எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தேர்தல் முடிவுகளுக்கு முன்பே காங்கிரஸ் கூட்டணியில் இருந்து தாவுவதற்கு தி.மு.க. தயாராகி விட்டது என்று அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.
தலைகுனிவார்கள்...
சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
தற்போதைய நிலையில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. அலை வீசுகிறது. ஸ்டாலின், தினகரன், சிதம்பரத்தால் அ.தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது. ஜெயலலிதாவை தினகரன் இன்று குறைகூறிப் பேசுகிறார். ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்கள் அ.ம.மு.க.வை ஏற்க மாட்டார்கள். தி.மு.க., காங்கிரஸ் கட்சியை எப்படி விமர்சனம் செய்தது என்று நினைத்து பார்க்க வேண்டும். உண்மையில் காங்கிரஸ் கட்சியினர் இதனை நினைத்து பார்த்தால் இப்படிப்பட்ட படுபாதகர்களோடு இருக்கிறோமே என்று வெட்கி தலைகுனிவார்கள். அந்த அளவுக்கு கடுமையாக வார்த்தைகளை பயன்படுத்தினார்கள். அதன் பிறகு நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என்று சொன்னார்கள். அதன் பிறகு கூடா நட்பு. கேடாய் முடியும் என்றார்கள்.
கொள்கை கிடையாது...
மதவாதக் கட்சி, மதத்தைச் சார்ந்து இருக்கும் கட்சி என்று பா.ஜ.க.வைக் கடுமையாக தி.மு.க. விமர்சனம் செய்கிறது. ஒருகாலத்திலும் அவர்களோடு கூட்டணி வைக்க மாட்டோம் என்றார்கள். பின்னர் அவர்களுடன் கூட்டணி வைத்து பல்வேறு துறைகளைப் பெற்று வளம் அடைந்தார்கள். இது போன்று தான் அவர்களுடைய பழைய வரலாறு உள்ளது. தி.மு.க.வைப் பொறுத்தவரை அரசியல் கொள்கை என்பது அவர்களுக்கு கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை ஒரே லட்சியம் பணம், பதவி. அதற்காகத்தான் இன்று பலருடன் பேசி வருகிறார்கள்.
ஒரு படகில்தான் சவாரி செய்து பார்த்திருக்கிறோம். ஆனால் மூன்று படகில் சவாரி செய்பவரை பார்க்க முடியுமா? அந்த திறமை உண்மையிலேயே ஸ்டானுக்குதான் உள்ளது. வேறு யாருக்கும் கிடையாது. காங்கிரஸ், பா.ஜ.க., சந்திரசேகர் ராவ் என மூன்று படகுகளில் தி.மு.க. சவாரி செய்கிறது. பா.ஜ.க.வுக்கு டில்லியில் இருந்து மருமகன் மூலம் தூது விடுகிறார்கள் என்று நான் ஏற்கனவே குறிப்பிட்டேன். ஒருவேளை நாங்கள் வெற்றி பெற்றால் ( தி.மு.க.) எங்களுக்கு 5 மந்திரி பதவி வேண்டும் என்று பேசுகிறார்கள். இதனைத் தமிழக பா.ஜ.க. தலைவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
மறுப்பு தெரிவித்தாரா?
சந்திரசேகர் ராவ் பேசியது குறித்து ஸ்டாலின் ஏதாவது தெரிவித்தாரா? அல்லது நான் குறிப்பிட்டதற்கு மறுப்பு தெரிவித்தாரா? இல்லை. எனவே மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி. தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருமா என்ற சந்தேகம் அவர்கள் ( தி.மு.க.) மனதில் உள்ளது. எங்களைப் பொறுத்தவரை மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமையும். தமிழகத்தில் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். அரசைப் பொறுத்தவரை வீதியில் நின்று குறைத்தாலும் அரசை தொட்டு பார்க்க முடியாது. தமிழகத்தைப் பொறுத்தவரை அ.தி.மு.க. அலைதான் வீசுகிறது. நாங்கள் அனைத்து தேர்தலிலும் வெற்றி பெறுவோம். யாராக இருந்தாலும் நாக்கு இருக்கிறது என்பதற்காக பேசக் கூடாது. மனிதநேயத்துடன் பேச வேண்டும். மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
விஜய் பிரச்சார பயணம் தொடரும்: த.வெ.க. துணை பொதுச்செயலாளர்
29 Oct 2025சென்னை : த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சார பயணம் தொடரும் என்று அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-10-2025.
29 Oct 2025 -
தங்கம் விலை மீண்டும் உயர்வு
29 Oct 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ. 2,000 அதிகரித்து விற்பனையானது மீண்டும் நகைப்பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு 103.62 கோடி ரூபாய் நிவாரணம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
29 Oct 2025சென்னை : போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 6,999 பேருக்கு ரூ.103.62 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.
