எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : இன்று 5-ம் ஆண்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அம்மாவின் அரசு அடியெடுத்து வைக்கிறது. எம்.ஜி.ஆர். அம்மா ஆகியோரை போல தொடர் வெற்றி பெற சூளுரைத்து மக்கள் பணியாற்றுவோம் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
நம் இதயத்தில் என்றும் வாழும் பாசமிகு தாய் அம்மா, தொடர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பொன்னான நாளின், நான்காம் ஆண்டு நிறைவுற்று 23.5.2020-ல் ஐந்தாம் ஆண்டு தொடங்குகிறது. அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர். நிகழ்த்திய சாதனையைப் போல, தொடர்ந்து ஆட்சியில் நீடிக்கும் அரசாக, 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்றப் பேரவைப் பொதுத் தேர்தலில் தன்னந்தனியாக களம் கண்டு, தொடர் வெற்றி மூலம் மீண்டும் அ.தி.மு.க. அரசை அமைத்த மகத்தான சாதனையாளர் நம் அம்மா.
பற்றற்ற துறவியின் உள்ளத்தோடும், என் கடன் பணி செய்து கிடப்பதே என்ற மக்கள் தொண்டின் இலக்கணத்தை இதயத்தில் சுமந்தவாறும், தமது வாழ்வின் இறுதி மூச்சு வரை தலைமைப் பண்புகளின் சிகரமாகவும், தாய்மை உள்ளத்தின் வடிவமாகவும் வாழ்ந்து மறைந்தவர் நம் அம்மா. தன் உடல்நலம் பெரிதும் பாதிக்கப்பட்டதை உணர்ந்த நிலையிலும் கண் துஞ்சாது கடமையாற்றி, ஓய்வறியாது உழைத்து, தமிழ் நாடு முழுவதும் சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்டு, மக்களின் பேரன்பைப் பெற்று, அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்தார் நம் அம்மா.
தனது அரசியல் ஆசான் எம்.ஜி.ஆர். உருவாக்கிய மாபெரும் மக்கள் இயக்கமாம் அ.தி.மு.க. இன்னும் நூறாண்டுகள் ஆனாலும் ஆட்சிப் பொறுப்பில் இருந்து மக்களுக்குத் தொண்டாற்றும்; ஆயிரம் தலைமுறை செழிக்க வந்த பேரியக்கம் அ.தி.மு.க. என்பதை தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் சூளுரையாகவும், தீர்க்கத்தரிசனமாகவும் அம்மா முழங்கியது நம் செவிகளில் இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
கட்சியின் கொள்கைகளுக்கு ஏற்பவும், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளின்படியும் ஏழை, எளியோர், உழைக்கும் மக்கள், தாய்மார்கள் நலன் காத்திட எண்ணற்ற திட்டங்களை அம்மாவின் ஆட்சியில் தமிழகம் கண்டது. துறைதோறும் சாதனைகள், நாட்டிற்கே வழிகாட்டும் மக்கள் நலப் பணிகள், மாநிலத்தின் உரிமைகளை நிலைநாட்டுவதில் அயராத போராட்டம், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு ஓடோடிச் சென்று உதவுகின்ற இன உணர்வு என்பனவெல்லாம் அம்மாவின் வரலாற்றுச் சாதனைகள்.
மங்காத புகழோடும், முதல்வர் என்ற சிறப்போடும் அம்மா மறைந்த பிறகு அ.தி.மு.க.வும், அவர் அமைத்துத் தந்த அரசும் தமிழ் நாட்டு மக்களின் காவல் அரணாகவும், உண்மை ஊழியனாகவும் தொடர்ந்து நற்பணி ஆற்றி வருவது நம் அனைவருக்கும் பெருமையும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. ஒன்றரைக் கோடி உறுப்பினர்களின் ஒத்துழைப்பாலும், தமிழ் நாட்டு மக்களின் பேராதரவாலும், அ.தி.மு.க.வையும், கழக அரசையும் அம்மாவின் பூரண நல்லாசியோடு வழிநடத்தி வருகிறோம். அம்மாவின் வழியில் நாம் செயல்படுகிறோம்.
