எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை : பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு குளங்கள், ஏரிகள் நிரம்பியுள்ளன. பாபநாசம், பவானிசாகர் உள்ளிட்ட அணைகளும் நிரம்பியுள்ளன. குற்றாலம் மற்றும் திற்பரப்பு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. வீராணம் ஏரியும் நிரம்பி விட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டித் தீர்த்தது.
தமிழகம் முழுவதும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் எப்போதும் இல்லாத வகையில் மழை பெய்துள்ளது. சென்னையில் 2 நாட்களுக்கு முன்னர் புறநகர் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. தாம்பரத்தில் அதிகபட்சமாக 14 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. இதன் காரணமாக புறநகர் பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. தென்சென்னை பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை 3 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது. சோழிங்கநல்லூரில் அதிகபட்சமாக 11.2 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. கிண்டியில் 10 சென்டிமீட்டரும், மாம்பலத்தில் 9 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. நேற்று காலையிலும் மழை பெய்தது. இதனால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் நிரம்பி வருகின்றன. தாம்பரம் அருகே உள்ள சேலையூர் ஏரி நிரம்பி வழிகிறது. இதே போல புறநகர் பகுதிகளில் உள்ள நன்மங்கலம், தாங்கல், வேளச்சேரி ஏரிகளும் நிரம்பியுள்ளன. நெல்லை - தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. 2 நாட்களாக 3 மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் குற்றாலத்தில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே குற்றால அருவிகளில் தொடர்ந்து தண்ணீர் கொட்டுவதால் ஆலங்குளம், பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரதான பாசன அணையான பாபநாசம் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த அணையில் இருந்து வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. கரையோரங்களில் வசித்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர். சேர்வலாறு அணையும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு ஆகிய அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. புதிதாக தொடங்கப்பட்ட தென்காசி மாவட்ட எல்லைக்குள் அடங்கிய கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் ஆகிய 5 அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இந்த அணைகளில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக மணிமுத்தாறில் 150.60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அகஸ்தியர் அருவியே தெரியாத அளவுக்கு வெள்ளம் பாய்கிறது. பாபநாசம் கோவில் படித்துறை, தலையணை ஆகிய இடங்களிலும் அதிகளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாபநாசம் மலைப்பகுதிக்கு எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தில் 18.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
பேச்சிப்பாறை நீர்மட்டம் உயர்வு
குமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக மயிலாடியில் 75.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர் மழையால் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரம் குளங்கள் நிரம்பி உள்ளன. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45 அடியாக உள்ளது. அணைக்கு நேற்று காலை 3 ஆயிரத்து 43 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 1000 கனஅடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. குழித்துறை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 71.60 அடி தண்ணீர் உள்ளது.
திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் திற்பரப்பு அருவியில் அதிக அளவு தண்ணீர் கொட்டுகிறது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மழை காரணமாக கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அனைத்து அணைகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வனத்துறையினரோடு சேர்ந்து போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மூல வைகையாற்றில் வெள்ளம்
ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் நீடிக்கிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 104.98 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2036 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.தேனி மாவட்டத்தில் மூல வைகையாறு பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணையில் இருந்து மதுரை மாவட்ட குடிநீர் மற்றும் பாசனத்துக்காக 2090 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மஞ்சளாறு அணை நீர் மட்டம் 51.40 அடியாகவும், சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 124.54 அடியாகவும் உள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையின் மொத்த நீர் மட்டம் 60அடி. தற்போது அணையில் 47.79 அடி தண்ணீர் உள்ளது. அமராவதி அணையின் மொத்த நீர் மட்டம் 90 அடி. தற்போது 65.52 அடி தண்ணீர் உள்ளது.
நிரம்பியது வீராணம் ஏரி
நீலகிரி மாவட்டத்தில் எமரால்டு, பார்சன் வேலி, முக்குருத்தி, குந்தா ஆகிய அணைகளும் நிரம்பி உள்ளன. இதே போல தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளன. கடலூர் மாவட்டத்தில் 8 ஆயிரம் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அங்கு வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீராணம் ஏரி நிரம்பி வழிகிறது. இதனால் ஏரியை சுற்றியுள்ள 25 கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அறந்தாங்கியில் 100 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்திலும் தொடர் மழையால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. வேலூரில் பெய்த மழையால் சாத்தனூர் அணை நிரம்பி வருகிறது. புதுவையிலும் தொடர் மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. அங்குள்ள பெரிய ஏரிகளான ஊசுட்டேரி, பாவூர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 11 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
தங்கம் விலை மேலும் சரிவு
16 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.72,800-க்கு விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-07-2025.
