எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி : நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதாவே ஆட்சியைப் பிடிக்கும் என்று பல்வேறு ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டிருந்தன. அந்த கருத்துக்கணிப்புகளை உண்மையென நிரூபித்து விட்டது நேற்றைய தேர்தல் முடிவுகள். அதன்படி பாரதீய ஜனதா கூட்டணி மொத்தமுள்ள 542 தொகுதிகளில் 350 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் நரேந்திர மோடி மீண்டும் நாட்டின் பிரதமராகிறார். வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடியும், காந்தி நகர் தொகுதியில் அமித்ஷாவும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றியை பாரதீய ஜனதா கட்சி தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். அதே நேரம் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியை தழுவினார். மேலும் தேர்தல் தோல்வியை தான் ஒப்புக் கொள்வதாக கூறிய அவர், பிரதமர் மோடிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
542 தொகுதிகளுக்கு...
பாராளுமன்ற மக்களவையில் மொத்தம் 545 இடங்கள் உள்ளன. இதில் 2 இடங்கள் ஜனாதிபதியால் நேரடியாக நியமனம் செய்யப்படும். மீதமுள்ள 543 தொகுதிகளுக்கு தேர்தல் மூலமே எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த 543 பேரை தேர்ந்தெடுப்பதற்காக பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒரு சில மாநிலங்களில் மட்டும் சில வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. மற்றபடி தேர்தல் அமைதியாகவே நடந்து முடிந்தது.
வேலூர் தொகுதி...
பணப்பட்டுவாடா புகார் காரணமாக தமிழகத்தில் வேலூர் தொகுதி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து மீதமுள்ள 542 தொகுதிகளில் தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையேதான் நேரடி போட்டி நிலவியது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. உட்பட 40 கட்சிகளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 25 கட்சிகளும் இடம் பெற்றிருந்தன. பாரதீய ஜனதா கட்சி அதிகபட்சமாக 437 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 421 தொகுதிகளிலும் போட்டியிட்டன.
கடுமையான பிரச்சாரம்
தேர்தல் பிரச்சாரம் இம்முறை கடுமையாக நடைபெற்றது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வந்தார்கள். பிரச்சாரத்தின் போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தனிப்பட்ட முறையிலும் தாக்கிக் கொண்டார்கள். பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரச்சாரம் செய்தார். அதே போல காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரத்தை மேற்கொண்டார். அவரது சகோதரியான பிரியங்கா காந்தியும் உ.பி. உள்ளிட்ட பல மாநிலங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். இப்படியாக அனல் பறக்கும் வகையில் நடந்து வந்த பிரச்சாரம் கடந்த 17-ம் தேதி ஒரு முடிவுக்கு வந்தது. அதையடுத்து கடந்த 19-ம் தேதி பாராளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் 67.11 சதவீத வாக்குகள் பதிவாகின.
வாக்கு எண்ணிக்கை
பின்னர் மூன்று நாட்கள் இடைவெளி விட்டு நேற்று (23-ம் தேதி) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கு மூன்று தினங்களுக்கு முன்பே டைம்ஸ் நவ், என்.டி.டி.வி. சி.என்.என். போன்ற பல ஊடகங்கள் தங்களது கருத்துக்கணிப்புகளை வெளியிட்டிருந்தன. அதில் பாரதீய ஜனதா கட்சி 300-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த கருத்துக்கணிப்புகளை ராகுலும், பிரியங்கா காந்தியும் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களும் ஏற்கவில்லை. அதே நேரம் பாரதீய ஜனதா கட்சி இந்த கருத்துக்கணிப்பை முழுமையாக நம்பியது. கருத்துக்கணிப்பின் படி நாங்கள் வெற்றி பெறுவோம் என்று அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் நம்பிக்கையோடு கூறி வந்தார்கள். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் தே.ஜ. கூட்டணி தலைவர்களுக்கு விருந்தும் அளிக்கப்பட்டது.
பா.ஜ.க. முன்னிலை...