அதன் விளைவாக, மத்திய அரசின் நல் ஆளுமைத் திறனுக்கான தரவரிசையில் தமிழ் நாடு முதலிடம். ரூபாய் 11,250 கோடியில் காவேரி மற்றும் அதன் கிளை ஆறுகள் மாசுபடுவதிலிருந்து முழுமையாக மீட்டெடுக்க `நடந்தாய் வாழி காவேரி’ திட்டம். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தை நாட்டிலேயே திறம்பட செயல்படுத்திய மாநிலம் என்று மத்திய அரசு, அம்மாவின் அரசைப் பாராட்டியது. வேளாண்மை உற்பத்தியில் அம்மாவின் அரசு, மத்திய அரசு வேளாண் துறையின் `கிருஷி கர்மான்’ விருதினை தொடர்ந்து 5 முறை பெற்றுள்ளது. உள்ளாட்சி நிர்வாகப் பணிகளில் அம்மாவின் அரசு, திறம்பட செயல்பட்டு மத்திய அரசின் பாராட்டினைப் பெற்றிருக்கிறது.
கிராமப்புற தூய்மையில் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக அம்மாவின் அரசு, பாரதப் பிரதமரிடம் இருந்து விருதினைப் பெற்றிருக்கிறது. மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை, உயர்கல்வித் துறை, போக்குவரத்துத் துறை, கூட்டுறவுத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, இந்து சமய அறநிலையத் துறை, மீன்வளத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த செயல்பாடு காரணமாக மத்திய அரசின் சிறப்பு விருதினைப் பெற்றிருக்கிறது.
முதல்வர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் மூலம் 8,835 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் ஈர்ப்பு. துணை முதல்வர் மேற்கொண்ட அமெரிக்க பயணத்தின் மூலம், தமிழ் நாட்டில் குறைந்த செலவில் வீடுகளை கட்டித் தரும் திட்டத்தில் G.S.A. என்ற அமெரிக்க நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 750 கோடி ரூபாய்) முதலீடு செய்யவும், தமிழ் நாடு வீட்டு வசதித் துறைக்கென 5,000/- கோடி ரூபாய் கடன் உதவியை உலக வங்கி அளித்திடவும் வகை செய்யப்பட்டிருக்கிறது. பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக, காவேரி டெல்டா பகுதி அறிவிக்கப்பட்டு தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம் காப்பாற்றப்பட்டுள்ளது.
அம்மா மேற்கொண்ட பெருமுயற்சிகளின் காரணமாக, இப்பொழுது கரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதே போல், பெருந்துறையில் செயல்பட்டு வந்த IRT மருத்துவக் கல்லூரியானது அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. அம்மா அமைத்துத் தந்த அ.தி.மு.க. அரசால், மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கும் முயற்சியில், தமிழ் நாட்டில் புதிதாக 11 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட அனுமதி பெறப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
நிர்வாக வசதிக்காக 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் பண்பாட்டுப் பெருமை கூறும் ஜல்லிக்கட்டு, அம்மாவின் அரசு மேற்கொண்ட அயரா முயற்சியின் காரணமாக ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தடையின்றி நடத்தப்படுகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. காவிரி - கோதாவரி நதிகளை இணைப்பதன் மூலம் தமிழ் நாட்டிற்கு 200 டி.எம்.சி. தண்ணீர் பெற்று அதனை தென் தமிழகத்திற்கும் கொண்டு செல்ல முயற்சிகள் தொடங்கப்பட்டு விட்டன. முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் மூலம் 5,11,866 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு, தகுதியானவைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அத்திக்கடவு-அவினாசி நீர்ப் பாசனத் திட்டம்; மேட்டூர் அணையில் இருந்து சரபங்கா ஆற்றுக்கும், சேலம் மாவட்டத்தில் உள்ள 100 ஏரிகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் ஆகியவற்றுக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தமிழ் நாட்டின் நீர் நிலைகளைப் பாதுகாக்கும் குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. உலக முதலீட்டாளர்களை தமிழ் நாட்டில் முதலீடு செய்யத் தூண்டும் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு 3,00,431 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. 