எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி : டெல்லியில் நேற்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டத்தில் பாராளுமன்ற குழு தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதாவது நாட்டின் பிரதமராக அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு கூட்டணி தலைவர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பிறகு ஜனாதிபதி மாளிகை சென்ற மோடி, அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் ஆதரவு கடிதங்களையும் ஜனாதிபதியிடம் மோடி வழங்கினார். வரும் 30-ம் தேதி அவர் பிரதமராக பதவியேற்பார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அமோக வெற்றி
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 303 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350-க்கும் அதிகமாக இடங்களை கைப்பற்றி உள்ளது. இந்த தேர்தலில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி எதிர்பாராத விதமாக படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து அவர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக விரும்பினார். ஆனால் அவரது கோரிக்கை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டது.
தீர்மானம் நிறைவேற்றம்...
முன்னதாக நேற்று பிரதமர் மோடி புதிய அமைச்சரவை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் டெல்லியில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 16-வது மக்களவையை கலைப்பது குறித்தும் 17-வது மக்களவையை உருவாக்குவது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை சென்ற பிரதமர் மோடி அங்கு ஜனாதிபதியை சந்தித்து 16-வது மக்களவையை கலைக்கும் படி பரிந்துரை செய்தார். அந்த கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி நேற்று 16-வது மக்களவையை கலைத்து உத்தரவிட்டார்.
எம்.பி.க்கள் கூட்டம்
இந்நிலையில் நேற்று பிரதமர் தேர்வு, புதிய அரசு பொறுப்பேற்பு ஆகியவற்றுக்காக பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வந்தார். அப்போது அவருக்கு கரகோஷத்துடன் புதிய எம்.பி.க்கள் வரவேற்பு அளித்தனர். பிறகு தே.ஜ. கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற குழு தலைவர் பதவிக்கு மோடியின் பெயரை அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின் கட்காரி ஆகியோர் முன்மொழிந்தனர்.
ஏகமனதாக தேர்வு
இதை ஏற்று நரேந்திர மோடியை பாராளுமன்ற குழு தலைவராக தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர். அப்போது அரங்கு நிறைந்த கரவொலி எழுந்தது. இதையடுத்து தலைவர்கள் அனைவரும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். முதலில் அமித்ஷா மோடிக்கு பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி பூங்கொத்து கொடுத்து மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவரது காலில் விழுந்து மோடி ஆசி பெற்றார். அவரை தொடர்ந்து மற்றொரு மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவரது காலிலும் விழுந்து மோடி ஆசி பெற்றார்.
பிறகு கட்சித் தலைவர்களான ராஜ்நாத்சிங், நிதின் கட்காரி, பீகார் முதல்வர் நிதீஷ்குமார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வரிசையாக வந்து மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
வாழ்த்தி பேச்சு...
இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மோடியை வாழ்த்தி பேசினார். அப்போது பேசிய அவர், புதிய அரசுக்கு அ.தி.மு.க. எப்போதும் ஆதரவளிக்கும். என்றும் அரசுக்கு துணை நிற்கும் என்றும் பேசினார். தலைவர்களின் வாழ்த்துக்களை மோடி ஏற்றுக் கொண்டார். பிறகு பேசிய அவர், புதிய எம்.பி.க்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், பா.ஜ.க.வின் வெற்றியை உலகத்தில் உள்ள இந்தியர்கள் கொண்டாடுகிறார்கள் என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இந்த கூட்டத்தில்உத்தர பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், ஸ்மிருதி இராணி, சுஷ்மா ஸ்வராஜ், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு ஜனாதிபதி மாளிகை சென்ற நரேந்திரமோடி அங்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் ஆதரவு கடிதங்களையும் ஜனாதிபதியிடம் மோடி வழங்கினார். வரும் 30-ம் தேதி அவர் பிரதமராக பதவியேற்பார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-07-2025.
10 Jul 2025 -
பிரேசிலுக்கு 50 சதவீத வரி: ட்ரம்ப் முடிவுக்கு அதிபர் லூலா டி சில்வா எதிர்ப்பு
10 Jul 2025வாஷிங்டன், பிரேசில் நாட்டுக்கு 50% வரி விதிப்பதாகவும், இலங்கை, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவ
-
சேலம் முத்துமலை முருகன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
10 Jul 2025சென்னை, சேலம் முத்துமலை முருகன் கோயிலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினார்.
-
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறும் சூழல் இல்லை: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
10 Jul 2025புதுச்சேரி, புதுச்சேரியில் பா.ஜ.க. கூட்டணியிலிருந்து வெளியேறும் சூழல் ஏதுமில்லை என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
-
மீனவர்களுக்கு மானியம் மறுப்பதா? தமிழக அரசுக்கு விஜய் கண்டனம்
10 Jul 2025சென்னை, “மீனவ நண்பர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பதா?” என தி.மு.க. அரசுக்கு த.வெ.க.
-
நேரில் ஆஜராகி மன்னிப்பு: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து
10 Jul 2025சென்னை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரியதால் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை உயர் நீதிமன்றம் திரும்பப்
-
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 5 பேர் சென்னை ஐகோர்ட்டில் ஆஜர்
