முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்

வியாழக்கிழமை, 18 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தேனி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல் மாவட்டங்களில் கன மழைக்கும், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது.  மாலத்தீவு, மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீடாமங்கலத்தில் 4 சென்டி மீட்டரும், திருவாரூர், அதிராமப்பட்டினத்தில் 3 சென்டி மீட்டரும், வல்லம், மதுக்கூரில் 2 சென்டி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது என கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து