எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் இந்து மதத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பல்வேறு இடங்களில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
பாகிஸ்தான் சிந்த் மாகாணம், லார்கானாவில் நம்ரிதா சாந்தினி என்ற இந்து மதத்தை சேர்ந்த இளம்பெண், விடுதியில் தங்கியிருந்து பல் மருத்துவ கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இந்நிலையில் விடுதி அறையில் கடந்த திங்கள்கிழமை மர்மமான முறையில் அவர் இறந்து கிடந்தார். அறை பூட்டப்பட்ட நிலையில், கழுத்தில் கயிறு இருகி கட்டிலில் அவர் உயிரிழந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? இல்லை தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.
இதனால் அவரது மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. நம்ரிதா சாந்தினியின் மரணத்துக்கான காரணம் குறித்து தற்போதைக்கு எதையும் தெரிவிக்க இயலாது என்று கராச்சி போலீஸார் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், இந்த சம்பவத்தை கண்டித்து கராச்சியின் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். நம்ரிதாவின் சகோதரர் நிருபர்களிடம் கூறும் போது, சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். நம்ரிதாவின் கழுத்துப் பகுதி கேபிள் வயரால் இறுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். இதே போல் சிந்த் பல்கலைக்கழகத்தில் நைலா ரிந்த் என்ற மாணவி, கடந்த ஜனவரி மாதம் 1-ம் தேதி மின்விசிறியில் தூக்குப் போட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
மத்திய-மாநில உறவு குறித்த உயர்நிலைக் குழுவின் முக்கிய பரிந்துரைகள்
19 Feb 2026சென்னை, பொதுமக்களின் கருத்துகளை கேட்காமல் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தக்கூடாது உள்ளிட்ட முக்கிய பரிந்துரைகள் மத்திய-மாநில உறவு குறித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கையில்
-
எம்.ஜி.ஆர். அ.தி.மு.க என்ற பெயரில் பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சி தொடக்கம்
19 Feb 2026சென்னை, எம்.ஜி.ஆர். அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கினார்.
-
வருகிற மார்ச் 12-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த தஞ்சாவூர் பொதுக்கூட்டம் ரத்து
19 Feb 2026திருச்சி, திருச்சியில் வரும் மார்ச் 11-ம் தேதி பிரதமர் பங்கேற்க விருக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் பேரை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
இலவசங்களை அறிவிப்பது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்: சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
19 Feb 2026புதுடெல்லி, தேர்தலுக்காக இலவசங்களை அறிவிப்பது இன்னும் எத்தனை காலத்திற்கு தொடரும் என்று இலவசங்கள் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்கேள்வி எழுப்பியுள்ளது.
-
தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகள் கவிதா புதிய கட்சித் தொடங்குகிறார்
19 Feb 2026ஐதராபாத், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா புதிய கட்சியைத் தொடங்குவதாகத் தெரிவித்துள்ளார்.


