முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு பள்ளி மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டம்: பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல்

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பஞ்சாப் மாநிலத்தில் அரசு பள்ளியில் படிக்கும் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக அம்ரீந்தர் சிங் உள்ளார். கடந்த சட்டசபை தேர்தலில் அரசு பள்ளி மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அம்மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் நடப்பு நிதியாண்டில் அரசு பள்ளிகளில் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன்படி வரும் டிசம்பரில் முதற்கட்டமாக, இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், அரசு பள்ளிகளில் 11,12 -ம் வகுப்புகளில் படிக்கும் ஸ்மார்ட் போன் இல்லாத மாணவிகளுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளதாகவும் பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து