முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 7-ம் தேதி முதல் ஒரு மாதம் ஊரடங்கு: சிங்கப்பூர் பிரதமர்

வெள்ளிக்கிழமை, 3 ஏப்ரல் 2020      உலகம்
Image Unavailable

சிங்கப்பூரில் ஒரு மாதம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பிரதமர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உள்ள நிலையில் தடுப்பு நடவடிக்கையாக வரும் 7-ம் தேதி முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என அந்நாட்டின் பிரதமர் லீ சீன் லூங் அறிவித்து உள்ளார். அதனால் அத்தியாவசிய சேவைகள் மற்றும் முக்கிய பொருளாதார பிரிவுகளை தவிர்த்து பெருமளவிலான பணியிடங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டில் கொரோனா பாதிப்புக்கு 5 பேர் பலியாகி உள்ளனர்.  1,049 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. புதிய சமூக இடைவெளி விதிகளை மீறுவோர்கள் மீது 6 மாத சிறை தண்டனையும் மற்றும் 10 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் அபராத தொகையும் விதிக்கப்படும்.  அதனால் பொதுமக்கள் அரசின் விதிகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து