முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்திவரதர் உற்சவம்: பக்தர்களின் வருகை அதிகரிப்பால் கூடுதல் சிறப்பு ஏற்பாடுகள் - தலைமைச் செயலாளர் சண்முகம் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2019      தமிழகம்
Image Unavailable

காஞ்சிபுரம் : அத்திவரதர் தரிசனத்திற்காக பக்தர்களின் வருகை அதிகரிப்பால் கூடுதல் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் கூறினார்.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் நேற்று 21-வது நாளாக நடைபெற்று வருகிறது. அத்திவரதர் தரிசனத்திற்காக வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கூட்டம் காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் நிர்வாகம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி மற்றும் உயர் அதிகாரிகள் நேற்று காஞ்சிபுரத்தில் நேரில் ஆய்வு செய்தனர்.
இதனையடுத்து தலைமைச் செயலாளர் சண்முகம் அளித்த பேட்டியில் கூறியதாவது,

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிப்பதற்காக மக்கள் கூட்டம் அதிக அளவில் வருகிறது.  இதற்காக பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அத்திவரதர் தரிசன ஏற்பாடுகளை கவனிப்பதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பக்தர்கள் வசதிக்காக கூடுதலாக கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தண்ணீர் மற்றும் மின்சார வசதி கூடுதலாக செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதால் பாதுகாப்புவசதிகள் குறித்து ஆய்வு செய்தோம். அத்திவரதர் தரிசனத்திற்காக எல்.இ.டி. திரையில் காணும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று தரிசனம் செய்கின்றனர். இதனால் அவர்கள் ஓய்வு எடுப்பதற்காக அதிக அளவில் கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன. மேலும் வரிசையில் நீண்ட நேரம் நிற்பதால் ஓய்வு எடுக்க வசதியாக இருக்கை ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

பக்தர்கள் கொண்டு வரும் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு தற்காலிக இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நோயுற்றவர்கள், முதியவர்கள் அத்திவரதரை தரிசிக்க பேட்டரி கார் வசதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவ உதவி அளிப்பதற்காக அதற்கான குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பேட்டரி வாகனங்கள் கூடுதலாக நிறுத்தப்பட்டுள்ளன. பக்தர்களின் காலணிகளை பாதுகாக்கவும் சிறப்பு வசதி உண்டு.

பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் விடிய விடிய சிறப்பான முறையில் பணியாற்றி வருகிறார்கள் கூடுதலாக ஆயிரம் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட முடிவு செய்யப்படுள்ளது. நன்கொடையாளர்கள் கூடுதலாக தண்ணீர், பிஸ்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்திவரதர் தரிசனத்திற்காக மாவட்ட நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளது.

பக்தர்கள் அதிகம் கூடுவதால் இந்த பகுதியில் துப்புரவு பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் காலையிலும் மாலையிலும் அதிகாரிகள் ஆலோசித்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். காஞ்சி அத்திவரதரை தரிசனம் செய்ய வரும் பொதுமக்களுக்கு வி.ஐ.பி.க்கள் தரிசனத்தால் பாதிப்பு ஏற்படாத வகையிலும் எந்த வித இடையூறும் இல்லாத வகையிலும் ஏற்பாடு செய்யப்-பட்டுள்ளது. வரிசையில் நிற்போர் வசதிக்காக நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து