இந்த நிலையில்தான் நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. அதில் தொடக்கத்தில் இருந்தே பாரதீய ஜனதா கட்சி முன்னிலை வகித்தது. ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய 30 நிமிடங்களிலேயே பாரதீய ஜனதா கட்சி 160 இடங்களில் முன்னிலை பெற்றதாக தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகின. பிறகு படிப்படியாக இந்த முன்னிலை அதிகரித்தது. இறுதியில் பாரதீய ஜனதா கூட்டணி மொத்தமுள்ள 542 இடங்களில் 350 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி 91 இடங்களையும், ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 25 எம்.பி. தொகுதிகளிலும், சந்திரசேகர ராவ் கட்சியான டி.ஆர்.எஸ். கட்சி 8 தொகுதிகளையும், மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளையும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 19 தொகுதிகளையும் மற்ற கட்சிகள் 33 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளன. இந்த தேர்தல் மூலம் பாரதீய ஜனதா கட்சிக்கு இமாலய வெற்றி கிடைத்துள்ளது.
மீண்டும் மோடி பிரதமர்...
இதையடுத்து நாட்டின் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி விரைவில் பதவியேற்கவிருக்கிறார். தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்த போது வலிமையான பிரதமர் இந்த நாட்டுக்கு தேவை என்று குறிப்பிட்டு பிரச்சாரம் செய்தார். அதை நிரூபிப்பது போல் இந்த தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. இந்த தேர்தலில் மோடிக்கு எதிராக காங்கிரஸ், தி.மு.க., தெலுங்குதேசம், டி.ஆர்.எஸ். கட்சி, ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் வரிந்து கட்டிக் கொண்டு வேலை செய்தன. சந்திரபாபு நாயுடு போன்ற சில தலைவர்கள் பா.ஜ.க.வுக்கு மாற்றாக காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவும் மூன்றாவது அணி அமைக்க முயற்சி செய்தார். ஆனால் இவர்களது முயற்சிகள் எல்லாமே தோற்றுப் போயின. குறிப்பாக, பிரதமர் மோடியை காலாவதியான பிரதமர் என்று மம்தா பானர்ஜி கிண்டலடித்து வந்தார். ஆனால் அவருக்கும் இந்த தேர்தலில் படுதோல்வியே கிடைத்துள்ளது.
அமேதியில் ராகுல் தோல்வி
இந்த தேர்தலில் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெற்றி பெற்றாலும், அமேதி தொகுதியில் அவர் தோல்வியை தழுவி உள்ளார். மேலும் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை ஒப்புக்கொள்வதாகவும் கூறிய அவர், பிரதமர் மோடிக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல் மூலம் நான்தான் மீண்டும் பிரதமர் என்பதை நரேந்திர மோடி மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டார். இவரது இந்த வெற்றி பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. பா.ஜ.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். விரைவில் இந்த நாட்டின் பிரதமராக மீண்டும் மோடி பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்று முதல் இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்
26 Dec 2025சென்னை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க இன்று முதல் இரண்டு நாட்கள் தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் ரூ.139.41 கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
26 Dec 2025கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சியில் ரூ.139.41 கோடியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டிடத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் வேறொரு இந்தியா உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
26 Dec 2025கள்ளக்குறிச்சி, இந்து பக்தர்களுக்கு இஸ்லாமிய சகோதரர்கள் 'ரோஸ் மில்க்’ கொடுக்கின்றனர் என்று தெரிவித்த முதல்வர்மு.க.ஸ்டாலின், பா.ஜ.க.
-
கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவல்: தமிழகத்தில் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்: மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
26 Dec 2025சென்னை, கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவலால் தமிழ்நாட்டில் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
கள்ளக்குறிச்சியில் ரூ.1,045 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
26 Dec 2025விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் பல்துறைகளின் சார்பில் 2,16,056 பயனாளிகளுக்கு ரூ.1,045 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு
-
கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி: நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். மீது அமெரிக்க படை திடீர் தாக்குதல்
26 Dec 2025அபுஜா, நைஜீரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். மீது அமெரிக்க ராணுவம் பயங்கரவாதிகள் மீது துல்லியமான தாக்குதல்களை நடத்தியுள்ளது என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு சட்டசபை ஜன. 20-ல் கூடுகிறது
26 Dec 2025சென்னை, அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், 2026-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.
