எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : நடப்பாண்டில் 24 லட்சத்து 20 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
ஆய்வு செய்ய...
சென்னை ராஜா அண்ணாமலைப்புரத்தில் செட்டிநாடு வித்யாசிரமம் பள்ளியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அதிகாரிகளுடன் நேற்று பள்ளி வாகனங்களின் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தார். இதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோடைக்கால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதும் பள்ளி வாகனங்கள் அனைத்தும் ஆய்வு செய்த பின்னரே இயக்கப்பட வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதே வழியில் பள்ளி வாகனங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
1,433 வாகனங்கள்...
தமிழகத்தில் 32 ஆயிரத்து 576 பள்ளி வாகனங்கள் இருக்கின்றன. இதில் 31 ஆயிரத்து 143 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஆயிரத்து 9 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு தீர்வு காணப்பட்ட பின்னர் தான் இயக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இன்னும் ஆயிரத்து 433 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும். அதையும் ஆய்வு செய்த பின்னரே அவற்றை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவை ஆய்வு செய்த பிறகே குழந்தைகளை அழைத்து செல்ல அனுமதிக்கப்படும். அதன் தொடர்ச்சியாக பள்ளி வாகனங்களை அதிகாரிகளுடன் ஆய்வு செய்துள்ளேன்.
அதிகாரிகளுக்கு...
தமிழகத்தில் சென்ற ஆண்டு 20 லட்சத்து 55 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 24 லட்சத்து 20 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்பட வேண்டும். அதற்குரிய ஒப்பந்தப் புள்ளிகளுக்கு வரும் 17-ம் தேதி கடைசிநாள். ஒப்பந்தப் புள்ளிகள் முடிந்ததும் இலவச பஸ் பாஸ் வழங்கும் பணி விரைவில் தொடங்கும். இலவச பஸ் பாஸ் வழங்கும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார். அது வரை பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே போதும் அவர்களிடம் பஸ் பாஸ் கேட்கக் கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சீருடை அணிந்திருந்தாலே பேருந்துகளில் மாணவர்களை அனுமதிக்கலாம் என்று போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் தங்களது பழைய பயண அட்டையை காண்பித்தாலே அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம்.
மின்சார பேருந்து...
தமிழகத்தில் மின்சார பேருந்து இயக்குவதற்காக இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் நடைபெற்ற அதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டார். முதற்கட்டமாக, சென்னை, மதுரை கோவை ஆகிய மாவட்டத்தில் 500 பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மத்திய அரசின் மானியத்தில் மின்சார பேருந்துகள் தமிழகத்தில் விரைவில் இயக்கப்படும். மேலும் உலக அளவில் வெப்பமயமாதலை தடுப்பதற்கான 12 ஆயிரம் மாசில்லா பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கிராமங்களில்...
ஹெல்மெட் கட்டாய சட்டத்தை அமல்படுத்தும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்ற உத்தரவு குறித்து மாநகரங்களில் விழிப்புணர்வு அதிகளவு இருக்கிறது. எனவே அதிகமான எண்ணிக்கையில் நகரங்களில் வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிகிறார்கள். அந்தளவுக்கு கிராமங்களில் விழிப்புணர்வு இல்லை. கிராமப்புறங்களில் குறைவான மக்களே ஹெல்மெட் அணிகிறார்கள். போக்குவரத்துத் துறையினரும், போலீசாரும் லட்சக்கணக்கானோரிடம் ஆய்வு செய்து அபராதம் விதிக்கிறார்கள். ஹெல்மெட் கட்டாயமாக்கும் சட்டத்தை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நிறைவேற்றுவோம்.
எலெக்ட்ரானிக் மீட்டர்...
பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் போதே வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கிறார்கள். அவை அதிகமாக இருந்தால் அவை முறைப்படுத்தப்படும். மக்களிடமிருந்து அது குறித்து கோரிக்கை வந்தால் உரிய வகையில் பரிசீலிக்கப்படும். ஆட்டோக்களுக்கு எலெக்ட்ரானிக் மீட்டர் அமைப்பது குறித்து ஒப்பந்தப்புள்ளிகள் போடப்பட்டு விட்டன. மிக விரைவில் எலெக்ட்ரானிக் மீட்டர்கள் பொருத்தப்படும். அந்த எலெக்ட்ரானிக் மீட்டரிலேயே கட்டணத்திற்குரிய ரசீது வரும். அந்த மீட்டரிலேயே பயணிகளுக்கான புகாரும் பெறப்பட்டு அதற்கான கட்டுப்பாட்டறையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கேமராக்கள் மூலம்...
அரசு பேருந்துகள் 80 கி.மீ. வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு மேல் வேகத்தில் பேருந்துகள் செல்லாது. 22 ஆயிரம் பேருந்துகள் இருப்பதால் விபத்துக்கள் அதிகம் நடப்பதை போல் தெரிகிறது. வேகக்கட்டுப்பாட்டை மீறி விபத்துக்கள் நடைபெற்றாலும் கேமராக்கள் மூலம் கண்டறியப்பட்டு பேருந்து ஒட்டுனர் மீது தவறிருந்தால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் அரசு பேருந்துகள் மூலமான விபத்து முன்பை விட குறைத்திருக்கிறது என்பதே உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 6 days ago |
-
ஏறுமுகத்தில் தங்கம் விலை
03 Jul 2025சென்னை, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூலை 3) பவுனுக்கு ரூ.320 உயர்ந்து விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது நகை வாங்குவோர் மத
-
உதயநிதிக்கு கம்ப்யூட்டர் மைண்ட்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு
03 Jul 2025வேலூர்: துணை முதல்வர் உதயநிதிக்கு அவரது தாத்தா கருணாநிதி போல் கம்ப்யூட்டர் மைண்ட் என துரை முருகன் பேசினார்.
-
1,000 ரூபாய் பயண அட்டை மின்சார பஸ்களில் செல்லுமா? போக்குவரத்து கழகம் விளக்கம்
03 Jul 2025சென்னை, மின்சார பஸ்களில் பயண அட்டை செல்லுமா என்பது குறித்து போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது: அணையின் நீர்மட்டமும் சரிவு
03 Jul 2025சேலம், மேட்டூர் அணைக்கு வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, காவிரி ஆற்றிலிருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18,615 கன அடியாக சரிந்தது அணையின் நீர்வரத்துக் குறைந்த
-
வரும் 19-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம்: எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசு அழைப்பு
03 Jul 2025புதுடெல்லி, பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி வருகிற ஜூலை 19-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
-
அடுத்த 2 நாட்களுக்கு கோவை, நீலகிரியில் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
03 Jul 2025சென்னை, தமிழகத்தில் நீலகிரி கோவையில் ஜூலை 5 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள் த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு
03 Jul 2025சென்னை: த.வெ.க.
-
40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை தரமணியில் 'தமிழ் அறிவு வளாகம்' முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்
03 Jul 2025சென்னை, 40 கோடி ரூபாய் மதிப்பில் சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
மாலியில் இந்தியர்கள் 3 பேர் கடத்தல்: பத்திரமாக மீட்க இந்தியா கோரிக்கை
03 Jul 2025புதுடெல்லி, மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கேய்ஸ் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையிலிருந்து கடத்தப்பட்ட 3 இந்திய தொழிலாளர்களை உடனடியாக மீட்க வேண்டுமென மத்திய வெளியுறவு
-
காவலாளி அஜித்குமார் மரணம்: மனித உரிமை ஆணையம் விசாரணை
03 Jul 2025திருப்புவனம்: திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையில் இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த வழக்கை, தாமாக முன்வந்து விசாரணைக்கு தமிழக மாநில மனித உரிமை ஆணையம் எடுத்தது.
-
விரைவில் கையெழுத்தாகிறது இந்தியா-அமெரிக்கா இடையேயான பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்
03 Jul 2025புதுடெல்லி, இந்தியா - அமெரிக்கா இடையே 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகிறது.
-
கேரளத்துக்கு விடைகொடுத்த பிரிட்டன் போர் விமானம் பாகுபலி விமானம் மூலம் தூக்கிச் செல்லப்பட்டது
03 Jul 2025திருவனந்தபுரம்: பிரிட்டனின் எப்-35 போர் விமானம் திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் அவசரமாக தரையிறங்கிய நிலையில், சி-17 குளோப்மாஸ்டர் போக்குவரத்து விம
-
20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர்: 'நீட்' மறுதேர்வு நடத்தக் கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
03 Jul 2025சென்னை, நீட் தேர்வின்போது மின் தடையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மறு தேர்வு நடத்த கோரிய மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவில் ஹாக்கி விளையாட பாகிஸ்தான் அணிக்கு அனுமதி
03 Jul 2025புதுடில்லி: அடுத்த மாதம் இந்தியாவின் பீஹாரில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது
-
பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்
03 Jul 2025டெல்லி, பிரதமர் மோடிககு கானா நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.
-
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீத வரி: அமைச்சர் ஜெய்சங்கர் கவலை
03 Jul 2025வாஷிங்டன்: ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு 500 சதவீத வரி விதிக்க முன்மொழியும் அமெரிக்க மசோதா குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
-
திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: சிறப்புப் பேருந்துகள் இயக்கம்
03 Jul 2025திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
-
நம்பிக்கையளிக்கும் கில்: ஜோனதன் டிராட் புகழாரம்
03 Jul 2025பர்மிங்ஹாம்: இந்திய அணி வீரர்களுக்கும் நம்பிக்கையளிக்கும் விதமாக ஷுப்மன் கில் விளையாடுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் பாராட்டியுள்ளார்.
-
மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் விழா: பதக்கங்களை டி.ஜி.பி. சங்கர் ஜிவால் வழங்கினார்
03 Jul 2025சென்னை, மாநில காவல் பணித்திறனாய்வு போட்டிகள் நிறைவு விழாவில் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் பதக்கங்களை வழங்கினார்.
-
4-வது முறையாக ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாப்ட்..!
03 Jul 2025வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம் 4-வது முறையாக தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
-
'ஓரணியில் தமிழ்நாடு' பிரசாரம் துவக்கம்: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் மக்களை வீடு வீடாக சென்று சந்தித்தார்
03 Jul 2025சென்னை, சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் குறித்து எடுத்துரைத்தார்.
-
புதிதாக 14 பேருக்கு தொற்று: மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
03 Jul 2025புனே: மகாராஷ்டிராவில் புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கு கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.
-
அடுத்த புத்த மதத் தலைவரை சீனா தீர்மானிக்க முடியாது: இந்தியா பதிலடி
03 Jul 2025புதுடெல்லி: “அடுத்த தலாய் லாமா குறித்த முடிவை எடுக்கும் உரிமை என்பது தற்போதைய புத்த மதத் தலைவரான தலாய் லாமா மற்றும் தலாய் லாமாவின் ‘காடன் போட்ராங் அறக்கட்டளை’ தவிர்த்து
-
காவலாளி அஜித்குமார் வழக்கு: வீடியோ எடுத்தவருக்கு போலீஸ் பாதுகாப்பு
03 Jul 2025திருப்புவனம்: சிவகங்கையில் போலீசார் தாக்கியதில் அஜித்குமார் என்ற இளைஞர் உயிரிழந்த வழக்கில், முக்கிய சாட்சியான சக்தீஸ்வரனுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.