எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி : டெல்லியில் நேற்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டத்தில் பாராளுமன்ற குழு தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதாவது நாட்டின் பிரதமராக அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு கூட்டணி தலைவர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். பிறகு ஜனாதிபதி மாளிகை சென்ற மோடி, அங்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் ஆதரவு கடிதங்களையும் ஜனாதிபதியிடம் மோடி வழங்கினார். வரும் 30-ம் தேதி அவர் பிரதமராக பதவியேற்பார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அமோக வெற்றி
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 303 இடங்களை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350-க்கும் அதிகமாக இடங்களை கைப்பற்றி உள்ளது. இந்த தேர்தலில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி எதிர்பாராத விதமாக படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து அவர் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலக விரும்பினார். ஆனால் அவரது கோரிக்கை காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டது.
தீர்மானம் நிறைவேற்றம்...
முன்னதாக நேற்று பிரதமர் மோடி புதிய அமைச்சரவை அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் டெல்லியில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 16-வது மக்களவையை கலைப்பது குறித்தும் 17-வது மக்களவையை உருவாக்குவது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை சென்ற பிரதமர் மோடி அங்கு ஜனாதிபதியை சந்தித்து 16-வது மக்களவையை கலைக்கும் படி பரிந்துரை செய்தார். அந்த கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி நேற்று 16-வது மக்களவையை கலைத்து உத்தரவிட்டார்.
எம்.பி.க்கள் கூட்டம்
இந்நிலையில் நேற்று பிரதமர் தேர்வு, புதிய அரசு பொறுப்பேற்பு ஆகியவற்றுக்காக பா.ஜனதா எம்.பி.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி வந்தார். அப்போது அவருக்கு கரகோஷத்துடன் புதிய எம்.பி.க்கள் வரவேற்பு அளித்தனர். பிறகு தே.ஜ. கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் வந்தே மாதரம் பாடலுடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற குழு தலைவர் பதவிக்கு மோடியின் பெயரை அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின் கட்காரி ஆகியோர் முன்மொழிந்தனர்.
ஏகமனதாக தேர்வு
இதை ஏற்று நரேந்திர மோடியை பாராளுமன்ற குழு தலைவராக தே.ஜ.கூட்டணி எம்.பி.க்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர். அப்போது அரங்கு நிறைந்த கரவொலி எழுந்தது. இதையடுத்து தலைவர்கள் அனைவரும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். முதலில் அமித்ஷா மோடிக்கு பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி பூங்கொத்து கொடுத்து மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவரது காலில் விழுந்து மோடி ஆசி பெற்றார். அவரை தொடர்ந்து மற்றொரு மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அவரது காலிலும் விழுந்து மோடி ஆசி பெற்றார்.
பிறகு கட்சித் தலைவர்களான ராஜ்நாத்சிங், நிதின் கட்காரி, பீகார் முதல்வர் நிதீஷ்குமார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வரிசையாக வந்து மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மிகுந்த மகிழ்ச்சியுடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.
வாழ்த்தி பேச்சு...
இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மோடியை வாழ்த்தி பேசினார். அப்போது பேசிய அவர், புதிய அரசுக்கு அ.தி.மு.க. எப்போதும் ஆதரவளிக்கும். என்றும் அரசுக்கு துணை நிற்கும் என்றும் பேசினார். தலைவர்களின் வாழ்த்துக்களை மோடி ஏற்றுக் கொண்டார். பிறகு பேசிய அவர், புதிய எம்.பி.க்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், பா.ஜ.க.வின் வெற்றியை உலகத்தில் உள்ள இந்தியர்கள் கொண்டாடுகிறார்கள் என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
இந்த கூட்டத்தில்உத்தர பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், ஸ்மிருதி இராணி, சுஷ்மா ஸ்வராஜ், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு ஜனாதிபதி மாளிகை சென்ற நரேந்திரமோடி அங்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களின் ஆதரவு கடிதங்களையும் ஜனாதிபதியிடம் மோடி வழங்கினார். வரும் 30-ம் தேதி அவர் பிரதமராக பதவியேற்பார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
வங்கதேசம் செல்ல பி.சி.சி.ஐ. மறுப்பு? - ஆசிய கோப்பை தொடர் நடைபெறுவதில் சிக்கல்
19 Jul 2025மும்பை : ஆலோசனை கூட்டத்திற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ), வங்காளதேசம் செல்ல மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
சிறந்த கேப்டனாக வர கில்லுக்கு முழு தகுதி: கிரிஸ்டன் புகழாரம்
19 Jul 2025லண்டன் : இந்திய அணியின் சிறந்த கேப்டனாக வருவதற்கான அத்தனை தகுதிகளும் சுப்மன் கில்லிடம் இருக்கிறது என கேரி கிரிஸ்டன் தெரிவித்துள்ளார்.
