முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு துறைகளுக்காக கட்டப்பட்டுள்ள புதிய அலுவலக கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 14 ஜனவரி 2020      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 14 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக‚ கூடுதல் கட்டிடம் மற்றும் இதர அரசுˆ துறைகளுக்கான அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் 12 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆவடி, ஸ்ரீமுஷ்ணம், கும்பகோணம், பாபநாசம், மானூர் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்புகள் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 11.7.2017 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் இந்து அறநிலையத் துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, பட்டு வளர்ச்சித் துறை, தமிழ்நாடு தொழில் முதலீட்டு‚ கழக கிளை அலுவலகம், கல்வித் துறை அலுவலகங்கள், பால்வளத் துறை,  குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம், கால்நடை பராமரிப்புத் துறை அலுவலகம் மற்றும் உள்ளாட்சி நிதித்தணிக்கை உதவி இயக்குநர் அலுவலகம் ஆகிய அரசுத் துறை அலுவலகங்கள் பல்வேறு இடங்களில் வாடகை கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. மேற்கண்ட அலுவலகங்கள் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திலேயே செயல்பட கூடுதல் கட்டிடங்கள் கட்டப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 7,122 சதுர மீட்டர் கட்டிட பரப்பளவில், 14 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக‚ கூடுதல் கட்டிடம் மற்றும் இதர அரசுˆ துறைகளுக்கான அலுவலகக் கட்டிடங்கள் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 

மேலும், திருவள்ளூர் மாவட்டம் - ஆவடி, கடலூர் மாவட்டம் - ஸ்ரீமுஷ்ணம், தஞ்சாவூர் மாவட்டம் - கும்பகோணம் மற்றும் பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம் - மானூர் ஆகிய இடங்களில் 12 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடங்கள் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்புகளை  முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில்,  அமைச்சர்கள் டாக்டர் வி.சரோஜா, ஆர்.பி. உதயகுமார், பா. பென்ஜமின், க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் க.சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிருவாக ஆணையர் / முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து