-
நவ. 5-ல் த.வெ.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம் : விஜய் அறிவிப்பு
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நவ. 5 ஆம் தேதி நடைபெறும் என்று அந்தக் கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
-
மக்கள் 100 சதவீதம் விஜய் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் : த.வெ.க. துணை பொதுச்செயலர் பேட்டி
29 Oct 2025சென்னை : தமிழக வெற்றிக்கழகத்தை முடக்க முயற்சி செய்தனர். அவர்களின் எண்ணம் நிச்சயமாக ஈடேறாது.
-
வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும்: உலக சிக்கன நாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Oct 2025சென்னை : உலக சிக்கன நாளை முன்னிட்டு ஒவ்வொருவரும் தம்முடைய வருவாயின் ஒரு பகுதியை சேமிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
வடசென்னை பகுதிகளில் மின்வாரிய பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர்
29 Oct 2025சென்னை : வடசென்னை பகுதிகளில் நடைபெறும் மின்வாரிய பணிகளை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு செய்தார்.
-
அரசு பணிகளுக்கு ஊழியர்களை நியமிக்கும் தேர்வில் முறைகேடு : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளில் காலியாக இருந்த பல்வேறு பதவிகளுக்கு ஊழியர்களை
-
தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பின் பா.ஜ.க. காணாமல் போகும் : அமைச்சர் ரகுபதி விமர்சனம்
29 Oct 2025புதுக்கோட்டை : தமிழ்நாட்டில் 2026 தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க.
-
மோந்தா புயல் காரணமாக ஆந்திராவில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை
29 Oct 2025சென்னை : மோந்தா புயல் காரணமாக ஆந்திராவில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
-
நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறை பணி நியமனத்தில் முறைகேடா? - அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
29 Oct 2025சென்னை : நகராட்சி நிர்வாகம் - குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக வெளியான தகவல் குறித்து அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.
-
தற்போது பிரதமர் பதவியோ, பீகார் முதல்வர் பதவியோ காலியாக இல்லை : பிரச்சாரத்தில் அமித்ஷா பேச்சு
29 Oct 2025பாட்னா : பீகார் முதல்வர் பதவியும், பிரதமர் பதவியும் தற்போது காலியாக இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
இந்திய பெண் பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தை சேர்ந்தவர் கைது
29 Oct 2025லண்டன் : இந்திய பெண் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இங்கிலாந்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா: பசும்பொன்னில் துணை ஜனாதிபதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை: துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்களும் பங்கேற்பு
29 Oct 2025மதுரை, இன்று முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை, துணை முதல்வர் உதயநிதி உள்ள
-
கோவில் சொத்து விவரங்கள்; 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
29 Oct 2025சென்னை : கோவில் சொத்து விவகாரம் குறித்து 2 வாரங்களில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பயணிகள் கதவில் சிக்குவதை தடுக்க ரூ.48.33 கோடியில் மெட்ரோ ரயிலில் பாதுகாப்பு அமைப்பு
29 Oct 2025சென்னை : பயணிகள் கதவில் சிக்குவதை தடுக்க மெட்ரோ ரயிலில் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது.
-
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
29 Oct 2025மைசூரு : கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 7 ஆயிரத்து 135 கனஅடி நீர் திறக்கப்பட்டது.
-
தென்காசிக்கு 10 புதிய அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்
29 Oct 2025தென்காசி, தென்காசியில் ரூ.1,020 கோடியில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்து புதிய பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
தென்காசியில் மாணவ, மாணவியர்களுடன் சிலம்பம் சுற்றி மகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்
29 Oct 2025தென்காசி : தென்காசிக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் செல்லும் வழியில் மாணவ, மாணவிகள் சிலம்பம் சுற்றிக் கொண்டிருந்த நிலையில், அந்த மாணவிகளிடம் சிலம்பத்தைப் பெற்று ஆர்வமாகச் ச
-
துபாயில் திகிலூட்டும் வடிவிலான உணவு வகைகள் விற்பனை
29 Oct 2025துபாய் : துபாயில் திகிலூட்டும் வடிவிலான உணவு வகைகள் தயாரித்து விற்பனை செய்யபடுகின்றன.
-
வலிமையான, போற்றத்தக்க தலைவர்: பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் புகழாரம்
29 Oct 2025சியோல் : இந்தியப் பிரதமர் மோடி வலிமையான, போற்றத்தக்க தலைவர் ஆனால், இந்தியா - பாகிஸ்தான் போர் நான் வர்த்தக ஒப்பந்தம் செய்யமாட்டேன் என்று சொன்னதாலேயே நிறுத்தப்பட்டது.” என
-
ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட்: வரும் 1-ம் தேதி கவுண்ட்டவுன் துவக்கம்
29 Oct 2025ஆந்திரா : ஸ்ரீஹரிகோட்டாவில் பாகுபலி ராக்கெட் தயார் நிலையில் உள்ளது வருகிற 1-ந்தேதி முதல் கவுண்ட்டவுன் தொடங்கப்பட உள்ளது.
-
நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் பாதியாக குறைந்தது மகசூல்; டெல்டா விவசாயிகள் கவலை
29 Oct 2025நாகப்பட்டினம் : நன்கு விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள், மழைநீரில் மூழ்கி, சாய்ந்து சேதமடைந்ததால் மகசூல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள
-
இந்தியா வருகிறார் இஸ்ரேல் அமைச்சர்
29 Oct 2025புதுடெல்லி : இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வருகிறார்.


