எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவே ஆட்சியைப் பிடிக்கும் என்று பல்வேறு ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டிருந்தன. அந்த கருத்துக்கணிப்புகளை உண்மையென நிரூபித்து விட்டது நேற்றைய தேர்தல் முடிவுகள். அதன்படி பாரதீய ஜனதா கூட்டணி மொத்தமுள்ள 542 தொகுதிகளில் 350 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் நரேந்திர மோடி மீண்டும் நாட்டின் பிரதமராகிறார். வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியும், காந்தி நகர் தொகுதியில் அமித்ஷாவும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றியை பாரதீய ஜனதா கட்சி தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். அதே நேரம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியை தழுவினார். மேலும் தேர்தல் தோல்வியை தான் ஒப்புக் கொள்வதாக கூறிய அவர், பிரதமர் மோடிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
542 தொகுதிகளுக்கு...
பாராளுமன்ற மக்களவையில் மொத்தம் 545 இடங்கள் உள்ளன. இதில் 2 இடங்கள் ஜனாதிபதியால் நேரடியாக நியமனம் செய்யப்படும். மீதமுள்ள 543 தொகுதிகளுக்கு தேர்தல் மூலமே எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த 543 பேரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒரு சில மாநிலங்களில் மட்டும் சில வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. மற்றபடி தேர்தல் அமைதியாகவே நடந்து முடிந்தது.
வேலூர் தொகுதி...
பணப்பட்டுவாடா புகார் காரணமாக தமிழகத்தில் வேலூர் தொகுதி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து மீதமுள்ள 542 தொகுதிகளில் தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையேதான் நேரடி போட்டி நிலவியது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. உட்பட 40 கட்சிகளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 25 கட்சிகளும் இடம் பெற்றிருந்தன. பாரதீய ஜனதா கட்சி அதிகபட்சமாக 437 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 421 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
கடுமையான பிரச்சாரம்
தேர்தல் பிரச்சாரம் இம்முறை கடுமையாக நடைபெற்றது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வந்தார்கள். பிரச்சாரத்தின் போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தனிப்பட்ட முறையிலும் தாக்கிக் கொண்டார்கள். பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரச்சாரம் செய்தார். அதே போல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரத்தை மேற்கொண்டார். அவரது சகோதரியான பிரியங்கா காந்தியும் உ.பி. உள்ளிட்ட பல மாநிலங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். இப்படியாக அனல் பறக்கும் வகையில் நடந்து வந்த பிரச்சாரம் கடந்த 17-ம் தேதி ஒரு முடிவுக்கு வந்தது. அதையடுத்து கடந்த 19-ம் தேதி பாராளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் 67.11 சதவீத வாக்குகள் பதிவாகின.
வாக்கு எண்ணிக்கை
பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு நேற்று (23-ம் தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு மூன்று தினங்களுக்கு முன்பே டைம்ஸ் நவ், என்.டி.டி.வி. சி.என்.என். போன்ற பல ஊடகங்கள் தங்களது கருத்துக்கணிப்புகளை வெளியிட்டிருந்தன. அதில் பாரதீய ஜனதா கட்சி 300-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த கருத்துக்கணிப்புகளை ராகுலும், பிரியங்கா காந்தியும் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களும் ஏற்கவில்லை. அதே நேரம் பாரதீய ஜனதா கட்சி இந்த கருத்துக்கணிப்பை முழுமையாக நம்பியது. கருத்துக்கணிப்பின் படி நாங்கள் வெற்றி பெறுவோம் என்று அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் நம்பிக்கையோடு கூறி வந்தார்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் தே.ஜ. கூட்டணி தலைவர்களுக்கு விருந்தும் அளிக்கப்பட்டது.
பா.ஜ.க. முன்னிலை...
இந்த நிலையில்தான் நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. அதில் தொடக்கத்தில் இருந்தே பாரதீய ஜனதா கட்சி முன்னிலை வகித்தது. ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய 30 நிமிடங்களிலேயே பாரதீய ஜனதா கட்சி 160 இடங்களில் முன்னிலை பெற்றதாக தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகின. பிறகு படிப்படியாக இந்த முன்னிலை அதிகரித்தது. இறுதியில் பாரதீய ஜனதா கூட்டணி மொத்தமுள்ள 542 இடங்களில் 350 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி 91 இடங்களையும், ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 25 எம்.பி. தொகுதிகளிலும், சந்திரசேகர ராவ் கட்சியான டி.ஆர்.எஸ். கட்சி 8 தொகுதிகளையும், மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளையும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 19 தொகுதிகளையும் மற்ற கட்சிகள் 33 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளன. இந்த தேர்தல் மூலம் பாரதீய ஜனதா கட்சிக்கு இமாலய வெற்றி கிடைத்துள்ளது.
