லக்னோ : தனது தொகுதியான அமேதிக்கு நேற்று சென்ற ராகுல் காந்தி அங்கு காங்கிரஸ் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி பாராளுமன்ற தொகுதியில் நான்கு முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ராகுல் காந்தி, கடந்த பாராளுமன்ற தேர்தல் அமேதி மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அமேதி தொகுதியை பா.ஜ.க. வேட்பாளர் ஸ்மிருதி இராணியிடம் அவர் பறிகொடுத்து வயநாட்டில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் ராஜினாமா செய்த ராகுல், பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பின்னர் முதன்முறையாக நேற்று அமேதி தொகுதிக்கு சென்றார். அங்குள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து பொதுக்கூட்டம் ஒன்றிலும் ராகுல் காந்தி பேச நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.