எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : நடப்பாண்டில் 24 லட்சத்து 20 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
ஆய்வு செய்ய...
சென்னை ராஜா அண்ணாமலைப்புரத்தில் செட்டிநாடு வித்யாசிரமம் பள்ளியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அதிகாரிகளுடன் நேற்று பள்ளி வாகனங்களின் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தார். இதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோடைக்கால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதும் பள்ளி வாகனங்கள் அனைத்தும் ஆய்வு செய்த பின்னரே இயக்கப்பட வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதே வழியில் பள்ளி வாகனங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
1,433 வாகனங்கள்...
தமிழகத்தில் 32 ஆயிரத்து 576 பள்ளி வாகனங்கள் இருக்கின்றன. இதில் 31 ஆயிரத்து 143 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஆயிரத்து 9 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு தீர்வு காணப்பட்ட பின்னர் தான் இயக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இன்னும் ஆயிரத்து 433 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும். அதையும் ஆய்வு செய்த பின்னரே அவற்றை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவை ஆய்வு செய்த பிறகே குழந்தைகளை அழைத்து செல்ல அனுமதிக்கப்படும். அதன் தொடர்ச்சியாக பள்ளி வாகனங்களை அதிகாரிகளுடன் ஆய்வு செய்துள்ளேன்.
அதிகாரிகளுக்கு...
தமிழகத்தில் சென்ற ஆண்டு 20 லட்சத்து 55 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 24 லட்சத்து 20 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்பட வேண்டும். அதற்குரிய ஒப்பந்தப் புள்ளிகளுக்கு வரும் 17-ம் தேதி கடைசிநாள். ஒப்பந்தப் புள்ளிகள் முடிந்ததும் இலவச பஸ் பாஸ் வழங்கும் பணி விரைவில் தொடங்கும். இலவச பஸ் பாஸ் வழங்கும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார். அது வரை பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே போதும் அவர்களிடம் பஸ் பாஸ் கேட்கக் கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சீருடை அணிந்திருந்தாலே பேருந்துகளில் மாணவர்களை அனுமதிக்கலாம் என்று போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் தங்களது பழைய பயண அட்டையை காண்பித்தாலே அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம்.
மின்சார பேருந்து...
தமிழகத்தில் மின்சார பேருந்து இயக்குவதற்காக இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் நடைபெற்ற அதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டார். முதற்கட்டமாக, சென்னை, மதுரை கோவை ஆகிய மாவட்டத்தில் 500 பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மத்திய அரசின் மானியத்தில் மின்சார பேருந்துகள் தமிழகத்தில் விரைவில் இயக்கப்படும். மேலும் உலக அளவில் வெப்பமயமாதலை தடுப்பதற்கான 12 ஆயிரம் மாசில்லா பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கிராமங்களில்...
ஹெல்மெட் கட்டாய சட்டத்தை அமல்படுத்தும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்ற உத்தரவு குறித்து மாநகரங்களில் விழிப்புணர்வு அதிகளவு இருக்கிறது. எனவே அதிகமான எண்ணிக்கையில் நகரங்களில் வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிகிறார்கள். அந்தளவுக்கு கிராமங்களில் விழிப்புணர்வு இல்லை. கிராமப்புறங்களில் குறைவான மக்களே ஹெல்மெட் அணிகிறார்கள். போக்குவரத்துத் துறையினரும், போலீசாரும் லட்சக்கணக்கானோரிடம் ஆய்வு செய்து அபராதம் விதிக்கிறார்கள். ஹெல்மெட் கட்டாயமாக்கும் சட்டத்தை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நிறைவேற்றுவோம்.
எலெக்ட்ரானிக் மீட்டர்...
பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் போதே வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கிறார்கள். அவை அதிகமாக இருந்தால் அவை முறைப்படுத்தப்படும். மக்களிடமிருந்து அது குறித்து கோரிக்கை வந்தால் உரிய வகையில் பரிசீலிக்கப்படும். ஆட்டோக்களுக்கு எலெக்ட்ரானிக் மீட்டர் அமைப்பது குறித்து ஒப்பந்தப்புள்ளிகள் போடப்பட்டு விட்டன. மிக விரைவில் எலெக்ட்ரானிக் மீட்டர்கள் பொருத்தப்படும். அந்த எலெக்ட்ரானிக் மீட்டரிலேயே கட்டணத்திற்குரிய ரசீது வரும். அந்த மீட்டரிலேயே பயணிகளுக்கான புகாரும் பெறப்பட்டு அதற்கான கட்டுப்பாட்டறையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கேமராக்கள் மூலம்...
அரசு பேருந்துகள் 80 கி.மீ. வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு மேல் வேகத்தில் பேருந்துகள் செல்லாது. 22 ஆயிரம் பேருந்துகள் இருப்பதால் விபத்துக்கள் அதிகம் நடப்பதை போல் தெரிகிறது. வேகக்கட்டுப்பாட்டை மீறி விபத்துக்கள் நடைபெற்றாலும் கேமராக்கள் மூலம் கண்டறியப்பட்டு பேருந்து ஒட்டுனர் மீது தவறிருந்தால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் அரசு பேருந்துகள் மூலமான விபத்து முன்பை விட குறைத்திருக்கிறது என்பதே உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
2 நாட்களில் முடிவுக்கு வந்த ஆஷஸ் டெஸ்ட்: ஆஸி., கிரிக்கெட் வாரியத்திறகு 60.59 கோடி ரூபாய் நஷ்டம்
28 Dec 2025மெல்போர்ன், இங்கிலாந்துக்கு எதிரான 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டி 2 நாட்களில் முடிவுக்கு வந்ததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கு சுமார் ரூ.60.59கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது
-
விஜயகாந்த் 2-ம் ஆண்டு நினைவு தினம்: பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க.வினர் பேரணி
28 Dec 2025சென்னை, தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க.வினர் பேரணி நடத்தினர்.
-
மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு புகழஞ்சலி: த.வெ.க. தலைவர் விஜய் பதிவு
28 Dec 2025சென்னை, மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்திற்கு என் புகழஞ்சலி என்று த.வெ.க. தலைவர் விஜய் பதிவிட்டுள்ளார்.
-
கர்நாடகா: மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரான்ஸ் சுற்றுலா பயணி மீட்பு
28 Dec 2025பெங்களூரு, கர்நாடகாவில் மலையேற்றத்தின்போது தவறி விழுந்த பிரான்ஸ் சுற்றுலா பயணி உயிருடன் மீட்கப்பட்டார்.
-
இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
28 Dec 2025பல்லடம், பல்லடத்தில் இன்று தி.மு.க. மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. இதில் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். தி.மு.க.
-
சேலத்தில் ராமதாஸ் தரப்பில் இன்று பொதுக்குழுக் கூட்டம்
28 Dec 2025சென்னை, சேலத்தில் இன்று ராமதாஸ் தரப்பில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
-
விஜய்யின் அரசியல் பயணம்: இலங்கை முன்னாள் அதிபரின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து
28 Dec 2025கொழும்பு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் பயணம் வெற்றிக்கரமாக அமைய இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே வாழ்த்து தெரிவித்
-
கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன்: எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி
28 Dec 2025சென்னை, கலைத்துறையிலும், பொதுவாழ்விலும் கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய சாதனைகளை நினைவு கூர்கிறேன் என்று அவரது நினைவு நாளில் அ.தி.மு.க.
