முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்தது லண்டன் கோர்ட்

வியாழக்கிழமை, 22 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

லண்டன் : லண்டனில் சிறையில் உள்ள பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்து லண்டன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது

குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் ரூ. 13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார். இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் நீரவ் மோடி லண்டனில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. இந்திய அரசு எடுத்த நடவடிக்கையின் பேரில் நீரவ் மோடியை லண்டன் போலீசார் கடந்த மார்ச் 19-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை ஜாமீனில் விட லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டு மறுத்ததுடன், நீதிமன்றக் காவலை நீட்டித்தது.  இந்நிலையில் நீரவ் மோடியின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக வெஸ்ட் மின்ஸ்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நீரவ் மோடியின் காவலை வரும் செப்டம்பர் 19-ம் தேதி வரை நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து