-
ஒரு சவரன் தங்கம் விலை புதிய உச்சம்: வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 9,000 உயர்வு
26 Dec 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,03,120-க்கும் கிராமுக்கு ரூ.
-
தமிழ்நாட்டில் மதவெறி ஆட்டத்துக்கு இடமில்லை: கள்ளக்குறிச்சி அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
26 Dec 2025கள்ளக்குறிச்சி, எம்மதமும் சம்மதம் என்பதே தமிழ்நாடு. மதவெறி ஆட்டத்துக்கு இங்கு இடமில்லை. தமிழ்நாட்டில் இருக்கும் மத நல்லிணக்கம் பா.ஜ.க.வின் கண்களை உறுத்துகிறது.
-
உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
26 Dec 2025விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள ஆசனூர் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள காலணி உற்பத்தித் தொழிற்சாலையில் முதல்வர் மு.க ஸ்டாலின் வெள்ளிக்கி
-
வங்கதேசத்தில் நியாயமான தேர்தலுக்கு இந்தியா ஆதரவு: மத்திய வெளியுறவுத்துறை தகவல்
26 Dec 2025புதுடெல்லி, வங்காள தேசத்தில் நியாயமான தேர்தலை ஆதரிக்கிறது என்று தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை, அங்கு சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை மிகவும் கவலைக்குரிய விஷயம
-
நல்லகண்ணு பிறந்த நாள்: துணை ஜனாதிபதி வாழ்த்து
26 Dec 2025புதுடெல்லி, நல்லகண்ணு பிறந்த நாளை முன்னிட்டு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். எளிமையின் இலக்கணமாக வாழ்ந்து வருபவர் என்றும் அவர்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-12-2025.
26 Dec 2025 -
கள்ளக்குறிச்சிக்கு 8 புதிய அறிவிப்புகள்
26 Dec 2025கள்ளக்குறிச்சி, ரூ.10 கோடியில் சிப்காட் தொழிற்பேட்டை உள்ளிட்ட கள்ளக்குறிச்சிக்கு 8 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
ஆதார் அட்டையுடன் பான் எண்ணை இணைக்க டிசம்பர் 31 கடைசி நாள்
26 Dec 2025புதுடெல்லி, பான் அட்டை வைத்திருப்பவர்கள், ஆதார் அட்டையுடன் இணைக்க டிச. 31ஆம் தேதியே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கனடாவில் இந்தியர் சுட்டுக்கொலை
26 Dec 2025ஒட்டாவா, கனடாவில் 20 வயது இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கனடாவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
விடுமுறை எதிரொலி: கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகளால் போக்குவரத்து நெரிசல்
26 Dec 2025திண்டுக்கல், விடுமுறை காரணமாக கொடைக்கானலில் தொடர்ந்து குவியும் சுற்றுலா பயணிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
-
தூத்துக்குடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
26 Dec 2025சென்னை, தூத்துக்குடியில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.
-
அ.தி.மு.க.வில் விருப்பமனு பெற அவகாசம் டிச. 31-வரை நீட்டிப்பு
26 Dec 2025சென்னை, அ.தி.மு.க.வில் விருப்பமனு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும்: அதிபர் ஜெலன்ஸ்கி வீடியோ வெளியீடு
26 Dec 2025கீவ், உக்ரைனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் அந்நாட்டு அதிபர் ஸெலென்ஸ்கி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் (புதின்) அழிந்து போகட்டும் என்பதுதான்.
-
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி: ஒரே நாளில் 20 விக்கெட்டுகள் சரிவு
26 Dec 2025மெல்போர்ன், ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு சுருண்டது.
-
தமிழகத்தில் ஜனவரி 1 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
26 Dec 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 1-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அதிபர் ட்ரம்ப்பை விரைவில் சந்திப்பேன்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
26 Dec 2025கீவ், ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாங்கள் ஒருநாளும் தோல்வியடையமாட்டோம்.
-
பீகாரைச் சேர்ந்த இளம் வீரர் சூரியவன்ஷிக்கு பால புரஸ்கார் விருது வழங்கினார் ஜனாதிபதி
26 Dec 2025புதுடெல்லி, இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு சிறார்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பால புரஸ்கார் விருது வழங்கி ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று (டிச.26)
-
கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரம்: தாய்லாந்து அரசு விளக்கம்
26 Dec 2025புதுடெல்லி, கம்போடியா எல்லையில் விஷ்ணு சிலை இடிக்கப்பட்ட விவகாரத்தில் தாய்லாந்து விளக்கமளித்துள்ளது.