மீண்டும் மோடி பிரதமர்...
இதையடுத்து நாட்டின் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி விரைவில் பதவியேற்கவிருக்கிறார். தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்த போது வலிமையான பிரதமர் இந்த நாட்டுக்கு தேவை என்று குறிப்பிட்டு பிரச்சாரம் செய்தார். அதை நிரூபிப்பது போல் இந்த தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. இந்த தேர்தலில் மோடிக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க., தெலுங்குதேசம், டி.ஆர்.எஸ். கட்சி, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்தன. சந்திரபாபு நாயுடு போன்ற சில தலைவர்கள் பா.ஜ.க.வுக்கு மாற்றாக காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் மூன்றாவது அணி அமைக்க முயற்சி செய்தார். ஆனால் இவர்களது முயற்சிகள் எல்லாமே தோற்றுப் போயின. குறிப்பாக, பிரதமர் மோடியை காலாவதியான பிரதமர் என்று மம்தா பானர்ஜி கிண்டலடித்து வந்தார். ஆனால் அவருக்கும் இந்த தேர்தலில் படுதோல்வியே கிடைத்துள்ளது.
அமேதியில் ராகுல் தோல்வி
இந்த தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றாலும், அமேதி தொகுதியில் அவர் தோல்வியை தழுவி உள்ளார். மேலும் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஒப்புக்கொள்வதாகவும் கூறிய அவர், பிரதமர் மோடிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல் மூலம் நான்தான் மீண்டும் பிரதமர் என்பதை நரேந்திர மோடி மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டார். இவரது இந்த வெற்றி பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. பா.ஜ.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். விரைவில் இந்த நாட்டின் பிரதமராக மீண்டும் மோடி பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-10-2025.
27 Oct 2025 -
பைசன் படத்தை பாராட்டிய தமிழக முதல்வர்
27 Oct 2025தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பைசன் திரைப்படம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
-
கரூர் நெரிசல் சம்பவ வழக்கை தள்ளிவைத்து ஐகோர்ட் உத்தரவு
27 Oct 2025சென்னை, கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் 3 வாரத்துக்கு தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி அமைக்கவே வாய்ப்பு : ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி
27 Oct 2025சிவகங்கை : தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைக்க வாய்ப்புள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
-
ராஜ் B. ஷெட்டி நடிக்கும் ஜுகாரி கிராஸ்
27 Oct 2025பிரபல இயக்குநர் குருதத்த கனிகா, ராஜ் B. ஷெட்டியுடன் இணைந்து, ஒரு புதிய படத்தை சமீபத்தில் துவங்கியுள்ளார்.
-
ஜிடி நாயுடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
27 Oct 2025மாதவன் நடிப்பில் உருவாகி வரும் ஜிடி நாயுடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
27 Oct 2025சென்னை : தமிழ்நாட்டை ஒன்றிணைந்து உருவாக்கி வருகிறோம் என்று உலகச் செயல்முறை மருத்துவ நாளையொட்டி முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
இந்தவாரம் வெளியாகும் ஆர்யன்
27 Oct 2025விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், சுப்ரா & ஆர்யன் ரமேஷ் வழங்க, பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் இயக்குநர் செல்வராகவன் இணைந்து நடிக்கும் படம் ஆர
-
தடை அதை உடை படத்தின் இசை வெளியீட்டு விழா
27 Oct 2025காந்திமதி பிக்சர்ஸ் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்கி ’அங்காடித்தெரு’ மகேஷ் மற்றும் குணா பாபு நடிக்கும் படம் தடை அதை உடை.
-
மீண்டும் பிரமாண்ட படத்தில் நடிக்கும் பிரபாஸ்
27 Oct 2025மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி சீரிஸ் வழங்கும் பான் இந்தியா படம் ஃபௌசி.
-
'மோந்தா' புயலுக்கு அடுத்து வரும் புயலுக்கு பெயர் என்ன தெரியுமா?
