முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாடுகளில் பிறக்கும் அதிகாரிகளின் குழந்தைகளுக்கு இனி அமெரிக்க குடியுரிமை தானாக கிடைக்காது

வியாழக்கிழமை, 29 ஆகஸ்ட் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : வெளிநாட்டில் பிறந்த அமெரிக்க ராணுவ உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு இனி தானாக அமெரிக்கா குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது நிர்வாகம் பிறப்புரிமை மற்றும் குடியுரிமை தொடர்பான பிரச்சினைகளை தீவிரமாக கவனித்து வருவதாக கடந்த வாரம் கூறியிருந்தார்  இந்த நிலையில், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வெளிநாடுகளில் பிறந்த சில ராணுவ அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் குழந்தைகள் இனி தானாக அமெரிக்க குடியுரிமை பெறமாட்டார்கள் என தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய விதிமுறைகள் படி, வெளிநாட்டில் வசித்து வரும் குழந்தைகளும் அமெரிக்காவில் வசிப்பதாக கணக்கில் கொள்ளப்படுகிறது. ஆனால், புதிய விதிகளின்படி வெளிநாட்டில் இந்த பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மற்றும் தத்துக் குழந்தைகள் அமெரிக்க குடியுரிமையை பெற அதற்குரிய படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும். இந்த திட்டம் அக்டோபர் 29-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து