2.05 கோடி குடும்பங்களுக்கு, பொங்கல் பரிசுப் பொருட்களுடன் 1,000/- ரூபாய் கடந்த இரண்டு ஆண்டுகளாக வழங்கப்பட்டிருக்கிறது. மகளிர் பாதுகாப்பிற்கு ``காவலன் செயலி’’ அறிமுகப்படுத்தியது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைத் தொழிலாளர்கள் சுமார் 80 லட்சம் குடும்பங்களுக்கு தலா 2,000 ரூபாய் ரொக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா என்னும் நோய்த் தொற்றில் இருந்து மக்களைக் காப்பாற்றத் தேவையான மருத்துவப் பணிகளில் அம்மாவின் அரசு முழு மூச்சாக இறங்கி பணியாற்றிக் கொண்டிருக்கிறது. கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அம்மா உணவகங்கள் மூலம் சமைத்த, சத்தான உணவு, ரேஷன் அட்டை உள்ள குடும்பங்களுக்கு 1,000 ரூபாய் நிவாரணத் தொகை, இரண்டு முறை கூடுதலாக அரிசி, மளிகைப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
மேலும், பல்வேறு தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு தலா 2,000/- ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது மட்டுமல்லாமல், வாரியங்களில் உறுப்பினர்கள் அல்லாத தொழிலாளர்களுக்கும் தலா 2,000/- ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. பெரும் புயல்கள், வெள்ளம், வறட்சி என்று இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்ட நேரத்தில் எல்லாம் மக்களின் துயர் துடைத்து, மறுவாழ்வு அளிக்க நாம் அயராது உழைத்தோம். தமிழ் நாடு முழுவதும் தங்கள் சொந்த செலவில் பல லட்சம் குடும்பங்களுக்கு அ.தி.மு.க.வினர் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பணிகள் எல்லாம், மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற அ.தி.மு.க.வின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு சில எடுத்துக்காட்டுகளேயாகும். இன்னும் பட்டியலிட அம்மா அரசின் சாதனைகள் ஏராளமாக அணிவகுத்து நிற்கின்றன. நாம் செய்திட்ட பணிகள் ஏராளம். இன்னும் ஆற்ற வேண்டிய பணிகள் இருப்பினும், அவற்றை செய்து முடிக்கும் ஆற்றலும் நமக்கு உண்டு. ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அம்மாவின் அரசு தமிழ் நாட்டு உரிமைகளைக் காப்பதிலும், தமிழ் நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும், அம்மாவின் வழியிலேயே திறம்பட செயலாற்றும் என்பதை நாங்கள் உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.
அம்மா குறிப்பிட்டதைப் போல, அ.தி.மு.க. என்னும் ஆலமரம் ஆயிரங்காலத்துப் பயிராக செழித்து ஓங்கும். மக்கள் அனைவரும் இளைப்பாறும் வண்ணம் `பழுத்த பயன் மரமாகவும், நீர் நிறைந்த ஊருணியாகவும் அ.தி.மு.க. என்னும் தியாகச் சுடர் ஒளிர்ந்து கொண்டே இருக்கும். தமிழ் நாட்டு மக்கள், அ.தி.மு.க. அரசை தங்களின் நலன் காக்கும் அரசாக போற்றுகின்றனர். எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோர் காட்டிய பாதையில் நடைபெறும் அ.தி.மு.க அரசே தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருந்திட வேண்டும் என்று விரும்புகின்றனர்.
நம் இருபெரும் தலைவர்களின் உண்மைத் தொண்டர்களாகிய கட்சியின் உடன்பிறப்புகள் அனைவரும் மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பணியாற்றி, கட்சிக்கும், அரசுக்கும் புகழ் சேர்ப்போம். எம்.ஜி.ஆர். அம்மா ஆகியோரைப் போல தொடர் வெற்றிபெற சூளுரைத்து மக்கள் பணியாற்றுவோம். நேற்றும், இன்றும், நாளையும் அ.தி.மு.க.அரசே மக்கள் அரசாக தொடர்வதை உறுதி செய்திட அயராது உழைப்போம். இவ்வாறு அந்த அறிக்கையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.