முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆயிரம் போட்டிகளில் விளையாடிய கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனையும் படைத்தார்

திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2020      விளையாட்டு
Image Unavailable

ஸ்பால் அணிக்கெதிராக விளையாடியதன் மூலம் ஆயிரமாவது போட்டியில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

கால்பந்து விளையாட்டில் ஜாம்பவானாக திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் இத்தாலியில் உள்ள யுவென்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற ‘செரி ஏ’ லீக்கில் ஸ்பால் அணிக்கெதிராக களம் இறங்கினார். இந்த போட்டியில் யுவான்டஸ் 2-1 என வெற்றி பெற்றது.

39-வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார். இந்த போட்டி அவருக்கு ஆயிரமாவது போட்டியாகும். மேலும் இந்த போட்டியில் கோல் அடித்ததன் மூலம் செர்ரி ஏ லீக்கில் தொடர்ச்சியாக 11 போட்டிகளில் கோல் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்த சீசனில் இதுவரை 21 கோல்கள் அடித்துள்ளார். இதற்கு முன் கடந்த சீசனில் குவாகிலியேரெல்லா (சம்ப்டோரியா), பாடிஸ்டுடா (பியோரென்டினா கிளப் 1994-95) ஆகியோர் தொடர்ச்சியாக 11 போட்டிகளில் கோல் அடித்துள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து