-
உண்மையான சோதனையே இனிதான்: கிரேக் சேப்பல்
19 Jul 2025லண்டன் : இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லுக்கு உண்மையான சோதனை மான்செஸ்டர் டெஸ்ட்டிலிருந்து தொடங்கவுள்ளதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் தெரிவித
-
அசாருதீன் வீட்டில் திருட்டு
19 Jul 2025இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீனின் வீட்டில் இருந்து பணம் மற்றும் பொருட்கள் திருடுபோயுள்ளது.
-
இங்கி.க்கு எதிரான 4-வது டெஸ்ட்: கருண் நாயர் இடம் பெறுவாரா? - உதவி பயிற்சியாளர் விளக்கம்
19 Jul 2025மான்செஸ்டர் : 4வது டெஸ்ட் போட்டியில், கருண் நாயர் இடம் பெறுவாரா என்பது குறித்து இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் விளக்கமளித்துள்ளார்.
-
கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பிலிருந்து விலகினார் ருதுராஜ் கெய்க்வாட்
19 Jul 2025லண்டன் : கவுன்ட்டி சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக ருதுராஜ் கெய்க்வாட் விலகியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-07-2025.
20 Jul 2025 -
நடப்பாண்டில் 3-வது முறை நிரம்பியது மேட்டூர் அணை
20 Jul 2025மேட்டூர் : மேட்டர் அணை நடப்பாண்டில் 3வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை நேற்று காலை 8 மணிக்கு எட்டியது.
-
அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் ரஷ்யாவுக்கு சுனாமி எச்சரிக்கை
20 Jul 2025மாஸ்கோ : ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரி
-
3 முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் பதிலளிக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
20 Jul 2025புதுடெல்லி : வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின்போது மூன்று முக்கிய விஷயங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்துக்கு வந்து பதில் அளிக்க வேண்டும் என்ற
-
சேலத்தில் இன்று நடைபெறுகிறது த.வெ.க.வின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
20 Jul 2025சென்னை : சேலத்தில் இன்று மாலை பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.
-
கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு குறித்து தேசிய கருத்தரங்குகள்: தங்கம் தென்னரசு
20 Jul 2025மதுரை : தமிழ்நாட்டில் கல்வெட்டுகளை கண்டுபிடிப்பதில் நாம் அடைந்திருக்கும் உயரம் குறித்து அனைவருக்கும் தெரியும் வகையில் தேசிய கருத்தரங்கள் நடத்தப்படும் என அமை
-
கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள் மூவர் இடைநீக்கம்: ராமதாஸ் அதிரடி
20 Jul 2025சென்னை : கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக பா.ம.க.
-
சட்டமன்றக் கூட்டத்தில் செல்போனில் ரம்மி விளையாடிய மகாராஷ்டிர விவசாயத்துறை அமைச்சர்
20 Jul 2025மும்பை : மகாராஷ்டிர மாநில விவசாயத்துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது செல்போனில் ரம்மி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
-
த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திடீரென ஒத்திவைப்பு
20 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று நடைபெறுவதாக இருந்த த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை பற்றி பாராளுமன்றத்தில் பேச மத்திய அரசு தயார்: அமைச்சர் கிரண் ரிஜிஜூ உறுதி
20 Jul 2025புதுடில்லி : ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாராளுமன்றத்தில் மத்திய அரசு பேச தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறி உள்ளார்.
-
தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம்: உதயநிதி ஸ்டாலின்
20 Jul 2025சென்னை : தமிழ்நாட்டின் மானம் காக்க களம் புகுவோம் - பாசிசத்தை நொறுக்குவோம் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
20 Jul 2025மதுரை : கார் ஏற்றிக் கொல்ல சதி என கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, படுத்த படுகையில் இருக்கும் மதுரை ஆதினத்திடம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர்.
-
ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம்: கேரளா ஐகோர்ட் உத்தரவு
20 Jul 2025திருவனந்தபுரம் : நீதிமன்ற உத்தரவுகளை மொழிபெயர்த்து தர, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது என கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளி அல்ல : எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
20 Jul 2025திருத்துறைப்பூண்டி : ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
தர்மஸ்தலா கோவில் விவகாரம்: சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்தது கர்நாடக அரசு
20 Jul 2025மங்களூரு : தர்மஸ்தலா கோவில் விவகாரத்தில் கர்நாடக அரசு 4 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நேற்று (ஜூலை 20) அமைத்து உத்தரவிட்டுள்ளது.
-
விமான விபத்து பற்றி உள்நோக்கத்துடன் செய்தி : மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு
20 Jul 2025புதுடில்லி : ஏர் இந்தியா விமான விபத்து பற்றி மேற்கத்திய ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடுவதாக, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவ
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் : அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
20 Jul 2025சென்னை : 2026 சட்டசபை தேர்தலிலும் இ.பி.எஸ். படுதோல்வி அடைவார் என்று நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
-
அமர்நாத் யாத்திரை: ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது
20 Jul 2025ஜம்மு : அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்முவில் இருந்து 20-வது குழு புறப்பட்டது