10 Jul 2025சென்னை, பா.ஜ.க. தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.
-
கடலூர் ரயில் விபத்து: தனியார் பள்ளிக்கு கல்வித் துறை நோட்டீஸ்
10 Jul 2025கடலூர், கடலூர் ரயில் விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தனியார் பள்ளிக்கு கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
-
சூதாட்ட செயலி விளம்பரம்: நடிகர்கள் 29 பேருக்கு சிக்கல்
10 Jul 2025புதுடெல்லி, சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்த நடிகர்கள் பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, மஞ்சு லட்சுமி, பிரணீதா உட்பட 29 நடிகர்கள் மீது அமலாக்கத் துறை வழக்குப
-
தமிழகத்தின் பெருமையை மறைக்க கீழடி ஆய்வறிக்கையை வெளியிட மறுக்கின்றனர்: மத்திய அரசு மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
10 Jul 2025திருவாரூர், தமிழகத்தின் பெருமையை மறைக்க கீழடி ஆய்வறிக்கையை வெளியிட மறுக்கின்றனர் என்று திருவாரூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மத்திய அரசு மீது முதல்வ
-
மைசூரு மருத்துவமனைகளில் இதய பரிசோதனைக்காக குவியும் மக்கள்
10 Jul 2025மைசூரு, மைசூரு மருத்துவமனைகளில் இதய பரிசோதனைக்காக குவிந்து வரும் மக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தேர்தலில் போட்டியிடாத அரசியல் கட்சிகளை நீக்கும் பணி தொடக்கம்
10 Jul 2025சென்னை, இந்திய தேர்தல் ஆணையம், பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகளை முதற்கட்டமாக பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
-
குஜராத்தில் பாலம் இடிந்து விபத்து: பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரிப்பு
10 Jul 2025வடோதரா, குஜராத் மாநிலத்தில் ஆற்றுப் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
-
காவி உடை அணியும் நிலைக்கு மாறி விட்டார் இ.பி.எஸ். அமைச்சர் சிவசங்கர் விமர்சனம்
10 Jul 2025அரியலூர், கோவில் நிதியில் கல்லூரி கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் பழனிசாமி, வெள்ளை வேட்டிக்குப் பதிலாக காவி உடை அணியும் நிலைக்கு மாறிவிட்டார் என்று அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்க
-
கோவை குண்டுவெடிப்பு வழக்கு: 28 ஆண்டுகளுக்கு பிறகு தேடப்பட்ட நபர் கைது
10 Jul 2025கோவை, கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 28 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர், கர்நாடகா மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.
-
1,996 காலியிடங்களுக்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி: போட்டித்தேர்வு நாள் அறிவிப்பு
10 Jul 2025சென்னை, அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவியில் 1,996 காலியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள
-
காரைக்காலில் மாங்கனித் திருவிழா: மாங்கனிகளை வீசி வழிபட்ட பக்தர்கள்
10 Jul 2025காரைக்கால், காரைக்காலில் நடந்த திருவிழாவில், பக்தர்கள் மாங்கனிகளை வீசி வழிபாடு நடத்தினர்.
-
27 நாடுகளின் உயரிய விருதுகள்: பிரதமருக்கு பவன் கல்யாண் வாழ்த்து
10 Jul 2025புதுடெல்லி, பிரேசில், கானா, நமீபியா உட்பட 27 நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்றிருப்பதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்
-
நாமக்கல்லில் 40.86 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: துணை முதல்வர் வழங்கினார்
10 Jul 2025சென்னை, நாமக்கல்லில் ரூ. 40.86 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
-
அன்புமணி இனி என் பெயரை பயன்படுத்தக் கூடாது: ராமதாஸ்
10 Jul 2025கும்பகோணம், ‘என் பேச்சை கேட்காதவர்கள் என் பெயரை பயன்படுத்தக்கூடாது.
-
கிணற்றில் தவறி விழுந்து இறந்த மாணவன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
10 Jul 2025சென்னை, நெல்லையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்த மாணவன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
கனிம வகைகளை பெற ஆஸி.யிடம் இந்தியா பேச்சுவார்த்தை
10 Jul 2025புதுடெல்லி, ஆஸ்திரேலியாவிடம் இருந்து அரிய வகை கனிம வகைகளை பெற இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
-
கடலூர் ரயில் விபத்து: திருச்சியில் விசாரணையை தொடங்கியது சிறப்பு குழு
10 Jul 2025திருச்சி, கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் பலியான சம்பவத்தில், 11 பேரிடம் திருச்சியில் சிறப்புக்குழுவினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
-
கேரள நர்ஸ் மரண தண்டனையை தடுக்க கோரி மனு:சுப்ரீம்கோர்ட் இன்று விசாரணை
10 Jul 2025புதுடெல்லி, கேரள நர்ஸ் நிமிஷா பிரியா தரப்பு மனு மீது இன்று விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
-
முதல்முறையாக இங்கி.,க்கு எதிரான மகளிர் டி-20 தொடரை வென்று இந்திய அணி சாதனை
10 Jul 2025லண்டன், இங்கிலாந்து மகளிருக்கு எதிரான டி20 தொடரினை முதல்முறையாக இந்திய மகளிரணி வென்று இந்திய மகளிர் அணி சாதனைவென்ற சாதனை படைத்துள்ளது.