழுவதும் அதிகரித்துள்ள டிஜிட்டல் கைது சம்பவங்கள்: சுப்ரீம் கோர்ட் கவலை
18 Oct 2025புதுடெல்லி, நாடு முழுவதும் டிஜிட்டல் கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், டிஜிட்டல் கைது விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்
-
கள்ளக்குறிச்சியில் வீடு தீப்பிடித்து விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி
18 Oct 2025சென்னை : எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ஜி.எஸ்.டி. குறைப்பால் நுகர்வோருக்கு பலன் : நிர்மலா சீதாராமன் பெருமிதம்
18 Oct 2025சென்னை : ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது என்றும், ஜி.எஸ்.டி.
-
பீகார் துணை முதல்வரின் வயது, கல்வித்தகுதி குறித்து சர்ச்சை
18 Oct 2025பாட்னா, பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கல்வித்தகுதி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை: பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் வெளியீடு
18 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை முன்னிட்டு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்
-
காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்
18 Oct 2025வாரணாசி, காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்.
-
ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர்
18 Oct 2025ஸ்ரீராமபுரம் : ஒருதலை காதலால் விபரீதம்.. கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட இன்று முன்பதிவு தொடக்கம் : தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு
18 Oct 2025திருமலை : தீருப்பதி கோவிலில் வழிபட தரிசன டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
18 Oct 2025வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் : வானதி சீனிவாசன் விமர்சனம்
18 Oct 2025கோவை : தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
-
தீபாவளியை முன்னிட்டு வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கம்
18 Oct 2025சென்னை, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரையில் 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடம் திறப்பு
18 Oct 2025சென்னை : பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
-
கூடுதல் கட்டணம் வசூல் புகார்: ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம்
18 Oct 2025சென்னை, ஆம்னி பஸ்களுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம், விதித்து வரி வசூத்த போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
-
முற்றிலும் உள்நாட்டில் தயாரான பிரமோஸ் ஏவுகணைகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
18 Oct 2025லக்னோ : பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு இந்திய பாதுகாப்புப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்தது இந்தியா..!
18 Oct 2025புதுடெல்லி, அதிபர் ட்ரம்ப் கருத்து கூறிய நிலையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்ததுள்ளது இந்தியா.
-
சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு
18 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலை கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டார்.
-
பஞ்சாப்பில் பயணிகள் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி
18 Oct 2025அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
-
திருச்சியில் அமையும் பெரியார் உலகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.1.70 கோடி நிதியை கி.வீரமணியிடம் வழங்கினார்
18 Oct 2025திருச்சி, திருச்சி அருகே சிறுகனூரில் அமையும் 'பெரியார் உலக'த்துக்கு ரூ. 1.70 கோடி நிதியை திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணியிடம் முதல்வர் மு.க.
-
கரூர் சம்பவத்தில் நீதிபதி குறித்து அவதூறு: ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு
18 Oct 2025கரூர் : கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் வழக்கில் நீதிபதி குறித்து அவதூராக பேசியதையடுத்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 18 ஆயிரம் போலீசார் குவிப்பு
18 Oct 2025சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு பணிக்கு 18 ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.