முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் கனமழையால் நிகழ்ந்த சம்பவங்களில் 78 பேர் உயிரிழப்பு

செவ்வாய்க்கிழமை, 16 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

நேபாளம் : நேபாளத்தில் கன மழையினால் ஏற்பட்ட விபத்து சம்பவங்களில் 78 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேபாளத்தில் கன மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது. விபத்து சம்பவங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. 40 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த பேரழிவில் இருந்து மீண்டு வர தங்களுக்கும் உதவும்படி சர்வதேச அமைப்புகளுக்கு நேபாள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. வெள்ளத்தில் சிக்கிய 32 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 31 மாவட்டங்களில் இதுவரையில் 3366 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என நேபாள உள்துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து