16 Jul 2025 -
விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிக்கும் 'தலைவன் தலைவி'
16 Jul 2025சத்யஜோதி பிலிம்ஸ் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடித்திருக்கும்
-
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள் வெளியீடு
16 Jul 2025மயிலாடுதுறை, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
ஆகஸ்ட் 25-ல் மதுரையில் நடைபெறுகிறது: த.வெ.க.வின் 2-வது மாநில மாநாடு: விஜய் அறிவிப்பு
16 Jul 2025சென்னை, தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என அக்கட்சியின் தலைவர் வ
-
டிஜே அருணாச்சலம் நடிக்கும் உசுரே
16 Jul 2025ஸ்ரீகிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் உசுரே படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
-
ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்தால்... இந்தியா, சீனா, பிரேசிலுக்கு நேட்டோ கடும் எச்சரிக்கை
16 Jul 2025வாஷிங்டன், பிரேசில், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என்று நேட்டோ பொதுச் செயலாளர் ம
-
ரூ.2.4 கோடிக்கு ஆன்லைன் ஷாப்பிங் செய்த மூதாட்டி..!
16 Jul 2025பீஜிங், சீனாவின் ஜியாடிங் பகுதியை சேர்ந்த 66 வயது மூதாட்டி ஒருவர் ஆன்லைனில் மூலம் ரூ.2.4 கோடிக்கு ஷாப்பிங் செய்தார்.
-
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து முதல்வர் பினராயி கேரளா திரும்பினார்
16 Jul 2025திருவனந்தபுரம் : அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து கேரளா முதல்வர்பினராய் விஜயன் திரும்பினார்.
-
சென்னை, தேனி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
16 Jul 2025சென்னை, தமிழகத்தில் சென்னை,நீலகிரி, தேனி, தென்காசி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவம்: சுபான்ஷு சுக்லா பதிவு
16 Jul 2025வாஷிங்டன், சர்வதேச விண்வெளி நிலையத்தில் மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, என் மீதும், என் பண
-
மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்பு: ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற நடிகர் கமல்ஹாசன்
16 Jul 2025சென்னை, மாநிலங்களவை எம்.பியாக வரும் 25-ம் தேதி பதவியேற்கவுள்ள நிலையில், மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட சான்றிதழை சக நடிகரும், தனது நண்பருமான ரஜினிகாந்திடம்
-
கூட்டணியைப் பொருத்தவரை நான் சொல்வதே இறுதியானது: எடப்பாடி பழனிசாமி விளக்கம்
16 Jul 2025சிதம்பரம், தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொல்லவில்லை. எங்கள் கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்றுதான் சொன்னார்.
-
பாட்னா ஏர்போர்ட்டில் பரபரப்பு: நொடி பொழுதில் விபத்தில் இருந்து தப்பிய விமானம்
16 Jul 2025பாட்னா : பாட்னாவில் விபத்தில் இருந்து தப்பிய இண்டிகோ விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
-
டிராகன் நூறாவது நாள் வெற்றி விழா
16 Jul 2025ஏ.ஜி.எஸ். தயாரிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், நடிப்பில் வெளியான படம் டிராகன் திரைப்படம் நூறாவது நாளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
-
உருட்டு உருட்டு' பட இசை வெளியீட்டு விழா
16 Jul 2025ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ், சாய் காவியா மற்றும் சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில் பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், உருவாகியுள்ள படம் உருட
-
AI தொழில்நுட்பத்தில் பன் பட்டர் ஜாம்
16 Jul 2025பன் பட்டர் ஜாம் படத்தின் Veo3 AI எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளார். Veo3 AI என்பது, இயற்கையான தோற்றம் மற்றும் சினிமா தரம் கொண்ட வீடியோக்களை உருவாக்க
-
ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தல்
16 Jul 2025தெஹ்ரான் : அத்தியாவசியமற்ற ஈரான் பயணத்தை தவிர்க்குமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
-
வள்ளிமலை வேலன் இசை வெளியீட்டு விழா
16 Jul 2025எம் என் ஆர் பிக்சர்ஸ், எம் நாகரத்தினம் தயாரித்து நடிக்க, எஸ் மோகன் எழுதி இயக்க, கிராமத்துக் கதைக்களத்தில் கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள படம், வள்ளிமலை வேலன்.
-
ஜென்ம நட்சத்திரம் இசை வெளியீட்டு விழா
16 Jul 2025அமோகம் ஸ்டுடியோஸ் விஜயன் தயாரிப்பில் மணிவர்மன் இயக்கத்தில் தமன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’ஜென்ம நட்சத்திரம்.
-
துருவ் சர்ஜா நடிக்கும் 'கே.டி-தி டெவில்'
16 Jul 2025துருவ் சர்ஜா நடிப்பில் இயக்குநர் பிரேம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கே.டி.
-
குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தல்
16 Jul 2025சென்னை : குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
ஐ.நா., பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல்; நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தல்
16 Jul 2025நியூயார்க் : ஐ.நா., படையினர் தாக்கப்படும் சம்பவங்களில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா.,வில் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ்
-
'ஃப்ரீடம்' திரைவிமர்சனம்
16 Jul 2025சசிகுமார் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் 1991 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகத்துக்கு வருகிறார்கள். அவர்கள் ராமேஸ்வரம் முகாமில் தங்க வைக்கப்படுகிறார்கள்.
-
மீனாட்சி ஆனந்த் தயாரிக்கும் 'டிரெண்டிங்'
16 Jul 2025ராம் ஃபிலிம் பேக்டரி சார்பில், தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் தயாரிப்பில், சிவராஜ் இயக்கத்தில், கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’டிரெண்டிங்’.