-
அன்புமணி பின்னால் சென்றவர்கள் மீண்டும் ராமதாஸ் பக்கம் வருவார்கள்: ஜி.கே.மணி பேட்டி
28 Dec 2025சேலம், சேலத்தில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ.
-
கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு சி.சுப்பிரமணியத்தின் பெயர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
28 Dec 2025சென்னை, கோவை ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை உள்ள உயர்மட்ட மேம்பாலத்துக்கு முன்னாள் மத்திய அமைச்சர் சி.சுப்பிரமணியம் பெயர் சூட்டப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின
-
ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்கிறது இஸ்ரோ
28 Dec 2025ஸ்ரீஹரிகோட்டா, ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.
-
தர்மத்துக்கு சிரமம் ஏற்பட்டாலும் இறுதியில் அறம்தான் வெல்லும்: நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து
28 Dec 2025மதுரை, தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் ஏற்படும் போரில், தர்மத்துக்கு சிரமம் ஏற்படத்தான் செய்யும், இறுதியில் அறம்தான் வெல்லும் என்ற செய்தியை சொல்வதுதான் கம்பராமாயணம் தேர
-
5 ஆண்டுகளுக்கு பிறகு மியான்மரில் பொதுத்தேர்தல்
28 Dec 2025மியான்மர், மியான்மரில் உள்நாட்டுப் போர் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் 5 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் பொதுத்தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று தொடங்கி நடைபெற
-
துணை துணை ஜனாதிபதி இன்று புதுச்சேரி வருகை: மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு
28 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் இன்று முக்கிய நிகழ்வுகளில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார். இதற்காக மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு மீனவர்கள் 61 பேரை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கடிதம்
28 Dec 2025சென்னை, இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 61 பேரை விடுவிக்க தூதரக ரீதியில் நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச
-
நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்தார் ஜனாதிபதி முர்மு
28 Dec 2025பெங்களூரு, கல்வாரி வகையை சேர்ந்த நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ்.
-
பா.ஜ.க.-விடம் உண்மை இல்லை: மல்லிகார்ஜூன கார்கே பேச்சு
28 Dec 2025டெல்லி, இன்று, பா.ஜ.க.-விடம் அதிகாரம் இருக்கிறது.
-
விஜயகாந்த் 2-ம் நினைவு நாள்: பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மரியாதை
28 Dec 2025சென்னை, மறைந்த தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் நினைவிடத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன். ராதா கிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன் மரியாதை செலுத்தினர்.
-
பெங்களூரு வீடுகள் இடிப்பு விவகாரம்: முதல்வர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் மேலிடம் அறிவுரை
28 Dec 2025பெங்களூரு, பெங்களூருவின் பயெலஹங்கா அருகே உள்ள கோகிலு பகுதியில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.
-
தயவுசெய்து மீண்டும் நடியுங்கள்: விஜய்க்கு நடிகர் நாசர் கோரிக்கை
28 Dec 2025சென்னை, நடிகர் விஜய் மீண்டும் நடிக்க வேண்டும் எனவும், அப்படி நடித்தால் யாரும் அவரை குறை சொல்ல மாட்டார்கள் என்றும் நடிகர் நாசர் தெரிவித்துள்ளார்.
-
சம வேலைக்கு சம ஊதியம் கோரி மூன்றாவது நாளாக போராட்டம்: இடைநிலை ஆசிரியர்கள் கைது
28 Dec 2025சென்னை, 3-வது நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் நேற்று கைது செய்யப்ப
-
2-ம் ஆண்டு குருபூஜை: விஜயகாந்த் நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை
28 Dec 2025சென்னை, மறைந்த தே.மு.தி.க.
-
த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கம்
28 Dec 2025சென்னை, த.வெ.க.வில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.வை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
-
ரயில் 2 வினாடிகளில் 700 கி.மீ. வேகம் சீன ஆராய்சியாளர்கள் புதிய உலக சாதனை..!
28 Dec 2025பெய்ஜிங், சீன ஆராய்சியாளர்கள் 2 நொடியில் மணிக்கு 700 கிலோ மீட்டர் வேகம் எட்டக்கூடிய சோதனை வாகனத்தை இயக்கி உலக சாதனை படைத்துள்ளனர்.
-
வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: அஸ்ஸாமில் 10.56 லட்சம் போ் நீக்கம்
28 Dec 2025திஸ்பூர், அஸ்ஸாமில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்தைத் தொடா்ந்து, அந்தப் பட்டியலில் இருந்து 10.56 லட்சம் போ் நீக்கப்பட்டுள்ளனா்.