27 Oct 2025சென்னை, மோந்தா புயலுக்கு அடுத்து வரும் புயலின் பெயர் விவரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
-
டிஜிட்டல் கைது தொடர்பான வழக்குகள்: சி.பி.ஐ.க்கு மாற்ற சுப்ரீம் கோர்ட் யோசனை
27 Oct 2025சென்னை, டிஜிட்டல் கைது தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ.க்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 215 இடங்களில் நிவாரண மையங்கள்: தமிழ்நாடு அரசு
27 Oct 2025சென்னை, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 215 இடங்களில் மழை வெள்ள நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க சூர்யகாந்த் பெயர் பரிந்துரை
27 Oct 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் அடுத்த தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி சூர்ய காந்தை நியமிக்க, சுப்ரீம் கோர்ட்டின் தற்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.
-
கரூர் சம்பவத்தில் முன்ஜாமீன் மனுவை புஸ்ஸி ஆனந்த் வாபஸ் பெற்றதால் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்
27 Oct 2025சென்னை : கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் கோரி த.வெ.க.
-
குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன்: கரூர் சம்பவத்தில் உயிரிழந்வர்கள் குடும்பத்தினரிடம் விஜய் உறுதி
27 Oct 2025சென்னை : குடும்பத்தில் ஒருவனாக நான் இருப்பேன் என்று கரூர் சம்பவத்தில் உயிரிழந்வர்களின் குடும்பத்தினரிடம் த.வெ.க. தலைவர் விஜய் உறுதி அளித்துள்ளார்.
-
மோந்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆந்திர முதல்வருடன் பிரதமர் மோடி பேச்சு
27 Oct 2025அமராவதி, மோந்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆந்திர முதல்வருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
-
உலகத்தின் நுழைவாயிலாக ‘இந்தியா கேட்’ மாறும் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
27 Oct 2025மும்பை : நிகோபார் தீவு மேம்பாட்டுத் திட்டம் நமது கடல்சார் வர்த்த கத்தை பலமடங்கு அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘இந்தியா கேட்’ விரைவில
-
‘மோந்தா’ புயல் எதிரொலி: தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்
27 Oct 2025ராமேசுவரம் : வங்கக்கடலில் உருவாகியுள்ள `மோந்தா’ புயலினால் தமிழக துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
-
பயங்கரவாதிகள் பட்டியலில் பிரபர நடிகர் சல்மான்கான்..? பின்னணியில் பாகிஸ்தான் அரசு
27 Oct 2025லாகூர், பிரபர நடிகர் சல்மான்கானை பாகிஸ்தான் அரசு பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
-
தலைமை நீதிபதி மீது காலணி வீச்சு விவகாரம்: கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு
27 Oct 2025புதுடெல்லி : நீதிபதி மீது காலணி வீச்சு விவகாரத்தில் கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.
-
மேட்டூர் அணை நீர்வரத்து குறைப்பு
27 Oct 2025மேட்டூர் : மேட்டூர் அணை நீர்வரத்து குறைக்கப்பட்டுள்ளது.
-
நாட்டின் ஒற்றுமைக்காக - தமிழகத்தின் வளர்ச்சிக்காக தி.மு.க.வும்-காங்கிரசும் இன்று ஒரே அணியில் பயணிக்கிறது: திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
27 Oct 2025சென்னை, தி.மு.க.வும் காங்கிரஸ் பேரியக்கமும் கடந்த காலங்களில் வெவ்வேறு பாதைகளில் பயணித்திருந்தாலும், இன்று நாட்டின் நன்மைக்காக, தமிழகத்தின் வளர்ச்சிக்காக, இந்தியாவின் ஒற
-
மக்களுடன் நின்று பிரச்சினைகளை சந்திக்கும் திறனற்றவர்கள் அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள்: கருணாஸ் பரபரப்பு பேச்சு
27 Oct 2025சிவகங்கை, மக்களுடன் நின்று பிரச்சினைகளை சந்திக்கும் திறனற்றவர்கள் அரசியலுக்கு தகுதி இல்லாதவர்கள் என்று கருணாஸ் பேசினார்.
-
கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்: ஆண் குழந்தையை ரூ. 50 ஆயிரத்திற்கு விற்க முயன்ற தந்தை உள்ளிட்ட 3 பேர்
27 Oct 2025கோட்டயம், கேரளாவில் 2½ மாத ஆண் குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்க முயற்சித்த தந்தை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


