எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருமங்கலம்.- விருப்ப மனுவிற்கான கட்டணம் அதிகமாக இருப்பதால் விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தி.மு.க.வினர் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனை தொடர்ந்து எதிர்பார்த்த அளவிற்கு விருப்பமனுக்கள் விற்பனையாகாததால் வரும் 27-ம் தேதி வரை விருப்பமனு விநியோகத்தை நீட்டிப்பு செய்து தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அ.தி.மு.க, தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் சார்பில் விருப்ப மனுக்கள் விநியோகம் நடைபெற்று வருகிறது.இதையடுத்து அ.தி.மு.க சார்பில் கடந்த 15 மற்றும் 16ம் தேதிகளில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.அதே போல் கடந்த 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்படும் என தி.மு.க மேலிடம் அறிவித்திருந்தது.இந்நிலையில் இரண்டு நாட்கள் மட்டுமே அ.தி.மு.க சார்பில் விருப்பமனுக்கள் விநியோகிக்கப்பட்டு மீண்டும் பூர்த்தி செய்யப்பட்ட மனுக்கள் நிர்வாகிகளால் பெறப்பட்டது.இருப்பினும் அ.தி.மு.க சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடமிருந்து மிகவும் குறைந்த அளவிலான கட்டணம் விருப்பமனுக்காக வசூலிக்கப்பட்டு முறையாக ரசீதுகளும் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க சார்பில் வழங்கப்பட்ட விருப்பமனுக்களுக்கு மிகவும் குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில் கடந்த எட்டு ஆண்டுகளாக எதிர்கட்சி வரிசையில் இருக்கும் தி.மு.க சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனுக்களின் கட்டணம் அ.தி.மு.க.வை விட இரு மடங்கு அதிகமாக உள்ளது.எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆளும் கட்சியிலிருந்து எதிர்கட்சியாக தி.மு.க மாறியதால் அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தற்போது பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளனர்.இதனை கருத்தில் கொள்ளாத தி.மு.க மேலிடம் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடமிருந்து விருப்பமனுக்கள் என்ற பெயரில் அடாதடி வசூல் செய்து வருகிறது.இதனால் தி.மு.க மேலிடம் விநியோகிக்கும் விருப்ப மனுக்கள் தற்போது கட்சியினரிடம் வெறுப்பு மனுக்களாக மாறி வருகிறது.தி.மு.க.வில் பணம் உள்ளவர்களால் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலையில் சாமானிய தொண்டர்களின் நிலை கேள்விக்குறியாக மாறிவிட்டது.
இதனிடையே அதிகளவு கட்டணம்,பொருளாதாரத்தில் நலிவு போன்ற காரணங்களால் தி.மு.க மேலிடம் எதிர்பார்த் அளவிற்கு விருப்பமனுக்கள் விநியோகம் இல்லாமல் போய்விட்டது.இதனால் அதிர்ச்சியடைந்த தி.மு.க மேலிடம் அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் அழைத்து விருப்பமனுக்கள் போனியாகாததற்காக செம டோஸ் விட்டதுடன் காரண காரியங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டது.எனினும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மீண்டும் ஒரு இலக்கினை நிர்ணயித்த தி.மு.க மேலிடம் விருப்பமனுக்கள் விநியோகத்திற்கான தேதியை வரும் 27ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது.அதனடிப்;படையில் தான் தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் இது தொடர்பான அறிவிப்பினை நேற்று வெளியிட்டுள்ளார்.எது எப்படியோ தி.மு.க மேலிடத்தின் தொடர் நெருக்குதல்கள் காரணமாக விருப்பமனுவானது அக்கட்சியினர் மத்தியில் வெறுப்பு மனுவாக மாறியிப்பதே நிஜம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
டி-20-யில் 100 விக்கெட்: அர்ஷ்தீப் சிங் புதிய மைல்கல்
20 Sep 2025அபுதாபி, டி-20 கிரிக்கெட்டில் குறைந்த போட்டிகளில் 100 விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இந்தியாவின் அர்ஷ்தீப் சிங் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
-
வெளிநாட்டு முதலீடா? வெளிநாட்டில் முதலீடா சி.எம். சார்? - விஜய் கேள்வி
20 Sep 2025நாகை, வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீதா என்று முதல்வருக்கு விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
சென்னை குடிநீர் செயலியை முதல்வர் தொடங்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, சென்னையில் குடிநீர் செயலியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
ட்ரம்பின் கோல்டு கார்டு திட்டம்: இந்திய பணியாளர்களுக்கு சிக்கல்
20 Sep 2025வாஷிங்டன், அதிபர் ட்ரம்பின் புதிய கோல்டு கார்டு திட்டத்தால் இந்திய பணியாளர்களுக்கு சிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
-
பிரதமர் பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா? - த.வெ.க. தலைவர் கேள்வி
20 Sep 2025நாகை, பிரதமர் மோடி பிரசாரத்திற்கு வந்தால் மின்தடை செய்வீர்களா என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
ஓமன் அணிக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்தது: சூர்யகுமார்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான போட்டி கடுமையாக இருந்ததாக இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
கடைசி லீக் ஆட்டம்...
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சிறப்பாக பந்து வீசியது: ஓமன் அணிக்கு சாம்சன் புகழாரம்
20 Sep 2025அபுதாபி, ஓமனுக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓமன் மிகவும் சிறப்பாக பந்து வீசியதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப். 20) தொடக்கி வைத்தார்.
-
2026 தேர்தலில் 2 பேருக்கு இடையே தான் போட்டி..! நாகையில் விஜய் பரபரப்பு பேச்சு
20 Sep 2025நாகை, 2026 தேர்தலில் 2 பேருக்கு நடுவில்தான் போட்டியே.. ஒன்று தவெக. ஒன்று திமுக. என்று விஜய் தெரிவித்துள்ளார்.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டாம்: ஊழியர்களுக்கு நிறுவனங்கள் அறிவுறுத்தல்
20 Sep 2025வாஷிங்டன், எச்1பி விசா விவகாரத்தில் அமெரிக்காவை விட்டு வெளியேறாதீர்கள் என்று ஊழியர்களுக்கு முக்கிய நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளது.
-
ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டம்
20 Sep 2025வாஷிங்டன், ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
-
நைஜீரியாவில் தீ விபத்து: 10 பேர் பலி
20 Sep 2025அபுஜா, நைஜீரியாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.