எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : நடப்பாண்டில் 24 லட்சத்து 20 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டைகள் விரைவில் வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
ஆய்வு செய்ய...
சென்னை ராஜா அண்ணாமலைப்புரத்தில் செட்டிநாடு வித்யாசிரமம் பள்ளியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அதிகாரிகளுடன் நேற்று பள்ளி வாகனங்களின் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தார். இதன் பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோடைக்கால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதும் பள்ளி வாகனங்கள் அனைத்தும் ஆய்வு செய்த பின்னரே இயக்கப்பட வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதே வழியில் பள்ளி வாகனங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
1,433 வாகனங்கள்...
தமிழகத்தில் 32 ஆயிரத்து 576 பள்ளி வாகனங்கள் இருக்கின்றன. இதில் 31 ஆயிரத்து 143 பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஆயிரத்து 9 வாகனங்களில் குறைபாடுகள் கண்டறியப்பட்டு தீர்வு காணப்பட்ட பின்னர் தான் இயக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இன்னும் ஆயிரத்து 433 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டும். அதையும் ஆய்வு செய்த பின்னரே அவற்றை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவை ஆய்வு செய்த பிறகே குழந்தைகளை அழைத்து செல்ல அனுமதிக்கப்படும். அதன் தொடர்ச்சியாக பள்ளி வாகனங்களை அதிகாரிகளுடன் ஆய்வு செய்துள்ளேன்.
அதிகாரிகளுக்கு...
தமிழகத்தில் சென்ற ஆண்டு 20 லட்சத்து 55 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 24 லட்சத்து 20 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்பட வேண்டும். அதற்குரிய ஒப்பந்தப் புள்ளிகளுக்கு வரும் 17-ம் தேதி கடைசிநாள். ஒப்பந்தப் புள்ளிகள் முடிந்ததும் இலவச பஸ் பாஸ் வழங்கும் பணி விரைவில் தொடங்கும். இலவச பஸ் பாஸ் வழங்கும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார். அது வரை பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே போதும் அவர்களிடம் பஸ் பாஸ் கேட்கக் கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சீருடை அணிந்திருந்தாலே பேருந்துகளில் மாணவர்களை அனுமதிக்கலாம் என்று போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் தங்களது பழைய பயண அட்டையை காண்பித்தாலே அரசு பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம்.
மின்சார பேருந்து...
தமிழகத்தில் மின்சார பேருந்து இயக்குவதற்காக இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. சென்னையில் நடைபெற்ற அதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டார். முதற்கட்டமாக, சென்னை, மதுரை கோவை ஆகிய மாவட்டத்தில் 500 பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மத்திய அரசின் மானியத்தில் மின்சார பேருந்துகள் தமிழகத்தில் விரைவில் இயக்கப்படும். மேலும் உலக அளவில் வெப்பமயமாதலை தடுப்பதற்கான 12 ஆயிரம் மாசில்லா பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கிராமங்களில்...
ஹெல்மெட் கட்டாய சட்டத்தை அமல்படுத்தும்படி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்ற உத்தரவு குறித்து மாநகரங்களில் விழிப்புணர்வு அதிகளவு இருக்கிறது. எனவே அதிகமான எண்ணிக்கையில் நகரங்களில் வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிகிறார்கள். அந்தளவுக்கு கிராமங்களில் விழிப்புணர்வு இல்லை. கிராமப்புறங்களில் குறைவான மக்களே ஹெல்மெட் அணிகிறார்கள். போக்குவரத்துத் துறையினரும், போலீசாரும் லட்சக்கணக்கானோரிடம் ஆய்வு செய்து அபராதம் விதிக்கிறார்கள். ஹெல்மெட் கட்டாயமாக்கும் சட்டத்தை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நிறைவேற்றுவோம்.
எலெக்ட்ரானிக் மீட்டர்...
பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் போதே வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கிறார்கள். அவை அதிகமாக இருந்தால் அவை முறைப்படுத்தப்படும். மக்களிடமிருந்து அது குறித்து கோரிக்கை வந்தால் உரிய வகையில் பரிசீலிக்கப்படும். ஆட்டோக்களுக்கு எலெக்ட்ரானிக் மீட்டர் அமைப்பது குறித்து ஒப்பந்தப்புள்ளிகள் போடப்பட்டு விட்டன. மிக விரைவில் எலெக்ட்ரானிக் மீட்டர்கள் பொருத்தப்படும். அந்த எலெக்ட்ரானிக் மீட்டரிலேயே கட்டணத்திற்குரிய ரசீது வரும். அந்த மீட்டரிலேயே பயணிகளுக்கான புகாரும் பெறப்பட்டு அதற்கான கட்டுப்பாட்டறையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கேமராக்கள் மூலம்...
அரசு பேருந்துகள் 80 கி.மீ. வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு மேல் வேகத்தில் பேருந்துகள் செல்லாது. 22 ஆயிரம் பேருந்துகள் இருப்பதால் விபத்துக்கள் அதிகம் நடப்பதை போல் தெரிகிறது. வேகக்கட்டுப்பாட்டை மீறி விபத்துக்கள் நடைபெற்றாலும் கேமராக்கள் மூலம் கண்டறியப்பட்டு பேருந்து ஒட்டுனர் மீது தவறிருந்தால் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால் அரசு பேருந்துகள் மூலமான விபத்து முன்பை விட குறைத்திருக்கிறது என்பதே உண்மை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 17 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.