முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரோனா பாதிப்பு: ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 514 பேர் பலி

புதன்கிழமை, 25 மார்ச் 2020      உலகம்
Image Unavailable

ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சுமார் 514 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்  உலகம் முழுவதும் சுமார்  195 நாடுகளில் பரவியுள்ளது.  ஐரோப்பிய நாடுகளில் கடும் தாக்கத்தை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.  ஐரோப்பிய நாடுகளில் இத்தாலிக்கு அடுத்த படியாக ஸ்பெயினில் தான் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாகக் காணப்படுகிறது. ஸ்பெயினில் இதுவரை 40 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ஒட்டுமொத்தமாக கொரோனா காரணமாக 2,696 பேர் ஸ்பெயினில் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக, ஏப்ரல் 11-ம் தேதி வரை ஸ்பெயினில் நெருக்கடி நிலை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து