முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று முதல் ராகுல் காந்தி பிரச்சாரம்

ஞாயிற்றுக்கிழமை, 1 டிசம்பர் 2019      இந்தியா
Image Unavailable

ராஞ்சி : ஜார்க்கண்ட்டில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பங்கேற்று பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

ஐந்து கட்ட வாக்குப்பதிவின் முதல் கட்டத் தேர்தல் நேற்று நடைபெற்றது. மீதமுள்ள நான்கு கட்டத் தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட, ராகுல் காந்தி இன்று ஜார்க்கண்ட் வருகிறார். அங்கு இன்று மதியம் 1.30 மணிக்கு சிம்டேகாவில் கல்லூரி சாலையில் உள்ள பஸார்டண்ட் மைதானத்தில் நடைபெறும் பேரணியில் அவர் பேசுகிறார். நான்கு கட்டங்களாக நடைபெறும் தேர்தலுக்காக ஒவ்வொரு கட்டத் தொகுதிகளுக்காகவும் தலா ஒருநாள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 7, 12, 16 மற்றும் 20 ஆகிய தேதிகளில் வெவ்வேறு முக்கிய நகரங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஈடுபடுவார் என கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து