எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பதி திருமலையில் 10 ஆண்டுக்குப்பிறகு மீண்டும் பொறுப்பேற்ற சிறப்பு நிர்வாக அதிகாரி, ஏழுமலையானிடம் வேண்டியது பலித்து விட்டதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
திருப்பதி தொடர்பான அனைத்து விஷயங்களையும் கவனித்துக்கொள்ள இணை நிர்வாக அதிகாரி பொறுப்பில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை ஆந்திர மாநில அரசு நியமிப்பது வழக்கம்.ஆந்திராவில் சட்டசபை தேர்தல் நடந்து ஜெகன்மோகன் ரெட்டி முதல்-அமைச்சர் பதவி ஏற்றவுடன் திருப்பதியில் நிர்வாக பொறுப்புக்காக இணை நிர்வாக அதிகாரிக்கு பதில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது.
ஆந்திர முதல்-அமைச்சராக ராஜசேகர ரெட்டி இருந்தபோது திருப்பதி சிறப்பு அதிகாரியாக பணியாற்றி பாதுகாப்பு துறையில் உடைமைகள் பிரிவு அதிகாரியாக பணியாற்றிய தர்மா ரெட்டி மீண்டும் திருப்பதி மலையில் சிறப்பு அதிகாரியாக பணியமர்த்தப்படுவர் என்று தகவல் பரவியது.அதன் அடிப்படையில் 3 நாட்களுக்கு முன்னர் மத்திய அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட தர்மா ரெட்டி நேற்று முன்தினம் மாலை திருப்பதிக்கு வந்தார். திருப்பதியில் இருந்து பாதயாத்திரையாக நடந்து மலையேறி வந்த அவர் நேற்று ஏழுமலையானை வழிபட்டு கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் சிறப்பு அதிகாரியாக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
பின்னர் கோவிலுக்கு வெளியே தர்மா ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-
இதற்கு முன்னர் 4½ ஆண்டுகள் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியபோது பக்தர்களின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தேன். பணியிடம் மாற்றலாகி இங்கிருந்து சென்றபோது மிகுந்த மனவேதனையுடன் புறப்பட்டு சென்றேன்.
அப்போது முதல் நானும் என் மனைவியும் திருப்பதி மலையில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று ஏழுமலையானிடம் வீட்டின் பூஜை அறையில் தினமும் காலை நேரத்தில் வேண்டிக் கொண்டோம். எங்களது வேண்டுதல் பலித்து மீண்டும் திருப்பதி சிறப்பு அதிகாரியாக 10 ஆண்டுக்கு பிறகு பொறுப்பேற்று இருக்கிறேன்.ஆந்திர மாநில அரசின் உத்தரவுக்கு ஏற்ப, தேவஸ்தான அறங்காவலர் குழு, தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஆகியோரின் வழி காட்டுதலின்படி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் பணியில் மும்மரமாக ஈடுபடுவேன் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
- ரூ.1536.31 கோடி செலவில் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட மதுரையில் ரூ.1,805.78 கோடியில் முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- மக்களிடம் இருந்து மக்களுக்காக உருவான இயக்கம்: தி.மு.க. இயக்கத்தை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்: மதுரை தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
ஆப்கானிஸ்தான் எல்லையில் பாக்., நடத்திய தாக்குதலில் உயிரிழப்பு 80 ஆக உயர்வு
23 Feb 2026இஸ்லாமாபாத், ஆப்கனிஸ்தானுக்கு உட்பட்ட எல்லைப் பகுதிகள் மீது பாகிஸ்தான் விமானப் படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80-க்கும் மேலாக அதிகரி
-
தங்கம் விலை உயர்வு
23 Feb 2026தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,18,880-க்கு விற்பனையானது.
-
நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 17 பேர் பலி
23 Feb 2026காத்மாண்டு, நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் பலியாகினர்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
23 Feb 2026- திருச்செந்தூர் முருகன் தங்க முத்துகிடா வாகனம், அம்பாள் வெள்ளி அன்னவாகனம்.
- மதுரை கூடலழகர் கஜேந்திர மோட்சம், இரவு சேசவாகனம்.
- காரமடை ரெங்கநாதர் விழா தெடக்கம்,
-
இன்றைய நாள் எப்படி?
23 Feb 2026


