முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சபரிமலையில் 7-ம் தேதி நிறை புத்தரிசி பூஜை

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2019      ஆன்மிகம்
Image Unavailable

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அறுவடை விழாவின் தொடக்கமாக சகல ஐஸ்வர்யம் கிடைக்கவும், செல்வம் பெருகவும் நடத்தப்படும் நிறை புத்தரிசி பூஜை வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அறுவடை விழாவின் தொடக்கமாக சகல ஐஸ்வர்யம் கிடைக்கவும், செல்வம் பெருகவும் ஆண்டுதோறும் நிறை புத்தரிசி பூஜை நடைபெற்று வருகிறது. அப்போது, விளைந்த நெற்கதிர்களை கோவில் சன்னிதானத்தில் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த ஆண்டில் நிறை புத்தரிசி பூஜை வழிபாடு வருகிற 7- ம் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. இது தொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை வருகிற 7- ம் தேதி நடக்கிறது. இதற்காக கோவில் நடை 6- ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும். மறுநாள் நிறைபுத்தரிசி பூஜைகள் நடத்தப்படும். தொடர்ந்து வழக்கமான பூஜைகள் நடைபெறும். பின்னர், இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 16- ம் தேதி மாலை திறக்கப்படும். 17- ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து