எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களுடன் பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் நாளை 25-ம் தேதி டெல்லி வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கான முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பா.ஜ.க. இந்த வெற்றியை நாடு முழுவதும் கொண்டாடி வருகிறது.
இதற்கிடையே பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவை எப்போது நடத்துவது என்பது தொடர்பான ஆலோசனை தொடங்கி உள்ளது. அனேகமாக அடுத்த வாரம் பதவி ஏற்பு விழா இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் தெரிந்தவுடன் அதற்கான வெற்றி சான்றிதழ்களுடன் பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் நாளை 25-ந்தேதி டெல்லி வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர். எனவே வருகிற சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நடைபெறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமராக ஒருமனதுடன் மோடி தேர்வு செய்யப்படுவார். அதற்கான ஆவணத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் அனைவரும் கையெழுத்திடுவார்கள். அந்த கடிதத்துடன் மோடி ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவார். அதன் அடிப்படையில் ஜனாதிபதி அழைப்பு விடுப்பார். அதன் பிறகு டெல்லியில் புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழா நடைபெறும். முக்கிய இலாகாக்களுக்கு புதிய முகங்கள் பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


